குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கையில் பரவும் புதிய வகை மரபணு நுண்ணி ,நுண்மி கொரோனா!

25,04.2021.....இலங்கையில் பரவும் கோவிட் வைரசின் புதிய மரபணு தொற்றியவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே நியுமோனியா நிலைக்கு சென்று விடுவதாக சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றின் ஊடாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய மரபணுவில் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். அதற்கயை கோவிட்டின் புதிய மரபணு, முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையுடன் ஒப்பிடும் போது மிக வேகமாக பரவுவதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிப்பட்ட கோவிட் மரபணு போன்று இல்லாமல் புதிய மரபணு காற்றின் ஊடாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நுண்மி(வைரசு) தொற்றுக்குள்ளான நபர்கள் முகக் கவசமின்றி தங்கள் சூழலில் வெளியேற்றும் (வைரசு) ஒன்றரை மணித்தியாலங்கள் அங்கு நீடிக்கும். அந்த காலப்பகுதியில் அந்த இடத்திற்கு முகக் கவசமின்றி வரும் நபருக்கு அந்த காலப்பகுதியில் நுண்மி(வைரசு) தொற்றும் ஆபத்து அதிகமாக உள்ளதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காற்றில் கோவிட் பரவும் என்பதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளமையினால், முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என சிறியவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் ஒருவர் அல்லது இருவருக்கு தொற்றக்கூடும், எனினும் புதிதாக பரவியுள்ள கொரோனா குறைந்த பட்சம் 5 பேருக்காவது தொற்ற கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் தொற்றியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் காணப்படும், அதற்கு முன்னர் ஈரல் பாதிக்கப்படும். எனினும் புதிய கோவிட் நியுமோனியா நிலைமைக்கு செல்லும் வரை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.