குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிற்சர்லாந்தில் மார்ச் 1 முதல் பூட்டுதல்களைப் படிபடியாகத் திறக்க கூட்டாட்சி அரசு முடிவு !

17.02.2021....சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளை, படிப்படியாக தளர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 1 முதல், தனியார் வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் 15 பேர்வரை கலந்து கொள்ள மீண்டும் அனுமதிக்கப்படும்.

இன்று தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டாட்சி அரசின் உறுப்பினர்கள் இதனை அறிவித்துள்ளார்கள். செய்தியாளர் சந்திப்பினை ஆரம்பித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் கை பார்மலின் பேசுகையில், " சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியை நாங்கள் இப்போது காண்கிறோம், ஆனால் சுரங்கப்பாதை இன்னும் மிக நீளமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் தொற்றுநோயியல் பரிணாமத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன." என்றார்.

இன்றைய அறிவிப்பின்படி, மார்ச் 1 முதல் ஒரு சில நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமாக மீண்டும் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஓரளவுக்கு மட்டுமே தளர்த்தல் நடவடிக்கைகள் இருக்கும். கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள், உயிரியல் பூங்காக்களின் வெளிப்புற பகுதிகள், தாவரவியல் பூங்காக்கள், விளையாட்டு மற்றும் ஓய்வு வசதிகள் மீண்டும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும் அதேவேளை உணவகங்களைத் திறக்க இன்னமும் அனுமதியில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.