குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

சுவிற்சர்லாந்தில் பூட்டுதல் நீட்டிப்பு தவிர்க்க முடியாதா ?

13.02.2021 ....சுவிற்சர்லாந்தின் கொரோனா தீய நுண்ணி(வைரசு) பாதுகாப்பு நடவடிக்கைகள் பிப்ரவரி 28 ந் திகதியின் பின்னரும் நீட்டிக்கப்படுமா? எனும் சுவிசு ஊடகங்களின் கேள்விக்கு, சுகாதார மந்திரி அலைன் பெர்செட் பூட்டுதல் நீட்டிக்கப்படுவது மட்டுமல்லாமல், பலவிதமான கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் 'கோடைகாலத்தை காப்பாற்ற தீயநுண்ணி (கொரோனா வைரசு) நடவடிக்கைகளை கடுமையாக்க வாய்ப்புள்ளது' என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பெரும்பகுதிகளில், வைரசு தொற்று வீதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும் இது தேவையாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, வெள்ளிக்கிழமை, கூட்டாட்சி உறுப்பினர், அலைன் பெர்செட் தற்போதுள்ள சில நடவடிக்கைகளையாவது தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதாக அறிய வருகிறது.

அடுத்த வாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும், இது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளது. எல்லா நடவடிக்கைகளும் தளர்த்தப்படாது எனினும், சில நடைமுறைகள் எளிதாக்கப்படக்கூடும் எனத் தெரிவித்தாலும், அவை எவையெனத் தெரிவிக்க பெர்செட் மறுத்துவிட்டார்.

“சுவிசு கூட்டாட்சி அரசு, நடவடிக்கைகள் மீதான மக்களின் விரக்தியைப் புரிந்துகொள்கிறது. நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு அரசு விரும்புகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. எவ்வாறாயினும், விரைவில் பூட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக விதிகளை கடைபிடிக்க வேண்டும்." என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.