06.01.2021........ தூய தமிழில் பெயர் பலகை வைக்க முதல்வர் மணிவண்ணன் ஆணை! வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கை க்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம் போரின் பின்னரான வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள்.
குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா பைக்கற்றுக்களை வாங்கி நுகர்கிறோம். தமிழ்நாட்டில் பாலை அரச நிறுவனமான ஆவினும் ஏனைய தனியார் நிறுவனங்களும் காலை 6 மணிக்கு முன்னமே மக்களின் வீட்டு வாசல்களில் சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். நாங்கள் ஏன் எம் மண்ணிலிருந்து உற்பத்தியாகும் பாலை எம் சமூகத்துக்கு கிடைக்க கூடியதாக மாற்றி அமைக்க கூடாது. எங்கே தவறிழைக்கிறோம்?
இலங்கை ஒரு சிறிய தீவு. சுற்றிலும் கடல். பல நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எங்களுக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்களை பிடித்து செல்கிறார்கள். ஆனால், இங்கே தகரத்திலடைத்த மீனும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
இங்கிருக்கும் கல்வியும் கற்றவர் ,அரசியல்வாதிகள் குமுகாய எண்ணமில்லாது கம்பரையும் இராமரையும் திரிப்பித்திருப்பி சத்தியெடுக்கினம். திருவாசக மண்டபங்கள் இதனையும் எண்ணி பரப்புரைகள் செய்யவேணும்.
யாழ் மாநரசபைக்குட்பட்ட வியாபார நிலையங்களுக்கு தூய தமிழில் பெயர் பலகை வைக்க முதல்வர் மணிவண்ணன் அவர்கள் வணிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டு தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் யாழ் மண்ணிணை சிறப்பிக்க வேண்டும்