இன்றையநாள் கடும் வெப்பத்துடன் வெய்யில் எறித்த நிலையில் பிற்பகல் வேளையில் திடீரென்று கனதியான மேகக் கூட்டங்கள் யாழ் மாவட்டத்தை மூடியுள்ளன. இவை பூதங்கள் போல காணப்பட்டதாக ஒருவர் வர்ணித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ’சோ’வென பெருமழை கொட்டத்தொடங்கியது.
இதேவேளை யாழ். மாநகர எல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களின் தாழ் நிலங்களும் அனர்த்த நிலையை எட்டியிருக்கின்றன.
தற்போது பெய்யும் மழை நள்ளிரவு வரை நீடிக்குமாயின் தாழ் நிலங்களில் உள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்பதால் விரைவான மீட்பு நடவடிக்கை அவசியம் என கூறப்பட்டுள்ளது.