செவ்வாய் கோளின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் செவ்வாய் கோள் கதிரவனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பூமிக்கும் செவ்வாய் கோளிற்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40கோடியே 13லட்சம் கி.மீ ஆகும். இதில் இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.
எசு.பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனி அந்த பிரச்சனை இருக்காது.! அட்டகாசமான திட்டம் அறிமுகம்.! வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது என்றும். அதன்பிறகு இன்றும் 13 ஆண்டுகள் கழித்துதான் இந்த நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு குறித்து இந்திய கோள்கள் சமூகத்தின் இயக்குனர் சிறிரகுநந்தன் குமார் கூறியது என்னவென்றால், வருகிற 14-ம் தேதி பிற்பகல் 2.56மணிக்கு செவ்வாய் கோளும், கதிரவனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும். நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், கதிரவனும் ஒரே நேர்கோட்டில் தெரியும்.
மேலும் எந்தக்கோளும் கதிரவனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில்,நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது,செவ்வாய் கோள் பெரிதாகவும், அதிக ஒளியடனும் , நெருக்கமாகவும் தெரியும். பாசுவோர்டு அமைக்கும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்! இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கோளை காணலாம் என்றும், குறிப்பாக மிக ஒளியாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதுவரை காணலாம். ஏனெனில் நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால்வெளிச்சமும் அளவும் குறையும்.