உந்துருளியில்(மோட்டார் சைக்கிளில்) இருவர் பயணித்த நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை உறவினரும் அப்பகுதி மக்களும் அகற்ற விடாது, நீதவான் சம்பவ இடத்திற்கு வந்தால் மாத்திரமே அகற்ற விடுவதாகவும் தெரிவித்த நிலையில் சடலம் விபத்து நடந்த இடத்திலேயேகாணப்படுகிறது.
குறித்த விபத்தில் 42 வயதுடைய பூநகரி யெயபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் தவரஞ்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை 40 வயதுடைய செல்லத்துரை சந்திரகுமார் என்பவர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.