இவ்வாறு வனத்தின் வளர்ச்சியில் யானைகள் முக்கிய பங்களிக்கின்றன.
வனம் இல்லையேல் மழையில்லை,
மழையில்லையேல் நீர் இல்லை,
நீர் இல்லையேல் நாம் இல்லை.
எனவே, நமது சுயநலத்திற்காகவாவது யானைகள் நமக்குத் தேவை.
காடுகள் அடர்த்தியாக யானைகளே காரணம்
மற்ற விலங்குகளை விட யானைகள் வலசை செல்லும் பரப்பளவு மிக அதிகம்.
யானைகளின் எச்சங்கள் மூலமாக விதைகள் பரவுகின்றன.
ஊருக்குள் யானை புகுந்தது என்று செய்திகளில் வருகின்றது,
அது தவறு நாம்தான் அவர்கள் இருப்பிடங்களிளும்,
வழித்தடங்களிளும் ஊர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்
யானைகளின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது... தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அதன் மொத்த எடையுடன் அதன் மீது வைத்தால் நன்றாக உள்ளே நுழையும்,அதன் பின்னால் அவைகளால் நடக்க முடியாது...
இரண்டு நாட்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் சதையை துளைக்கும், நாள் ஒன்றுக்கு 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்டு, 50 கிமி நடந்து வாழ வேண்டிய உயிர் இப்படி 5 நாட்கள் நின்றால் வேகமாக உடலிழைத்து துதிக்கையை ஊன்றி, உடல் நடுங்கி உயிரிழக்கும்...
நாம் உல்லாசமாக காடுகளுக்கு சென்று மது அருந்திவிட்டு உடைத்துப்போடும் ஒரு பீர் பாட்டில் அந்த காட்டையே நம்பி வாழும் இறைவனின் படைப்பான ஒரு யானையின் உயிரையே காவு வாங்கும்...
குறிப்பு
இந்த வீடியோவில் குட்டி யானை
சறுக்கி விளையாடுகின்றதே,,,
இங்கு உடைந்த மது பாட்டில்கள்
இருந்தால் என்னாகும்னு
நினைத்து பாருங்க. ????????
இயற்கையின் , படைப்பில்.
மனிதர்களுக்கு
"ஆறரிவு" கொடுத்ததன் காரணம்...⁉️
இயற்கையை பாதுகாக்கவே