குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

விஞ்ஞானி ஐன்சு(ஸ்)டீன் பற்றி ஒரு குட்டிக்கதையும்,ஐன்சுடீனின் வாழ்க்கை வரலாறும்!

27.05.2020..... நாம் அனைவரும் அறிவியலாளர்கள் பற்றியும் விஞ்ஞானிகளை பற்றியும் அறிந்து வைத்துள் ளோம். அதில் மிகவும் ஒரு பிரபலமான விஞ்ஞானி ஐன்சு(ஸ்)டீன். அவர் பற்றி  ஒரு கதை.அதாவது அவர் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர். அதுமட்டுமின்றி அவர் அதிகளவான விஞ்ஞான தகவல் களையும்  கூறியுள்ளார். அப்பொழுது ஐன்சு(ஸ்)டீன் ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்புகளினை   நிகழ்த்து ம்போது அவருக்கு கெளரவிப்பு வழங்கப்படும்.

 

ஆகவே இவர் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பிற்பாடும்  இவருக்கு கௌரவிப்பு நடைபெறும். ஆகவே இவரும்  ஒவ்வொரு கௌரவிப்பு நிகழ்விற்கும் சென்று வருவார்.ஆனால் ஒருநாள் வழமைபோன்று ஒரு புதிய நாட்டிற்கு  கௌரவிப்பு நிகழ்விற்கு செல்வதற்கு ஆயத்தமானார்.

அங்கே ஐன்சு(ஸ்)டீனை தெரியாதவர்கள்  அந்த விழாவினை சிறப்பாக செய்துகொண்டிருந்தார்கள்  அதேநேரம் ஐன்சு(ஸ்)டீனை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இவருடைய சாரதி அதாவது இவரின் வேலைக்காரன் கேட்டான் இவரைப் பார்த்து நீங்கள் ஒவ்வொரு விழாவிலும் கலந்து கொள்ளும் போது உங்களுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று கேட்க, அதற்கு ஐன்சு(ஸ்)டீன் இன்றைய விழாவில் நான் சாரதியாகவும்  நீ ஐன்சு(ஸ்)டீன்ஆகவும் செல்வோம்.  எப்படி இருக்கிறது மனது என்று நீயே அறிந்து கொள் என்று சொல்லிவிட்டு சென்றார்கள். சென்றவுடன் ஐன்சு(ஸ்)டீனுக்கு அதாவது வேலைக்காரனுக்கு அதிகளவு மரியாதை கொடுத்தார்கள். அனைவரும் கண்டுபிடிப்புகள் பற்றி கேட்டார்கள் மகிழ்ச்சியாக இவருடன் கதைத்தார்கள் இவருக்கு அதிகமான மகிழ்ச்சி அதாவது சிறந்த விஞ்ஞானிகளுடன் நான் கதைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்று,  திடீரென  இவருடைய கண்டுபிடிபில்  ஒரு கணக்கினை எழுதி விட்டு இதனை விளக்குமாறு  அவர்கள் கூறினார்கள்.

இதற்கு ஐன்சு(ஸ்)டினாக இருந்த சாரதி திடீரென்று இதையெல்லாம் விளங்கப்படுத்த எனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த வெண்கட்டியினை ஐன்சு(ஸ்)டீன் அதாவது சாரதி(ஐ ன்சு(ஸ்)டீன்) மீது எறிந்ததுவிட்டு இந்த கணக்கினை வந்து விளங்கப்படுத்துமாறு சொல்லிவிட்டு போய் அமர்ந்துவிட்டார். உடனடியாக சாரதி எழுந்து வந்து விளங்கப்படுத்திவிட்டார். அப்பொழுது அங்கே இருந்தவர்கள் ஐன்சு(ஸ்)டினுடைய சாரதிக்கே இவ்வளவு அறிவு என்றால்  ஐன்ஸ்டீனுக்கு எவ்வளவு அறிவு இருக்கும்  என்று யோசித்தார்கள்.

ஐன்சுடீனின் வாழ்க்கை வரலாறு - (வாசித்துப் பாருங்கள்)

ஐன்சுடைன் யெர்மனியில், வுர்ட்டெம்பர்க்(Württemberg) இலுள்ள உல்ம்( Ulm) என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையின பெயர் கேர்மன் ஐன்சுடீன் (Hermann Einstein), தாயாரின் பெயர் போலின் கோச் (Pauline Koch).

இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமை யில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந் தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப் பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார்.

அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார்.

எனினும், சிறுவயதில் இவருக்கு பேசும் போது பேச்சில் தடங்கல் இருந்தது (Einstein had early speech difficulties).

இளமையில் ஐன்சுடைன்

இவர் தனது 12 ஆவது அகவையிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனை களையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிக்கிலிருந்து, முதலில் இத்தாலியிலுள்ள மிலான்(Milan) நகருக்கும் பின் பேவியா(Pavia) என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் அவர் மியூனிக்கிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா(Pavia) சென்றார்.

பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்சுடீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிசின் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Polytechnic)சேர்ந்தார்.

இந்தச் சமயத்தில் அவர் தனது யெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு நாடற்றவரானார்.

1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார்

1900 இல், சுவிசின் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 21 -02-1901இல் இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார்.

ஐன்சுடின் மாணவராக இருந்த போதே, அவரது அறிவாற்றலால் கவரப்பட்டு காதலியாக மாறிய மிலேவா(Mileva Marić) என்ற பெண்ணை 06-01- 1903 இல் அவர் மணந்தார் . அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தது.( Hans Albert Einstein, Eduard).

பிள்ளைகள் பெற்ற மிலேவா போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. உலக மேதையான ஐன்சுடின் உள்ளத்தைப்புரிந்து கொள்ள விரும்பாத அவரது மனைவி ஐன்சுடினை விட்டுப் பிரிந்தார்(Albert and Marić divorced on 14 -02- 1919).

தனக்கு ஒரு துணை வேண்டி, தம் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு நடந்துகின்ற ஒரு பெண்ணை ஐன்சுடின் தேடினார். அவருடை உறவுக்காரப் பெண்ணான எல்சா (Elsa Löwenthal)என்பவளை ஐன்சுடின் மணந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே எல்சா மறைந்தார்.

தம் அறிவாற்றலைக் கண்டு காதலித்துத் திருமணம் செய்த மிலேவா பிரிவும், தம் உறவுக்காரப் பெண்ணான எல்சாவின் மறைவும் ஐன்சுடினை யோசிக்க வைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமது எதிர்கால வெற்றிகளுக்குத் தடைக் கற்களாக இருப்பதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தார்.

இனி எஞ்சிய காலத்தைத் தனியாகவே வாழ்ந்து முடிப்பது என்று ஐன்சுடின் உறுதி பூண்டார்.

படிப்பு முடிந்ததும் இவருக்கு கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்த ஒருவரின் தந்தையார் மூலம் 1902 ல் சுவிசின் காப்புரிமை பணிமனையில்  தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது.

அங்கே கருவிகளைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு இயற்பியல் அறிவு பணியாளர் ஒருவர் தேவைப்பட்டது, அங்கே கருவிகளுக்கான காப்புரிம விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலையாக இருந்தது.

இரண்டாவது உலகப்போர் ஆரம்பமாவதற்குரிய அறிகுறிகள் தெரிந்த நேரம்.. அமெரிக்க சனாதிபதி ரூசு(ஸ்)வெல்ட்( Franklin Delano Roosevelt) அந்த விஞ்ஞானியை அழைத்து, “அணுகுண்டு தயாரிக்க வேண்டும்.

அது உங்களால்தான் முடியும். நீங்கள் அணுகுண்டு தாயரித்துக் கொடுத்தால் அதற்குத் தேவையான உதவிகளையும் பணமும் தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ரூசு(ஸ்)வெல்ட் சொன்னதைக் கேட்ட அந்த விஞ்ஞானி சிரித்தார். அவருடைய சிரிப்பின் அர்த்தம் புரியாமல் ரூகூ(ஸ்)வெல்ட் விழித்தார்.

“அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” என்று உறுதியாக அந்த விஞ்ஞானி ரூசு(ஸ்)வெல்டுக்குப் பதில் கூறினார்.

ரூசு(ஸ்)வெல்ட் வியப்போடு அந்த விஞ்ஞானியைப் பார்த்தார். மீண்டும், “எனது அறிவாற்றலை ஒரு போதும் மனித குலத்தை அழிப்பதறகுப் பயன்படுத்த மாட்டேன்; பணத்திற்காக எனது மூளையை அடகு வைக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அந்த விஞ்ஞானி வெளியேறினார்.

ரூசு(ஸ்)வெல்ட் வேறொரு விஞ்ஞானியை வைத்து அணுகுண்டைத் தயாரித்தார். இரண்டாவது உலககப்போர் நடந்தபோது அந்த அணுகுண்டை ச(ய)ப்பானில் உள்ள கிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா வீசியது. இந்தக் கோரச் சம்பவம் 1945ஆம் ஆண்டு நடந்தது.

கிரோசிமா, நாசாகி நகரங்கள் தரைமட்டமாகின. எங்கு நோக்கினும் மரண ஓலங்கள், இந்தக் கொடுமையின் பாதிப்பிலிருந்து இன்றும் கூட அந்த நகரம் முழுதும் விடுபடவில்லை. அன்று வீசிய அணுகுண்டு கதிர்ப்புகள் இன்று பிறக்கும் குழந்தைகளையும் பாதிப்பதாகப் பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த அணுகுண்டு சப்பான் நகரங்களின் மீது வீசப்பட்டதையும், அதனால் மனித குலம் பாதிக்கப்பட்டதையும் அறிந்து தேம்பித் தேம்பி அழுதார். இந்த சோகத்திலிருந்து விடுபட அவருக்குப் பலகாலம் ஆயிற்று.

அந்த மனிதாபிமானமிக்க விஞ்ஞானி வேறு யாருமல்ல அவர்தான் ஐன்சு(ஸ்)டின் என்ற விஞ்ஞான மேதை.

இவருடைய “பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்”டின் அடிப்படையில்தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது

அமெரிக்க சனாதிபதி ரூசு(ஸ்)வெல்டின் ஆணைக்கு மறுப்பு தெரிவித்த ஐன்சு(ஸ்)டின், இன்று உலகப் புகழ்வாய்ந்த மேதைகளில் ஒருவராக உருவாக்கியது.

விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மத்தியில் ஐன்சு(ஸ்)டினின் தத்துவமும் புகழ்ந்து பேசப்பட்டது. 1921-ஆம் ஆண்டு ஐன்சுடினை நோபல் பரிசு தேடி வந்தது.

உலகின் பல பகுதிகளுக்குச் சென்று வந்த ஐன்சுடின், தமது சொந்த நாடான யெர்மனியிலேயே வாழ்வது என்று முடிவு செய்து, அங்கேயே தங்கினார். ஆனால் அப்போது யெர்மனியின் அதிபராக இருந்த கிட்லர், யூதர்களையும், யூத அறிவாளிகளையும் இழிவாக நடத்துவதைக் கண்டு வருந்தினார்.

இனி நாம் வாழ்வதற்கு யெர்மனி ஏற்ற இடமல்ல என்று ஐன்சுடின் முடிவு செய்தார். அதன்பின் அவர் வாழ்க்கை அமெரிக்காவில் தொடர்ந்தது.

அங்குள்ள ‘பிரின்சுடன்’ என்ற பல்கலைக்கழகத்தில் ஐன்சுடின் இயற்பியல்/ பெளதிகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

சுமார் இருபது ஆண்டுகள் மனைவி துணைவியின்றி வாழ்ந்த ஐன்ஸ்டின், 1955 ஏப்ரல் 18-ம் நாள் அமெரிக்காவில் மறைந்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.