குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தென் இந்தியாவில் எஞ்சியிருந்த பட்டம் கட்டிய ஒரே ஒரு இராயா,

25.05.2020....சிங்கப்பட்டி யமீன்,தென்னாட்டு புலி திரு.டி.என்.எசு.முருகதாசு தீர்த்தபதி அவர்கள் தனது 92 வந்து வயதில் இன்று இயற்கையோடு இணைந்து கொண்டார்.இன்று காலமான யமீன்தார் இராயா டி.என்.எசு.முருகதாசு தீர்த்தபதி அவர்களைப் பற்றி சில தகவல்கள்.

அவரது முழுப் பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர யெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாசு தீர்த்தபதி.சுருக்கமாக டி. என்.எசு.முருகதாசு தீர்த்தபதி.

இவரது தந்தை பெயர் திரு.சங்கர தீர்த்தபதி.

இவரது பூட்டானின் பெயர் பாசுகர சேதுபதி.இவர் தான் விவேகானந்தரை அமெரிக்கா சிகாகோவில் நடை பெற்ற உலக சமய மாநாட்டிற்கு அனுப்பி வைத்தவர்.

அவரது தந்தை இறக்கும் போது முருகதாசு தீர்த்தபதி அவர்களுக்கு மூன்றரை வயது.

சிங்கம்பட்டி யமீனின் அடுத்த ராயாவாக மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டுள்ளது.

அக்கால யமீன் சம்பிரதாயப்படி இராயாவாக முடி சூட்டப்படுபவர் இறந்த பிரேதத்தைப் பார்க்கக் கூடாதாம்.அதனால் தந்தையாரின் பிரேதத்தைக் கூட இவருக்கு காட்டவில்லையாம்.

முடி சூட்டப்படுபவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு.ஆனால் இவருக்கு அப்படி எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லையாம்.இருந்தாலும் இவரோ குறி பார்த்து சுடுதல், இரக்பி,பாலே நடனம், உதைப் பந்தாட்டம்,சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றுள்ள முருகதாசு தீர்த்தபதி அவர்கள் மிகச் சிறந்த டென்னிசு(ஸ்) விளையாட்டு வீரரும் கூட.பாலே நடனத்தை முறையாகக் கற்றவர்.ரக்பி விளையாட்டிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

மழையில்லாத ஊருக்கு அரசர்கள் சென்றால் மழை பெய்யும் என்பது சாசதிரம் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையும் கூட.அதே போல 1984 ஆம் ஆண்டு மழையே காணாத மாஞ்சோலை ஊருக்கு இவரை அழைத்தார்களாம்.இவர் அங்கு போனது தான் தாமதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்துள்ளது.

அதற்காக அந்த மலை கிராம மக்கள் அவருக்கு நன்றிக்கடனாக துலாபார மரியாதை செய்துள்ளனர்.

1952-ம் ஆண்டு யமீன் ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 84,000 ஏக்கர் நிலங்கள் யமீன் ஆளுகையில் இருந்தது.மேலும்,சிங்கம்பட்டி யமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில்,அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோவில்,வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில்,ஊத்துக்குளி சாசுதா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.இக்கோயில்களுக்கு முருகதாசு தீர்த்தபதி அவர்கள் தான் பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் யமீன்தார் முருகதாசு தீர்த்தபதி பக்தர்களுக்கு இராய உடையில் காட்சியளிப்பார்.தொடர்ந்து 74 ஆண்டுகளாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் இராயா உடையில் காட்சி அளித்து வருகிறார்.

சிங்கம்பட்டி யமீன், பிரிட்டிச் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிசுத்தி செலுத்தி வந்துள்ளனர்.இன்று சிங்கம்பட்டி யமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது.ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு யமீன்.

தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் தான் சிங்கம்பட்டி யமீன்.

சிங்கம்பட்டி யமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சிங்கம்பட்டி யமீனுக்கு 900 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது.

சிங்கம்பட்டி யமீனுக்குச் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது யமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமசுதானத்தைத் தோற்றுவித்த இராயா மார்த்தாண்ட வர்மாவுக்கும்,எட்டு வீட்டுப் பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில்,சிங்கம்பட்டி யமீனைச் சேர்ந்தவர்கள் இராயா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்தனர்.அதற்கு நன்றிக் கடனாக, இராயா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய இராச்சியத்திலிருந்து 84,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி யமீனுக்குக் கொடையாக அளித்தார்.

யமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப் பெற்றுள்ளது.சிங்கம்பட்டி யமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர்.5 தந்தப் பல்லக்குகள் இருந்தன.

யமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் யார்ச் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி.

இயற்கையோடு இணையும் வரையிலும் விவசாயம் செய்து வந்தார் யமீன்தார் முருகதாசு தீர்த்தபதி அவர்கள்....

இராயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.....

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.