அயல் நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த பறவை வருவதாகவும் 1870ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக இந்த இன பறவை இலங்கையில் விருத்தி அடைவதாகவும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
புந்தல தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதியில் Glossy ibis பறவை 6 குஞ்சிகளுடன் இரண்டு கூடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த பறவையினம் இலங்கையில் விருத்தி அடைந்தமைக்கான சான்று பதிவாகியுள்ளது.
1872 ஆம் ஆண்டு திசுசமகாராமய பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த பறவை 8 கூடுகளை கட்டியிருந்ததாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
யாழில் கொள்ளையடிப்பு, தம்பதியினரை மரத்தில் கட்டி வைத்து...
25.05.2020 நேற்று இரவு யாழ்ப்பாணம் கந்தரோடை ஆலடியில் வயோதிபர் வீடொன்றில் புகுந்து கொள்ளையடிப்பு. வயோதிபர் வீட்டில் கூரிய ஆயுதங்களுடன் புகுந்து தம்பதியினரை மிரட்டி மற்றும் தம்பதியினரை கட்டி வைத்துவிட்டு ஏழரைப் (7 1/2) பவுன் நகைகளுடன் அங்கிருந்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள். மேலும் இசம்பவம் தொடர்பில் சுன்னாகம் கா.து நிலையத்தில் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.