குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-5 பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம் பகுதி 1,2.....

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு-5 பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம் பகுதி 1,2.....

பேராசிரியர் கைலாசபதி மாதம்   05.04.2020

பதிவு-5 இல் பகுதி -1

பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்

Article

This article has been written by பாரதி தீட்சண்யா and originally published in http://muchchanthi.blogspot.com | Source of the Article

Posted by admin on 03-Sep- 2012 | Leave a response

பகுதி -1

சோசலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய மனித குலத்தின் இலட்சியத்தை தமது எழுத்தாலும், நடைமுறையாலும் செயற்படுத்த முனைந்த கைலாசபதி பற்றி சிந்தித்த போது மேற்குறித்த வரிகள் நினைவில் நிலைத்து நிற்கின்றன.

இருபதாம் நூற்றாண்டு பெற்றுத் தந்த தலை சிறந்த ஆய்வு அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர். கால் நூற்றாண்டு தமிழியல் வரலாற்றில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்த அவர் பத்திரிகையாளர், எழுத்தாளர, விமர்சகர், விரிவுரையாளர் – பேராசிரியர், முதலாவது யாழ் வளாகத் தலைவர், கலைப்பீடாதிபதி என பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். இத்தகைய சமூதாயம் சார்ந்த அவரது ஆளுமைகளே அவரை சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்கின்ற போக்கு வளர்வதற்கு காரணமாக அமைந்தது.

கைலாசபதியின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களிலும் இன்றைய நாளிலும் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்சிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கியகதியில் கைலாபதியின் எழுத்துக்கள்; செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.

இலக்கிய வரலாற்றினை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தலைத் தூக்குவதை காணலாம். அது தான் இலக்கியத்திற்கும் சமூதாயத்திற்கும் இடையிலான உறவுக் குறித்த பிரச்சனையாகும். இலக்கியத்தின் நித்தியத்துவம் குறித்து காலத்திற்கு காலம் வாதப் பிரதிவாதங்கள் தோன்றிய வண்ணமே உள்ளன.

கலை இலக்கியம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது எனவும் அது தெய்வ திருவுடைய கலைஞரால் படைக்கப்படுகின்றது எனவும் பிரமைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பார்வையானது, ஒரு புறத்தில் பரந்துப்பட்ட வெகுசனங்களையும் மறுப்புறத்தில் இலக்கிய கர்த்தாவையும் வைத்து நோக்குகின்ற வெகுசசன விரோத பண்பாடாகும்.

இன்னொரு புறத்தில் தேசிய, பிரதேச, இன, மொழி, சாதி, மத அடையாளங்களைக் கொண்டு மனிதகுல விடுதலைக்கு எதிராக பாவிக்கின்ற கபடத்தனங்கள் இலக்கியத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. “கல்தோன்றி மன்தோன்றா காலத்திற்கு முன்னரே வாலோடு தோன்றியது முத்தத் தமிழ்” , “குறித்த இனம், சாதி பற்றிய படைப்புகளை அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்” போன்ற வாதங்களை உற்று நோக்குகின்ற போது இவ்விலக்கிய போக்கின் தாக்கங்களைக் காணமுடிகின்றது. பராம்பரிய மரபுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை தமது வர்க்க நலன்களுக்கு ஏற்றவகையில் விளக்கமளிக்கின்ற பண்டிதர்கள் ஒரு புறத்தில் ஆர்பரித்து நிற்க,மறுப்புறத்தில் பாராம்பரிய மரபுகள் யாவும் ஆதிக்க சக்திகளின் நலனையே பிரதிப்பலிக்கின்றன என அவற்றை மறுத்து தூய பாட்டாளி வர்க்க கலைக்கோட்பாட்டை முன்வைக்கின்ற அதி தீவீரவாதிகள் இன்னொரு புறத்தில் ஆர்பரித்து நிற்பதே யதார்த்தமகிவிட்டதோர் சூழலைக் காணக் கூடியதாக உள்ளது.

கலை இலக்கியம் என்பது சமூதாயத்திலிருந்து தோன்றி அது சமூதாயத்தை மேம்படுத்துகின்றது என்ற இலக்கிய போக்கானது மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் ஆக்கப்பர்வமான திசையில் இட்டுச் செல்கின்றது. “மனிதர் உணவை மனிதர் பறிக்கும்” வழக்கத்தை மாற்றி புதிய சமூதாயத்தை நிர்மாணிக்கும் எண்ணுக்கனகற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பத்தியீவிகள் இன்னும் இத்தகையோரின் போராட்டகளில் வலிமை மிக்க ஆயுதமாக கலையும் இலக்கியமும் விளங்குகின்றது என்பது மக்கள் இலக்கிய கர்த்தக்களின் நிலைப்பாடாகும்.அநத வகையில் இவ்வணியினர் பராம்பரிய மரபுகளை ஒடுக்கும் வர்க்க மரபுகள் ஒடுக்கப்படும் வர்க்க மரபுகள் என கண்டறிந்து அவற்றினை சமூகமாற்றப் போராட்டத்திற்கு ஏற்றவகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அணுகு முறையை இவர்கள் முன்மொழிகின்றனர்.

கைலாசபதி இந்த மூன்றாவது அணியினையே சார்ந்து நின்றார். அவர் வாழ்ந்த காலப்பகுதில், நமது கலாசாரம், பண்பாட்டு, பாரம்பரியம், இலக்கியத்தில் மக்கள் சார்பு பண்பு என்பன கடும் சோதனைக்குட்பட்டிருந்த காலமாகும். இத்தகைய காலச் சூழலில் தமது எழுத்தால் செயற்பாட்டால் மக்கள் சார்பு இலக்கிய கோட்பாட்டினை நிலை நாட்டியதில் கைலாசபதியின் பங்களிப்பினை முக்கியமானது. எனவே கைலாசபதியின் இலக்கிய, அரசியல் கொள்கை நடைமுறை, அதன் செல்வாக்கு என்பவற்றினை ஆராய்தல் வேண்டப்படுவதாகும்.

கைலாசபதி 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இளையத்தம்பி கனகசபாபதி. தாயாரின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. யாழ்பாண சமூகத்தை சேர்ந்த கைலாசபதியின் பெற்றோர்கள் தமது தொழில் நிர்ப்பந்தம் காரணமாக மலேசியாவில் சில காலம் வாழ்ந்தனர். இவரது தந்தை அங்கு படவரைஞராகப் பணிப்புரிந்தவர்.

கைலாசபதி மலேசியாவில் விக்டோரியா இன்சுட்டில் தமது ஆரம்ப கல்வியை கற்றார். இரண்டாம் உலக போருக்ற்கு பின்னர் 13வது வயதில் இலங்கைக்கு திரும்பினார். பின், தமது இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்று, பட்டப் படிப்பினை இலங்கை பல்கலைகழகத்திலும் (பேராதனை வளாகம்) கற்றார்.பேராதனை பல்கலைக்கழகத்திலயே தமது முதுமாணி பட்டத்தினையும் பெறறார். பின்னர் கலாநிதி பட்டத்தினை இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் முடித்தார்.

கைலாசபதிக்கு யாழ். இந்துக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மார்க்சியத் தத்துவ அறிமுகம் கிடைத்தது. அத்தத்துவத்தின் ஒளியிலேயே அவர் தமக்கான சமூக நோக்கையும் உலக கண்ணோட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார். “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற்கமைய பள்ளி பருவம் முதலே தமக்கான பார்வையை தெளிவாகவும் தீட்சண்யத்துடனும் வளத்துக் கொள்கின்றார். இது குறித்து கைலாசபதிக்கு மார்க்சிய தத்துவார்த்த பார்வையை வளம்படுத்தியவர்களில் ஒருவரான மு. கார்த்திகேசனின்; பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கது.

“எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சூளுவான வழியைக் கண்டுப் பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம், திருவாசகம், பைபில், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமாக ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக விஞ்ஞான நூல்களை வைத்துக் கொண்டு பரலோகத்தை பார்க்கத் தலைப்பட்டான். அவர்களோ வானம் பார்த்த பரலோக வாதியானார்கள். இவனோ பரலோகம் பார்த்த சமூகவிஞ்ஞானியானான். அந்தச் சுட்டி மாணவன் தான் கைலாசபதி.”

கைலாசபதி தமது பாடசாலை பருவத்திலே சிறுகதை, கவிதை, நாடகம், இசை என பல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததுடன் பல ஆக்கங்ககளையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழ்மணி, இந்துசாதனம், சுரபி, யுகம், வீரகேசரி முதலிய இதழ்களிலும் அவரது ஆக்கங்கள்; பிரசுரமாகியுள்ளன. இவர் எழுதிய நாடகங்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில் கைலாசபதியின் பல பரிசோசனை முயற்சிகளினூடாகவே தமக்கான விமரசனத் துறையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.

கைலாசபதி பல்கலைகழகத்தில் மாணவராக கற்கைநெறியை தொடர்ந்திருந்த காலத்தில் பேராசிரியர்கள் க.கணபதிபிள்ளை, வீ.செல்வநாயகம்,சு.வித்தியாணந்தன் முதலாலோனரிடம் கற்க கூடியதும் அவர்களுடன் சேர்ந்து சமூக செற்யாடுகளை முன்னெடுக்க கூடியதுமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றார்.

1957 ஆம் ஆண்டு தமிழை சிறப்பு பாடமாக கொண்டு பயின்ற கைலாசபதி முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார். இந்த தகைமையை பயன்படுத்தி அவர் வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றோ அல்லது வேறு நிருவாக துறைசார்ந்த பதவிகளிலோ பிரகாசித்திருக்க முடியும். கைலாசபதி அவ்வாறு செய்யவில்லை. மறாக தனது துறைக்கான களமாக பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.; தினகரன் பத்திரிகையில் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர், மிக குறுகிய காலத்திலேயே பிரதம ஆசிரியியராகவும் நியமிக்கப்பட்டார்.

1961 இல் கைலாசபதி பத்திரிக்கை துறையிலிருந்து விலகி பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இந்த சூழலை கைலாசபதி தமது தமிழியல் ஆய்வுத் துறை விருத்திக்கு சாதகமானதோர் களமாக பயன்படுத்திக்; கொண்டார்.

1963 ஆம் ஆண்டளவில் தமது கலாநிதி பட்டபடிப்பிற்காக புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கழகத்திற்கு சென்றார். இக்காலத்தில் அவரது மார்க்சிய பார்வையை வளம்படுத்தியதில் பேராசிரியர் யார்ச் தொம்சனுக்கு முக்கியமானவர்.இவரது மேற்பார்வையின் கீழ் Tamil Heroic Poetry என்ற ஆய்வேட்டினை சமர்பித்தார். தக்க ஆதாரங்களுடனும் சமூதாய கண்ணோட்டத்துடனும் சங்க செய்யுள்களை கிரேக்க வாய்மொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி, அப்பாடல்களின் பரவுத் தன்மை, மக்களின் எழுத்தறிவு, அவற்றின் உள்ளடக்கம், வடிவம் என்பனவற்றினை ஆதாரமாகக் கொண்டு சங்ககால செய்யுள்களை வாய்மொழி இலக்கியம் என நிறுவினார். இவ்வாய்வு முயற்சி, தமிழில் சங்க இலக்கியம் குறித்து புதிய பார்வைகளும் ஆய்வுகளும் தோன்ற ஆதர்சனமாக அமைந்தது.

இதே காலப்பகுதியில் (1964) தனது மாமன் மகளான சர்வமங்களத்தை திருமணம் செய்துக் கொள்கின்றார். இருவருக்கும் சுபமங்களா (1968), பவித்ரா(1968) ஆகிய இரு புதல்விகள் உள்ளனர். கைலாசபதியின் ஆய்வு சார்ந்த பணிகளுக்கு திருமதி சர்வமங்களத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. iகாசபதியின் ஆய்வுப்பணிகளுக்கு சர்வமங்களம் எத்தகைய பங்களிப்பினை நல்கியுள்ளார் என்பதை அவரது வார்த்தைகளில் காண்பது பயன்மிக்கது.

“ கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப் போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்பதுபோலவே நடந்துக்; கொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுத வேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பி படிக்கும் போது புதுபுது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்புக்கேட்டபடி நட்சத்திரகுறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதி வைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுத வேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும்.”

கைலாசபதியின் வீட்டில் எப்போதும் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கூடுவது வழக்கம். அவர்களுக்கான விருந்துபசாரங்களை செய்வதிலும் சர்வமங்களம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதனையும் பலர் பதிவு செய்துள்ளனர்;. அத்துடன் கைலாசபதி தமது இறுதி காலத்தி;ல் பாரதி பற்றி நூல் எழுதும் முஙயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அவ்வாறே அவரது சீன பயணத்தின் பின்னர் நீர்வை பொன்னயன், இ.முருகையன், எம். ஏ நுஃமான் ஆகியோருடன் இணைந்து லுசுன் பற்றி நூதெலழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது

பல்கலைகழக சார்ந்த பணிகளுடன் மட்டும் கைலாசபதி தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பல்கலைகழகத்திற்கு அப்பாலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். யுனெசு(ஸ்)கோவுக்கான தேசிய ஆணைக்குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழு இலங்கை பல்கலைகழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம்(1971-74), இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு(1973) என பல பணிகளை மேற் கொண்டுள்ளார்.

1974 இல் யாழ்.பல்கலைகழக வளாகம் நிறுவனப்பட்ட போது அதன் முதலாவது வளாகத் தலைவராக பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் கைலாசபதி. யாழ். பல்கழகம் உருவாக்குவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாரோ அவ்வாறே அது உருவாகிய பின்னர் அதன் இலக்கினை அடைவதற்காகவும் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார்.

1977 இல் கைலாசபதிக்கு தமது வளாகத் தலைவருக்கான பதவி காலம் முடிந்ததுடன் அவர் அதே பல்கலைகழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் சிறிலங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. இக்காலத்தில் கைலாசபதி தாங்வென்னா துன்பங்களை அனுபவித்துள்ளதை திருமதி. சர்வமங்களம், செ. கணேசலிங்கன் முதலானோரின்

குறிப்புகளில் காணக் கூடியதாக உள்ளது.

மேலும், கைலாசபதி இந்திய பல்கலைகழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மற்றும் அயோவாப் கலிபோரினியப் பல்கலைகழகளிலும் வருகை தரு அதிதி பேராசிரராக கடமையாற்றியுள்ளார். இத்தகைய ஆளுமை உள்ளீடுகளை கொண்டிருந்த கைலாசபதி 1982 இல் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இவரது இழப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

கைலாசபதி பாடசாலை மாணவராக இருக்கும் காலம் முதலே பல வகை நூல்களை வாசிக்க தலைப்பட்டிருந்தார். அக் காலத்தில் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் வெளியீடுகளான ‘கம்பரசம்’, ‘ஆரிய மாயை’, ‘தீ பரவட்டும்’, ‘நாடும் ஏடும்’, ‘நிலையும் நினைப்பும’;, ‘பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்’, ‘பரந்தாமனுக்கு பகிர்ந்த கடிதம்’ முதலிய நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டிருந்தார். அவ்வாறே, பாரதிதாசன் , புதுமைபித்தன், ரகுநாதன், மு.வரதராயன் சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகியார். முதலியோரின் ஆக்கங்களை வாசிப்பதிலும் கூடிய ஆர்வம் காட்டி வந்திருப்பதை கவிஞர் இ.முருகையனின் நினைவுக் குறிப்புகளில் காண முடிகின்றது.

மேலும் கைலாசதிக்கு பாடசாலை மாணவராக இருந்த காலத்தில் தமிழில் எவ்வாறு தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டாரோ அவ்வாறே ஆங்கில மொழியிலும் புலமை மிக்கவறாக காணப்பட்டார். சில ஆங்கில இலக்கிய விமர்கர்களின் நூல்களை வாசிப்பதில் அவர் தீவிர கவனமெடுத்துள்ளார் என்பதை அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக எலியற், எஃப்.ஆர்.லீவிசு(ஸ்,) சிசில் டேய் லூயி, சு(ஸ்)ற்றீஃபன், சு(ஸ்)பென்டர், முதலிய விமர்சகர்களும் டி.எச். லோறன்சு(ஸ்,) பேணாட் சோ, யேம்சுயோசு, வேயினியா வ+ல்ஃப், சேக்சு(ஸ்)பியர், மாக்சி(ஸி)ம் கார்க்கி மாயாகோல்சு(ஸ்)கி, ஏசு(ஸ்)ட்ராவ்கி, பெட்டோஃபி, லூசுன், பெர்ட்டோல் பிரெசு(ஸ்)ட், நெருடா முதலிய படைப்பாளிகளும் கைலாசபதியினால் வாசிக்கப்பட்டவர்கள் என்பதனை அவரது எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது. இவ்வாறு வாசிப்பதில் மட்டுமன்று அதனை நண்பர்கள் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவதிலும்; கைலாசபதி ஆர்வம் காட்டியிருந்தார.; நண்பர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள், ஒருவகையில் அவை கூட ஒரு சமூதாயம் சார்ந்ததாக இலக்கியம் குறித்த உரையாடலாகவே அமைந்துள்ளது.

1953 இல் பதுளையை சேர்ந்த தனது கல்லூரி நண்பனுக்கு எழுதிய கடிதம் பொறுத்து என். கே.ரகுநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்.

“சொந்தவிவகாரங்கள் ஏதுமில்லை. படித்த இலக்கிய புத்தகங்களிலிருந்து குறிப்புகள், சிறப்பு இரசனைகள், பல புத்தகங்களைப் பற்றி அறிமுகக் குறிப்புகள்- ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் சொல்வார்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, விரைவில் முடித்துக் கொண்டு ஏதாவதொரு குறைப்புத்தகத்தைப் படிக்க ஓடி விடுவாராம். கடிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள்ளது: இந்தப் புத்தகம் வாங்க வேண்டும்: படித்த பின் அதையிட்டு எழுதுகின்றேன்- இப்படியெல்லாம், பிற்கால இலக்கிய ஆதர்சனங்களுக்கு அப்போது அடிகோலினார் போல் தெரிகிறது”

இவ்வாறு பல்வேறு நூல்களை கற்று தேர்ந்த கைலாசபதி வாழ்விலிருந்து அந்நியப்படவிடாமலும் தொலைத்தூர தீவுக்குள் ஒதுங்கி விடாமலும் தன் கரித்திர தூரிகையை நகர்த்தி சென்றுள்ளமைஅவரது சிந்தனைத் தெரிவினை காட்டுகின்றது. தான் பெற்ற அறிவை மாறி வருகின்ற சூலுக்கு ஏற்ப, தமிழ் மரபுக்கு ஏற்ப பொருத்தி பார்த்து எமது சூழலுக்கான விமர்சப் பார்வையொன்றை உருவாக்கி, புத்தகவாத சிந்தனைக்கப்பால் நடைமுறைக்கான செயற்திறனை வலியுறுத்துகின்ற பண்பை அவரது எழுத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.

கைலாசபதி பின்னாட்களில் ஆற்றல் வாய்ந்த விமர்சராக ஆய்வளராக பிரபல்யம் அடைந்ததனால் அவரை விமர்சகராக ஆய்வாளராக பார்க்கின்ற நிலையே உள்ளது. அப்பார்வை ஒரு விதத்தில் சரியானதும் கூட. அதே சமயம் அவர் தமது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், சிலவற்றினையும் எழுதியுள்ளார். சுமார். 40 நாடகங்கள் எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெரும்பாலான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கினார். அவ்வாறே புதுமை பித்தனின் ‘கபாடபுரம்’ கைலாசபதியினால் நாடகமாக்கப்பட்டுள்ளன. ‘குரல்கள’; என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். என கவிஞர் இ.முருகையர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே அவர் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அக்காலத்தில் பொருளாதார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்தவர் பலர் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் குறித்து நாவல் எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகின்றது. அத்துடன் பாரதி பற்றியும் தனிநூல் எழுதும் முயற்சிலும் ஈடுபட்டிருந்ததை கைலாசபதி பற்றி வெளிவந்த குறிப்புகளில் காணமுடிகின்றது.

பேராசிரியர் கைலாசபதி

பதிவு-5

பகுதி-2

பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவணம்

பாரதி தீட்சண்யா

பேராசிரியரின் வெளிவந்த நூல்கள்;:

(முதற் பதிப்பு வெளிவந்த ஆண்டின் அடிப்படையில்)

தமிழில்

இரு மகாகவிகள் (1962)

பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)

தமிழ் நாவல் இலக்கியம்(1968)

ஒப்பியல் இலக்கியம்(1969)

அடியும் முடியும் (1970)

கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது),(1970)

இலக்கியமும் திறனாய்வும் (1972)

பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973)

மக்கள் சீனம் காட்சியும் கருத்தும்( திருமதி சர்வமங்களம் கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), (1979)

சமூகவியலும் இலக்கியமும் (1979)

திறனாய்வுப் பிரச்சனைகள் (1980)

நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்(1980)

இலக்கியச் சிந்தனைகள் (1983)

பாரதி ஆய்வுகள்(1984)

ஈழத்து இலக்கிய முன்னோடிகள்(1986)

சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982 (1992)

முன்னுரைகள் (2004)

நாவலர் பற்றி கைலாசபதி (2005)

ஆங்கிலத்தில்:

Tamil Heroic Poetry (1968)

The Relation of Tamil and Western Literature ( 1984)

On Art and Literature (1986)

On Bharathi (1987)

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மாக்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பியாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்ச்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது. அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது. அந்த வகையில் மார்க்சிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்சியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. கைலாசபதி மார்க்சியத்தையே தமது உலநோக்காக கொண்டு தமது ஆய்வு முயற்சிகளையும் சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். இந்தப் பின்னணியி;ல் அவரது எழுத்துச்துறைச்சார்ந்த பங்களிப்புகளை பின்வருமாறு வகுத்துக் கூறலாம்.

1. இலக்கியத்திற்கும் கமூகத்திறிகும் இடையிலான உறவை மார்க்சிய உலக கணணோட்டத்தின் துணை க்கொண்டு அறிந்ததுடன், தமது இலக்கிய ஆய்விற்கு கமூகவியல் அணுகுமுறையையே ஆதாரமாக கொண்டிருந்தார். ஓவ்வொரு காலத்திலும் நிலவுகின்ற சமூதாய அமைப்பின் தன்னையை பொறுத்தே அச்சமூகத்தில் நிலவுகின்ற கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஆகியனவும் அமைந்துக் காணப்படும். சமூகமைப்பின் மாற்றத்திற்கு ஏற்ப இவவம்சங்களும் மாறும் என்பதனை தமிழ் இலக்கியம் பொறுத்த ஆய்வில் கோட்பாட்டு அடிப்படையி;;ல் வெளிப்படுத்திய முதல் தமிழ் அறிஞர் கைலாசபதி ஆவார். பழந்தமிழ் இலக்கிய பரிச்சியமும் நவீன இலக்கிய நோக்கும கொண்டிருந்த கைலாசபதி, தமிழாராய்ச்சி என்பது பழைய இலக்கண இலக்கியங்களை கற்று பழமையை பேனுவது, சமூகத்தின் எண்ணற்ற ஒடுக்குமுறைகளை மூடி மறைத்தல் எனும் புன்iமைகளைத் தாண்டி தமிழ் இலக்கியத்தினையும் அதன் மாற்றத்தையும் வரலாற்று அடிப்படையிலும் யாவற்றுக்கும் மேலாக மாற்றத்தின் இயக்கவியலை பொருள் முதல்வாத சிந்தனையின் அடிப்படையிலும் கிரகித்துக் கொண்டமையுமே அது சார்ந் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தமையுமே கைலாசபதியின்; முக்கியமான பங்களிப்பாகும்.

2. இலக்கிய வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர்உண்மையை அறிந்துக் கொள்ள முடிகின் றது. தூய அழகியல்வாதிகள் இலக்கியத்தில் தூய்மை, அழகியல் என்ற பிரமாசு(ஸ்)ரத்தை உபயோகித்து மக்கள் இலக்கிய படைப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனைவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. இவர்களது கூப்பாடுகளையும் கண்டனங்களையும் சற்று கூர்ந்து நோக்குகின்ற போது சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற மாந்தர்களின் குரலாகவே இவை அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் இலக்கியம் என்றுமே அழகியலை நிராகரிக்கவில்லை. கவிதைப் பொறுத்து குறிப்பிடுகின்ற போது உள்ளடக்கம் ஒரு மனிதனின் உயிர் என்றால் உருவகம் அதன் உடல் என்பார் கைலாசபதி. ஒரு தூய அழகியல்வாதியின் கலைப் பற்றிய பார்வையும் மக்கள் இலக்கியகர்த்தாவி;ன் அழகியல் பற்றிய பார்வையும் அடிப்படையில் முரண்படானதாகும் என்பதை எடுத்துக் காட்டிய கைலாசபதி அவை எவ்வகையில் தமது வர்க்க நலன்களை பிரதிப்பலித்து நிற்கின்றது என்பதனையும் கோட்பாட்டு அடிப்படையில் நிறுவினார். காலம் காலமாக நீண்டுள்ள இந்த விவாதத்தில் மக்கள் இலக்கியத்தின் அழகியல் சார்பாக அவர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.

3. கலை இலக்கியத்தை வெறுமனே தனித்த துறையாக நோக்காது அதனை ஏனைய துறைகளுடன் இணைத் துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை கைலாசபதி வலியுறுத்தினார்;. இலக்கியத்தின் உலக பொதுமையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த கைலாசபதி இலக்கியமும் அதன் விளைநிலமாகிய சமூதாயமும் உலக பொதுவான நியதிக்குள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஒப்பியல் ஆய்வின் அவசியத்தை விலியுறுத்தினார். பல தல இலக்கியங்களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் உலக இலக்கியம் உருவாகின்றது என்ற மார்க்சின் கோட்பாட்டை ஆதாரமாக கொண்டு தமிழியல் அத்தகைய சாத்தியப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடடன் எடுத்துக் காட்டுகின்றார். ஒப்பியல் ஆய்வின் மூலமே குறிப்பிட்ட இலக்கியத்தின் தனித்துவத்தினையும் அதன் பொதுமையையும் எடுத்துக் காட்ட முடியும் என்பதை சிறப்பாகவே கைலாசபதி உணர்ந்திருந்தார். தமிழில் ஒப்பியல் நோக்கு வளர்வதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர்கள் சுந்தரம்பிள்ளை, வையாபுரிபிள்ளை என்றால் அதன் பின் இத்துறையில் சாதனை செய்தவர் கைலாசதியாவார் எனக் கூறின் தவறாகாது. பொதுவாகவே கைலாசபதியின்; ஆய்வுகளில் ஒப்பியல் ஆய்வு என்பது முனைப்புற்றுயிருப்பினும் அவரது ‘இரு மகாகவிகள்’ , ‘ஒப்பியல் இலக்கியம்’ “Tamil Heroic Poetry ”ஆகிய நூல்களே அவரது ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். பொதுவாகவே கைலாசபதியின ஆய்வுகள் தமிழ் சமூதாயத்தின் வாழ்க்கை கூறுகளில் அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், அறிவியல் முதலிய துறைகளை தமதாக்கி அதன் ஒளியிலேயே தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் காண்கின்றோம். அந்தவகையில் தமிழிலே ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மார்சிய நோக்கில் ஆய்வு செய்த தமிழ் அறிஞர்களில் சைலாசபதி முன்மையானவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

4. தேசியம் என்ற சிந்தனையானது பல தளங்களில் இயங்கி வந்துள்ளதை அவதானிக்கலாம். தேசியம் மனித குலத்தின் நாகரிகமான பக்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற போது அதனை பிற்போக்கான தேசியம் எனவும் அது வளர்ச்சிகச்காகவும் சமத்துவ சமூகவமைப்பிற்காகவும் செயற்படுகின்ற போது முற்போக்கான தேசியம் எனவும் வறையரை செய்கின்றோம். அந்தவயையில் ஐம்பதுகளில் இலங்கையில் தோன்றிய தேசியமானது நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாட்டு பாராம்பரியம் என்ற உணர்வை தோற்றுவித்திருந்தது. இதன் பின்னணியில் இலங்கையில் மண்வாசைன மிக்கப் படைப்புகளும் சமகா பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுப்பொளுளாகின. இந்த சூழலில் தமிழில் பரந்தப்பட்ட மக்கள் இலக்கியத்தை புறக்கணித்து நின்ற மரபுவாதிகளுக்கு எதிராகவும் அதேசமயம் இலங்கையை இந்திய வணிக இலக்கியங்களுக்கான சந்தையாக பாவித்த கபடதனங்களுக்கு எதிராகவும் உறுதியான தத்தவார்த்த போராட்டத்தை நடாத்த வேண்டிய தேவை இருந்தது. இத் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் கைலாசபதி முதன்மையானவர். இதன் பின்னணி;யில் கைலாசபதி எழுதிய ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’ ‘நாவலர் பற்றி கைலாசபதி’ ஆகிய நூல்களும் தேசிய இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவ்வாறே தேசிய இலக்கியம் தொடர்பில் முக்கிய கவனமெடுத்த கைலாசபதி அதனை சர்வதேச பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்துனே இணைத்துப் பார்த்தார். இதன் காரணமாகவே பாரதியை தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக அவரால் காணமுடிந்தது. ‘ஓரே உலக’ இலக்கியத்திற்கு தேசிய இலக்கியம் எத்தகைய பங்களிப்புகளை வழங்க முடியும் என்பதனையும் கைலாசபதியால்; எடுத்துக் காட்ட முடிந்தது.

கலை இலக்கியம் அரசியல் வரலாற்றுக் காலக்கட்டங்களில் மனிகுலத்தின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயற்பட்ட சந்தர்ப்ங்களை ஆய்வு அடிப்படையில் கைலாசபதியின்; எழுத்துக்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. சமூதாய அமைப்பின் மேட்கட்டுமானத்தில் ஒன்றாக அமையும் இலக்கியம் சமூதாயத்தை விபரிப்பதாக மட்டுமன்று அது சமூதாயத்தை மாற்றும் கருவியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை ஊடாக தமது எழுத்து சார்ந்த பங்களிப்பினை வழங்கியவர் கைலாசபதி. அவரது எழுத்துக்களில் சிலாகித்து பேசப்படுகின்ற ஓர் அம்சம் தான் அவரது எழுத்து நடையாகும். தமது கருத்துக்களை தெளிவாக முன்வைக்கின்ற அதேசமயம் வாசகனை ஈர்த்தெடுக்கும் ஆற்றலும் கைலாசபதியின் எழுத்து நடைக்கு உண்டு. எண்ணுகணக்கற்ற சொற்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவ்வாறே அவரது எழுத்துக்களில் காணப்படும் பிறிதொரு சிறப்பு அம்சம், அவர் எடுத்தாள்கின்ற மேற்கோள்களாகும். ஆய்வு நெறி ஒழுங்கு என்பது வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற வரைறையை கொண்டிருந்த போதினும் அதற்கு அப்பால் விரிவான தகவல்கள் வழங்குவது கைலாசபதியன் நூல்களில் பொதுவாக காணப்படுகின்ற பண்பாகும். கைலாசபதியின்; நூல்களை வாசிக்கின்ற போது அவை தொடர்பான முழு நிறைவான தேடலை மேற்கொள்வதற்கு ஆதர்சனமாக அமைந்திருக்கும்.

உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார். இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு rனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. “பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே” என்ற வ. ஐ. ச. anயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.

இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் புரிந்துக் கொள்ளும் விதமும் தமதாக்கி கொள்ளும் விதமும் தனித்தன்னை வாய்ந்ததாக இருக்கும், இருக்கவேண்டும்

இன்று 05.04.2020பேராசிரியர் கைலாசபதியின் 87 வது பிறந்த நாள்

என்றும் என்னில் ஒளிர்கின்ற பேரொளி

பேராசிரியர் கைலாசபதியும் நானும் சில நினைவுகள்.

என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை தந்தவர் ஒரு மாணவன் எனும் நிலை தாண்டி தோழமையின் நெருக்கத்தை கண்டவன் நான்.

என் மீதான தனிப்பட்ட அக்கறை அவருக்கு எப்போதும் இருந்தது ஒரு கிரமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் நேசத்தின் நீட்சியாய் என்னுள் நிறைந்திருந்தார்.


அவர் வீட்டு நூலகம் எனக்கு எப்போதும் திறந்திருந்தது வாசிப்புக்கானவைகளும் ஆய்வுக்கானவைகளும் பாடப் பரப்பு வகை சார்ந்ததுமானவைகளும் என் கை வசப் பட காரணமான அறிவொளியாய் அவர்.

அவரிடம் சில பாடங்களை நான் தனியாக விருப்ப பாடமாக தெரிவு செய்த திராவிட நாகரிகமும் கலாசாரமும் எனும் பாடப் பரப்பு இன்று பேசப் படுகின்ற சிந்து வெளி தமிழர் நாகரிகம் முதல் அது தென்னிந்தியா வரை பரவிய அடிப்படைகள் இந்தியாவுக்கு அப்பால் ஈராக் வரை பரவியிருந்த திராவிடக் கூறுகள் பற்றியும் இன்று நாம் கீழடியில் வாசிக்கின்ற விடயங்களினூடும் அவர் அறிவு அகன்றிருந்தது.அதுவே பாடப் பரப்பாய் விரிந்திருந்தது.

தொல்காப்பிய பொருளதிகாரம் எனும் பாடப் பரப்பில் தொல்காப்பியத்தில் சமூகவியல் கூறுகள் பற்றிய அறிவார்ந்த தேடலாய் அமைந்தது.தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அல்ல அது தமிழர்களின் தொன்மை வாழ்வியலின் அடிப்படை கூறுகளை இலக்கியம் அது சொல்கின்ற குடி சார்ந்த வழக்காறுகளில் அதன் செறிவு செழுமை என்பன பேசப் பட்டன.

மூல பாடத் திறனாய்வில் சங்க இலக்கியத்தில் இடை நுழைந்த போலிகளும் கம்பராமாயணத்தில் செருகலாய் விரிந்த பாடல்களையும்.எப்படி மூல பாடத்தை கண்டறிதல் எனும் விஞ்ஞான பூர்வ அணுகு முறகளின் அறிதலாய் அமைந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

நாவல் இலக்கியம் பற்றி அதன் உலகளாவிய வரலாறும் தமிழில் அது செறிந்த விதமும் ஈழத்து நாவல்கள் அதன் வரலாறு என்பனவும் நாவலின் உள்ளார்ந்த பொருண்மை பற்றிய தேடலும் அவர் மூலம் வாய்த்தவை

எந்த பாடத்தையும் மாணவர்களுக்கு எவ்வளவை அள்ளிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பது அவர் விரிவுரைகள் கொட்டிக் கிடந்த முத்துக்களில் நாம் பொறுக்கி எடுத்தவை சொற்பமே.

இன்னமும் என் மனக் கண் முன் அவர் வழி விரிவுரைகளில் விரிந்த மாமல்ல புரச் சிற்பங்கள் பற்றிய நுணுக்கமான விளக்கங்கள் ஒரு அழகியல் ஆளுமையின் வெளிப்பாடாகவே இருந்தன அந்த சிற்பங்களை இன்று பார்க்கும் போது அவரது விரிவுரைகள் ஒரு திரைப்படம் போல் விரிந்து கிடக்கிறது.

இறப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் அவரோடு பேசக் கிடைத்த போது திடீரென ஒரு நாள் நீ மொரீசசுக்கு தமிழ் படிப்பிக்கப் போகிறாயா என்றார் நானும் சம்மதித்தேன் ஆனால் அதற்கு முன் காலம் அவரை நம்மில் இருந்து பிரித்து விட அது நிறைவேறாத அவர் கனவாய் போனது.

என்றும் என்னில் ஒளிர்கின்ற பேரொளி பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் கைலாசபதி மாதம் 06.04.2020

சோசலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி

லெனின் மதிவானம்

பேராசிரியர் கைலாசபதி மறைந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரது வயதினையொட்டி (05ஏப்-1933) பார்க்கின்றபோது இவ்வாண்டு வெள்ளி விழாவுக்கான ஆண்டாக காணப்படுகின்றது. இவ்வேளையில் கைலாசின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களில் இன்றைய நாளில் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

Prof.Kailasapathyஅவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்சிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கிய கதியில் கைலாசபதியின் ஆக்கங்கள் செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.

இவ்வாறாக கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். இது ஒரு புறமிருக்க கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் சோசலிசத்துக்கான பாதையில் அவரது பங்களிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை நல்வாய்ப்பின்மையான(துரதிசுடமான) ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் அவர்கள் “கைலாசபதியின் அரசியல்” என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கபட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும்.

கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. சோசலிஷத்திற்கான பாதை பற்றி கைலாசபதியின் பார்வையை தெளிவாக்கிக் கொள்வதற்கு அன்றைய சூழலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்த நிறுவன பிரச்சனைகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மார்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன், கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது.

அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது அந்த வகையில் மார்க்சிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால மெய்யியல்கள்(தத்துவங்கள்) யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்க்சியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. இது தொடர்பில் ஏங்கல்சின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால், அக்காலத்தில் இயற்கை விஞ்ஞானங்களை காட்டிலும் இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் அதாவது பூமண்டலத்தை சேர்ந்த கனபொருட்களின் இயந்திர இயக்க விஞ்ஞானம் (சுருங்கச் சொன்னால் பூமியின் ஆகர்ச்ண சக்தியை பற்றிய ஒரு இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அக்காலத்தய இரசாயன விஞ்ஞானம் குழந்தை பருவத்தில் தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட “பிளாயிசுதான்” தத்துவரூபத்தில் அன்று இரசாயனம் இருந்து வந்தது.

உயிரியல் விஞ்ஞானமோ கட்டில் குழந்தையாய் கிடந்தது. தாவர மிருகராசிகளை ஏதோ மேலோட்டமாக பரிசீலித்து வந்தார்கள், அவ்வளவு தான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத்தான் இவை (தாவர மிருகராசிகள்). உயிர் பெற்று வாழ்கின்றன(சீவிக்கின்றன) என்று விளக்கினார்கள். தெகார்த்தோவுக்கு மிருகங்கள் எவ்வாறு இயந்திரங்களாகத் தென்பட்டனவோ அதே மாதிரி 18ம் நூற்றாண்டின் லோகாயதவாதிகளுக்கு மனிதன் ஒரு இயந்திரமாக தென்பட்டான்.

மார்க்சு(ஸ்,) ஏங்கல்சு(ஸ்) ஆகியோரின் கருத்துக்கள் தோன்றிய காலம் முதலாளித்துவம் தமது வாலிப வயதை எட்டியிருந்த காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியானது மார்க்சிய சிந்தனை பிறப்பெடுத்து அது தன்னை நிறுவனனமாக நிலைநிறுத்திக் கொள்கின்ற ஆரம்ப காலப்பகுதியாக காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்த காலப்பகுதியில் மார்க்சிய சித்தாந்தமானது உலக வரலாற்று செல்நெறியில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அது சமூக மாற்றத்திற்கான பலமான சித்தாந்த தளத்தினையும் நிறுவன அமைப்புகளையும் உருவாக்கியிருந்தது. 1917 ஆம் ஆண்டு இரசிய புரட்சியானது உலக வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கும், அவர்களை சார்ந்து நின்ற நேச சக்திகளுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். அவ்வாறே சீன புரட்சியானது உலகில் பெருந்தொகையான மக்களை புரட்சிகரமான அரசியல் ஆளுமைக்குள் கொண்டுவந்தது. இதனையொட்டி உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோட்பாடுகளும் போராட்டங்களும் அதனடியாக எழுகின்ற நிறுவன அமைப்புக்களும் அல்போனியா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, லாவோசு, தென் யேமன், நீக்கரகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர அரசியல் ஆளுகையின் கீழ் வந்தது. இது மனிதனையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் இட்டுச்சென்றது.

உலகின் ஏனைய பாகங்களை பொறுத்த மட்டில் இக்காலப்பகுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான பலமான நிறுவனங்கள் உருப்பெற்று வந்தன. ஆசு(ஸ்)திரியா, பிரான்சு(ஸ்) ஆகிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பாசிசப் போக்குகளை எதிர்த்து 1934 ஆம் ஆண்டிலே மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் நடாத்தியது.சு(ஸ்)பெயின் தேசத்திலே 1936ல் உள்நாட்டு போரை கட்டவிழ்த்து விட்ட பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தையும் வெகுசன முண்ணணியையும் கட்டி எழுப்புவதில் சு(ஸ்)பானிசு(ஸ்) கம்யூனிசுட் கட்சி மும்முரமாக உழைத்து வந்தது. எமது தலைமுறையில் வியட்நாம் எவ்வாறு உலக மக்களது மனச்சாட்சியை உலுப்பி சனநாயக வாதிகளையும் தேசபக்தர்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் ஒரு முகப்படுத்தியதோ அதே போன்று முப்பதுகளில் சின்னஞ்சிறிய சு(ஸ்)பாயின் உலகின் நல்லோரை நாலா திசைகளிலிருந்தும் ஈர்த்தது. எழுத்தாளர்கள் இலட்சிய பற்றுடன் சு(ஸ்)பானிச குடியரசை ஆதரித்தனர்.

இக்காலகட்டம் அரசியல் விழிப்புணர்வை இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படுத்திய காலப்பகுதியாகும். சு(ஸ்)பானியப் போரில் சர்வதேசப் படைப்பிரிவு ஒன்றின் தளபதியாய்ச் சமர் செய்த பி.அலெக்சாந்தர் கூறியிருப்பது போல, இக்காலப்பகுதியிலே, தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் போராட்டங்களிலும் எத்தகைய பரீச்சயமும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் கூட திடீரென அரசியல் தெளிவும் செயல் ஊக்கமும் பெற்றவராய்ப் பாசிசத்துக்கு எதிரான மகத்தான போர்களத்தில் லட்சிய வெறியுடன் குதித்தனர்.

1930 களைத் தொடர்ந்து சோவியத் இரசியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பாதையிலிருந்து நீங்கி, பிறிதொரு வர்க்க நலனை பிரதிபலிப்பாக மாறியது. உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் நலனையும் பிரதிபலிக்க வேண்டிய கம்யூனிசு(ஸ்)ட் கட்சி தொழிலாளர்களின் மேல் அமர்ந்து ஆணையிடும் கட்சியாக தோற்றம் பெற்றது. சோவியத்ரசியாவால் வீழ்சியுற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளே இக்கால சூழலில் கம்யூனிசுட் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இருந்தனர். இதன் உடன் விளைவாக புரட்சியை அடுத்த சோசலிச சமூக வலையமைப்பில் சுரண்டப்படும் வர்க்க அமைப்பை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பிரயோகிக்கப்பட வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் மேல் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக மாறியது. மாவோ இத்தகைய போக்குகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியதுடன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது எழுத்துக்களின் ஊடாக எடுத்துக்காட்டியுள்ளார்.

புரட்சிக்கு பின்னர் சோவியத் இரசியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் குருசேவ் முதல் கொர்பக்சோ வரையில் முன் வைக்கப்பட்டு வந்த தீவிரவாத சிந்தனைகள் யாவும் சோவியத் இரசுயாவின் ஆட்சி தொழிலாள வர்கத்தின் கையிலிருந்து மாறி பூர்சுவா வர்கத்திற்கு மாறியதன் உடன் விளைவாக தோன்றியதே சோவியத் சமூக ஏகாத்தியமாகும்.

1962 ஆம் ஆண்டை தொடர்ந்து சோவியத் இரசுயாவால் ஏற்பட்ட சமாதான முறையில் பாராளுமன்றத்தை கைப்பற்றல் என்ற நிலைப்பாடானது சர்வதேச தொழிலாள வர்க்கம் குறித்த எவ்விதமான அக்கறையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட சோவியத் இரசுயாவின் சுயரூபத்தை காட்டி நிற்கின்றது. இது தற்செயல் நிகழச்சியல்ல, வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சர்வதேச ரீதியான கம்யூனிசுடுகளின் தியாகங்களையும், உறுதிமிக்க போராட்டங்களையும் கூட நாம் உலக சரித்தத்தில் காணலாம். சு(ஸ்)பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர்காலகட்டமும், சீனாவின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடுகள் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இவ்வணியினர் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் பிண்ணயில் உழைக்கும் மக்கள் தான் சார்ந்த பதாகையை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காக தத்துவார்த்த நிறுவன வேலைத்திட்டங்களை முன் வைத்தனர்.

இந்தக் காலச்சூழலில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் ஏனைய நாடுகளிலிருந்து கம்யூனிசுட் கட்சிகளையும் பாதிக்க தொடங்கின. அதன் வெளிப்பாடாக தோன்றியதே மொசுகோ, சீன சார்பு முரண்பாடுகளாகும். அதன் எதிரொலியை நாம் இலங்கையிலும் காணக்கூடிய தாகவிருந்தது. இலங்கை பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட ஆழமான அரசியல் தத்துவார்த்த வாதங்கள் காரணமாக பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிளவடைந்தது. இதன் விளைவாக அன்றைய சூழலில் முற்போக்கு அணியை வீறுடன் முன்னெடுத்த அறிஞர்களான பிரேம்யி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, டொமினிக் சீவா, அகசுதியர் போன்ற சமாதான வழியில் பாராளுமன்ற பாதை என்ற தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைத்து. மொசுகோ சார்பை ஆதரித்து நின்றனர்.

சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்கள் அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி நின்ற இன்றைய நாளில் இந்த முரண்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல கருத்து மாறுபாடுகள் தோன்றின. இந்த சூழலானது பல புத்தியீவிகளை அறிவு தடுமாற்றத்திற்குட்படுத்தியது. இவ்வாறானதோர் சூழலில் இத்தகைய சர்வதேச அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை கைலாசபதி அவர்கள் எவ்வாறு அணுகினார். சோசலிசத்திற்கான பாதை குறித்து அவர் எத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதோர் வினாவாகும். கைலாசபதியின் பெரும்பாலான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் 1979 - 1982 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.

அன்றைய நாளில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த பிற்போக்கு சக்திகளும் உலக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அக்காலச் சூழலில் சோசலிச வேடமணிந்து சோவியத் இரசியாவும் உலக மேலாதிக்கத்திற்கெதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சோவியத் இரசியா குறித்த கைலாசபதி அவர்களின் பார்வை பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தது.

“கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல பாகங்களிலே சோவியத் யூனியன் ஊடுருவல் செய்து, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சில இடங்களிலே தனது சூத்திர பாவைகளான கியூபா, கிழக்கு யேர்மனி, வியட்நாம் முதலிய நாடுகளின் படைகளையும் ஆலோசனைகளையும் போர்த் தளபாடங்களையும் பயன்படுத்தி தனது செல்வாக்கினை உறுதிப்படுத்தி வந்திருக்கின்றது. மிக அண்மையில் ஆப்கானிசுதானில் தனது ஆதிக்கத்தை ரொம்பவும் அப்பட்டமாக, எதுவித ஒழிவு மறைவுமின்றி நடத்தி வருகிறது. பல நாள் ஏறிய குதிரை ஒருநாளைக்கு சறுக்கும் என்பது போல, இப்போது ஆப்கானிசுதானில் சோவியத் யூனியன் பரிதாபகரமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஆரம்பித்த சோவியத் எதிர்ப்பு நாளுக்கு நாள் வேகமடைந்து தற்சமயம் தலைநகரான காபூலுக்கே சென்றுவிட்டது.

தொடக்கத்திலே எதிர்ப்பு காட்டியவர்களை பிற்போக்குவாதிகள் என்றும், மதவாதிகள் என்றும் அலட்சியமாக தாக்கித் தலைமையில் உள்ள பொம்மை அரசாங்கம் வர்ணித்தது. எல்லைப்புற மாவட்டங்களிலே பாகிசுதான், ஈரான் ஆகிய நாடுகளும் சீனாவும் கிளர்சியாளருக்கு உதவி வழங்குவதாக பழி சுமத்தியது. ஆனால் அந்த அபாண்டப் பழி எடுபடவில்லை. ஏனெனில் ஆப்கானிசுதானிய நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய தேச பக்தர்கள் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள், தராக்கி ஆட்சியையும் அதற்கு பக்கபலமாக உள்ள சோவியத் யூனியனையும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். அங்குள்ள சோவியத் படை ஆலோசகர்கள் அதிகாரிகள் பற்றி முன்னர் அப்பகுதியில் கூறியிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன் தலைநகரான காபூலிலேயே பட்டப்பகலில் சண்டை நடந்திருக்கின்றது.

நகரின் எல்லையில் உள்ள பல - கிசார் கோட்டையில் நிலை கொண்டிருந்த அரசாங்க இராணுவப்படையினர் சில பிரிவுகள் கிளர்ச்சி செய்ததாகவும் அதற்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுந்ததாகவும் இராயதந்திர வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. கோட்டையிலிருந்த கிளர்ச்சி படைகளை மடக்கி அடக்குவதற்காக சோவியத் மீ - 24 வானுார்ரிகள்(கெலிகெப்டர்கள்) றொக்கெற்றுக்கள் தாக்கினவாம். அதே சமயத்தில் சோவியத் டாங்கிகள் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின. சுமார் நான்கு மணிநேரம் நடந்த கடும் சண்டையின் பின் கிளர்ச்சியாளர்கள் அகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இரு தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

இன்று சோவியத் யூனியன் சிதைந்து சின்னாபின்னமாகியதற்கு அது கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணமாகும். சோசலிச போர்வையில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் சோவியத் இரசியா தமது மேலாதிக்க நலனை முன்னிறுத்துவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டு வந்தமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றார். இது அவரது மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை வழிப்பட்ட தெளிவை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு காலச் சூழலில் சோவியத் இரசியாவின் மேலாதிக்க தன்மையானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விஞ்சு நிற்கும் அளவிலும் மாறியது. தோழர் மாசேதுங் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்று தற்காப்பு நிலையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தாக்கும் நிலையிலும் அதாவது தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் போக்கிலும் வேகம் காட்டி நிற்பதாக கணித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சோவியத் யூனியனது அபாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ளும் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய சமூகக்கடமை மார்க்சிய புத்தியீவிகளை எதிர்நோக்கியிருந்தது. கைலாசபதியின் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய அரசியல் விமர்சனங்கள் மேற்கூறிய நோக்கின் அடிப்படையிலேயே அன்று அமைந்திருந்தமை அக்கட்டுரையின் வாயிலாக இனங்கண்டு கொள்ள முடிகின்றது.

கம்பூச்சியா போன்ற நாடுகளின் விடுதலைப் போரின் அவசியம் குறித்து எழுதிய கைலாசபதி அவர்கள் அந்நாடுகளில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு கைக்கூலிகளாக தொழிற்பட்ட நாடுகளும் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிலேச்ச தாக்குதல்களை அந்நாடுகளில் நிகழ்த்தின என்பது குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

இந்தோசீனத்தில் வியட்நாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய காலமுதல் அதாவது கம்பூச்சியாவிலும் லாவோசிலும் சீனாவின் எல்லைப் புறங்களிலும் படைத் தாக்குதல்களை நடத்த தொடங்கிய நாள் முதல் ஒரு செய்தி அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுதான், வியட்நாம் புதியரக நச்சுப் புகையையும் ஒருவிதமான கதிர்வீச்சையும் பயன்படுத்துகிறது என்பதாகும். வியட்நாம் பேர்ரின் போது அமெரிக்க ஏகாதிபத்திய படைகளும் நச்சு திராவகக் குண்டுகளையும் பயிர் அழிப்பு விசங்களையும் பெருமளவில் பயன்படுத்தின. அது பற்றி அறிந்த உலக மக்கள் மகா பாதகமான அச்செயலை கண்டித்தனர்.


அமெரிக்கா பயன்படுத்திய நச்சு திராவகங்கள் தென் வியட்நாம் வீழ்சியுற வட வியட்நாமிய படைகள் வசம் சேர்ந்தன. அவற்றையும் வியட்நாமியர் அப்போது கம்பூச்சியா லாவோசு ஆகிய நாடுகளில் தேச பக்தி படைகள் தங்கியிருக்கும் பிரதேசங்களை அழிப்பதற்கும் பிரயோகிக்கின்றனர். வியட்நாமிய எல்லை பிரதேசங்களில் தற்பாதுகாப்பிற்காகச் சீன படைகள் பதிலடி கொடுக்க முற்பட்ட பொழுதும் இப்புதிய விசக் கருவிகளை வியட்நாமியர் பரீட்சித்துப் பார்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனமாக அலசி ஆராய்ந்த மேற்கு நாடுகளின் நிருபர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வியட்நாமியர் மூலமாக சோவியத் படையினர் சில நவீன நவீன கருவிகளை தென்னாசிய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

இந்தோனேசியா, விசக் கருவிகளின் பரிசோதனை களமாக ஆக்கப்பட்டுள்ளதா என சோவியத் யூனியனின் எதேச்சிகார போக்குகளை தெளிவாக அடையாளம் காட்டியதுடன் சோவியத் ஆலோசனையின் பேரில் வியட்நாம் போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்ட பொருளாதார திட்டம் குறித்தும் அதன் தோல்வி குறித்தும் வெளிப்படுத்துகின்ற கைலாசபதி இந்நாடுகளில் ஆமலாதிக்க பேரரசை உறுதித்துவதற்காக “இந்தோ சீனா சமசுடி” என்ற பெயரில் ஏனைய நாடுகளை அடக்கி வைப்பதற்காக பெரியதோர் இராணுவப்படையை உருவாக்க நேர்ந்ததையும், அதன் பிண்ணணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின் தங்கிய சமூகத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்தும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ எவ்வாறு தமது மேலாதிக்க பணிகளுக்கு ஏதுவாக இருந்ததோ அதே போன்று சோவியத் இரசிய இரகசிய ஒற்றர் சேவையும் (கே.யி.பி) சோவியத் அடக்குமுறைக்கு ஏதுவாக அமைந்திருந்தது பற்றியும் எழுதியுள்ளார். இவை யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்டமை பற்றியும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வைகளில் முக்கியமானது இந்தியா பற்றியதாகும். சோவியத் யூனியன் - இந்திய உறவுகள் பற்றியும் அதனடியாக எழுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகள், அதனால் உருவாக போகின்ற தீய விளைவுகள் பற்றியும் கைலாசபதியின் பார்வை பிரதானமானதாகும். உலக அரங்கிலே இந்தியா சோவியத் யூனியனின் ஊதுகுழலாக செயற்படுவதை உலகம் அறிந்துள்ளது. சர்வதேச மாநாடுகளில் ஏனைய மூன்றாவது உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து இந்திய நிலைப்பாடு வேறுபடுவதும் சோவியத் செல்வாக்கினாலேயாகும். இதற்கு அடிப்படை பொருளாதார பிடியே என்பது பலரும் அறிந்ததே. அத்துடன் இராணுவத்துறையில் சோவியத் யூனியனே இப்பொழுது முதலாம் நம்பர் சப்ளையராக விளங்குகின்றது.

அண்மையில் இந்திய விமானப்படை சோவியத் யூனியனிலிருந்து முதலாவது தொகுதி மிக்-23 ரக விமானங்களைப் பெற்றுள்ளது. அவற்றுடன் ரஷ்யாவில் பயிற்சி பெற்ற விமானிகளும் திரும்பி உள்ளனர். பல கோடி பெறுமதியான மிக்-23 ரக விமானங்களை இந்தியா அடுத்த சில வருடங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கு உடன்பாடாகியுள்ளது. பிற நாடுகளிலுள்ள தளங்களை தாக்கவல்ல இவ்விமானங்கள் இரசியர்களின் ஆலோசனைப்படி பெறப்பட்டன. இந்திய விமானப்படை இப்பொழுது முற்று முழுதாக ரஷ்ய விமானங்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கழுத்துப் பிடிப்புகளினாலேயே இந்தியாவின் குரல் உலக அரங்கில் இரசியாவின் எதிரொலியாக இருப்பதை பலரும் அவதானித்துள்ளனர்.

நடுநிலைமை பற்றி திருமதி இந்திரா காந்தி எவ்வளவு தான் உரக்க கூறினாலும் இந்தியா ரஷ்யா பக்கம் சார்ந்திருப்பதை மூன்றாவது மண்டல நாடுகள் நாளுக்கு நாள் உணர்ந்து வருகின்றன என விபரித்து விளக்குகின்ற கைலாசபதி இந்தியாவில் சோவியத் யூனியன் மேற்கொண்டுள்ள அரசியல் வலிந்து தாக்குதலை இந்தியாவில் உருவாகிவந்த இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் எவ்வாறு இனங்கண்டு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சோவியத் இரசியாவின் சமூக ஏகாதிபத்தியம் குறித்து விமர்சிக்கின்ற கைலாசபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் குறித்து விமர்சிக்க முற்படுவது அவரது தீட்சாண்யமிக்க பார்வையை எடுத்துக் காட்டுகின்றது. கைலாசபதி சோவியத்-அமெரிக்க மேலாதிக்க போட்டியால் யுத்த ஆபத்து குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளை என்றுமில்லாதவாறு திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பது கோடி டொலர் அமெரிக்க பாதுகாப்புக்குச் செலவிடப்படும். அடுத்த வருடம் இரண்டாயிரத்து இருநூற்று இருபது கோடி டொலர் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதத்தில் சென்றால் ஐந்து வருடத்தின் பதின்மூவாயிரம் கோடி டொலர் இராணுவத்திற்கு செலவிடப்படும்.

ஏற்கனவே வலதுசாரி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் நாடுகளில் கூட இராணுவ ஆட்சிகளை நிறுவுவதற்கு அமெரிக்கா முனைந்துள்ளது. தென் கொரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, எல்சல்வடோர் முதலிய நாடுகளில் அமெரிக்காவின் கைங்கரியங்களைக் காணக்கூடியதாய் இருக்கின்றது. அணிசேரா நாடுகளின் ஒற்றுமையை குலைத்து தனக்கு வால்பிடிக்க கூடிய சில தேசங்களை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க ரஷ்யா பெரும்பாடு படுகின்றது. இந்தியா, சிரியா, வியட்நாம், கியூபா முதலிய வால்பிடிகள் இதற்கு ஒத்தாசை புரிகின்றன.

இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டியின் காரணமாக மூன்றாம் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு கலாச்சார ஊடுருவல் குறித்து எழுதுகின்ற பேராசிரியர் அவை மனித குலத்தையே அழிக்க கூடியதோர் விசமியாக மாறியுள்ள அபாயத்தையும் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன் இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியானது எவ்வாறு மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்ககூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றியும் அதனை முறியடிக்கக் கூடிய மக்கள் இயக்கங்கள் எவ்வாறு உலகளாவிய ரீதியில் தோன்றி வருகின்றன என்பது பற்றிய அவரது பார்வை விசாலமானது.

இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் இவ்வல்ரசுகளுக்கிடையில் சிக்காமல் தமக்கான பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் தாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதனையும் தமது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கைலாசபதியின் ஈரான், ஈராக் யுத்தம் தொடர்பான பார்வை முக்கியமானது. சுருங்க சொன்னால் அமெரிக்க ரஷ்ய (சோவியத்) போட்டா போட்டி ஈரானை வெகுவாக பாதிக்கிறது. அதிதீவிரமான மதவாதியாக தோற்றமளித்தாலும் அயதொல்லா கொமெனி நடைமுறையில் பல விசயங்களில் நடுநிலைமை வகித்து வந்திருப்பது கவனிக்க்க்கூடியது. நாட்டின் ஸ்திரப்பாட்டில் கொமெனிக்கு மிகுந்த கவனம் உண்டு. அவர் தான் முரண்படும் சக்திகளையும் குழுக்களையும் பிரிவுகளையும் ஒருவாறு இழுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார். பலர் நினைப்பது போல கொமெனி அராஜகவாதியல்ல. தான் தந்திரம் மிக்க அரசியல் தலைவர் என்பதை கொமெனி தக்கவாறு காட்டியுள்ளார்.

ஆனால் ஈரானின் பிரச்சனைகளை முழுமையாக எதிர்நோக்கவும் நாட்டை முன்னெடுத்து செல்லவும் கொமெனி மாத்திரம் போதாது. அவரது மதியழகும் இராயதந்திரமும் மாத்திரம் போதாது என்ற வகையில் ஈரான் மேலாதிக்க வல்லரசு போட்டியில் சிக்காது சுதந்திரமாக செயற்பட்டு வந்தமையையும் ஈராக் அவற்றினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் இறுதி விளைவாக வளைகுடா யுத்தத்தை ஆதரிக்க நேர்ந்ததையும் கைலாசபதி தீட்சயணத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இதே காலப் பகுதியில் இவ்விரு வல்லரசுகளின் நடைமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்களையும் அதன் உறுதிப்பாட்டையும் கைலாசபதி அடையாளம் காட்டத் தவறவில்லை. உதாரணமாக சீனா எத்தகைய தடைகளையும் தாண்டி பாட்டளி வர்க்க அரசியல் நலன்சார்ந்த பதாகையை எவ்வாறு முன்னெடுத்து செல்கின்றது என்பது குறித்தும், அரசியல் ஸ்தாபன நடைமுறையில் எத்தகைய நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது என்பது பற்றியும் அழகுற விளக்குகின்றார். அத்துடன் சீனா தன்னை இழந்து கொள்வதாக வகையில் அமெரிக்காவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருந்தது பற்றியும் அது எத்தகைய நிதானமான தன்மையினை கொண்டிருந்தது பற்றியும் அவரது “சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது” என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். அதாவது நம்மில் பல புத்தியீவிகள் தமது சூழலில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து விலகி தொலைதூர தீர்வுகளுக்குள் ஒதுங்கி அதன் பிண்ணணியில் தமது கம்பீரத்தில் வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவர்களின் போக்கில் சர்வதேசியம் என்பது தமது சமகால சூழலிலிருந்து தப்பியோடுகின்ற போக்காகவே காணப்பட்டது. அதனால் கைலாசபதியை பொறுத்தமட்டில் சர்வதேச அரசியல் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்ததுடன் அவை எவ்வாறு இலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றார்.

1977 ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்தது. அதற்கு முன் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு இழைத்த மக்கள் விரோத தவறுகளை காரணமாக கொண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பலத்த ஆதரவுடனும் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தது. விதேசிய சார்பும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கு பயன்மிக்க பொருளாதார அரசியல் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் 1977இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் மேற்குறித்த இந்த போக்கு இலங்கை அரசியலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதனை கைலாசபதி அவர்கள் இன்று இந்து சமுத்திரத்தில் குறிப்பாக தென் இந்தியாவில் இலங்கை முக்கியமான பகடைக்காயாக அமெரிக்காவால் உருட்டப்படுகின்றது.

சோசலிச வாடையே இல்லாமல் இந்நாட்டை உருமாற்றி அமைக்கும் பரிசோதனையை உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இலங்கையில் இப்போது மேற்கொண்டு வருகின்றார்கள். பாராளுமன்ற சனநாயகத்தின் தோற்றத்தை முற்றாக மாற்றாமலும், தென்கொரியா, தாய்லாந்து போல ராணுவ சர்வாதிகார ஆட்சிமுறைகளை புகுத்தாமலும் நாசூக்காக தனியார்துறை மேலாதிக்கம் செய்யும் பொருளாதார அமைப்பையும் சனாதிபதி தனிசெல்வாக்கு வகிக்கும் பாராளுமன்ற முறையையும் வைத்துக்கொண்டு இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்திய வட்டத்திற்குள் இறுக்கமாய் பிடித்துக்கொள்வதே மேற்கூறிய பரிசோதனையின் குறிக்கோளாகும் என இலங்கை அரசியலில் எவ்வாறு விதேச நலனும் உள்நாட்டு உயர் வர்க்கத்தினரின் நலனும் பேணப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

இவ்வாறே அன்று இலங்கை அரசியலில் துளிர்விட்டு கிளைகளாக மாறிக்கொண்டிருந்த ட்ரொட்சுகியவாதம், சேகுவராவாதம், நவீன திரிவுவாதம் முதலிய தத்துவார்த்த நிறுவன நடவடிக்கைகளின் அம்மணமான சந்தர்ப்பவாதத்தையும் அதிகார பதவி மோகத்தையும் தமது அரசியல் கட்டுரைகளின் ஊடாக தெளிவுபடுத்தியதுடன் மாறாக மார்க்ஸிய லெனினிய மாசேதுங் சிந்தனையின் அடியாக எழக்கூடிய அரசியல் போக்கினையும் அதன் மக்கள் சார்பு பண்பினையும் தமது ஆய்வுகள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.


ஆக கைலாசபதியின் தேசிய சர்வதேசிய அரசியல் பார்வை குறித்து நோக்கின்ற போது சமகால சர்வதேச அரசியல் பற்றிய அவரது பார்வையானது நவீன திரிபுவாதமாக உருவாகியிருந்த சோவியத் யூனியனது நிலைப்பாட்டில் நின்றோ அல்லது திருடி வாழும் பண்பு நீங்கலாக சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மார்க்சிய கல்லறைக்கு சென்றுவிட்டது என்ற விரக்திமயப்பட்ட கோட்பாட்டை அமெரிக்க சிந்தனையின் பின்னின்று முன்வைக்கவோ அவர் முனையவில்லை. மாறாக இந்த நெருக்கடியான சூழலை விமர்சனத்துக்குள்ளாகி அதனூடு மார்சிய லெனினிய மாசேதுங் தத்துவார்த்தை அதன் நிறுவன நடைமுறையுடன் அணுகி தீர்வுகளை முன்வைக்கின்றனர். இப்பின்னணியிலே கைலாசபதி சீனச் சார்பு அரசியல் பாதையை முன்னெடுத்தனர். அந்த வகையில் அன்று உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து நின்ற மக்கள் அரசியலுக்கான பலமான அடித்தளத்தை வழங்கியவர் கைலாசபதி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

இத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்த கைலாசபதி கம்யூனிசு(ஸ்)டுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். எனினும் அவர் தன்னை பகிரங்கமாக எந்தவொரு கட்சி சார்ந்த நபராகவும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் கூட புனைபெயர்களில் தான் எழுதப்பட்டன. அன்றைய சூழலில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருந்தமையும் காலத்திற்கு பொருந்துவனவாகவே இருந்தது. அவரது பங்களிப்பு குறித்து நோக்குவதற்கு சீன புரட்சிக்கு லூசுனின் பங்களிப்பு குறித்து மாசேதுங் கூறிய வரிகளை இங்கொரு முறை குறித்து காட்டுவது அவசியமான தொன்றாகும். லூசுன் கட்சியில் இல்லாத ஒரு கம்யூனிசுட். அவர் சீன பண்பாட்டு(கலாசார) இயக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு வழங்கியவர். அவர் சிறிய காற்றுக்கு வளைந்து முறியும் புல் போன்றல்லாது பெரும் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கக்கூடிய பெருமரம் போன்றவர். லூசுனிடம் காணப்பட்ட இந்த தெளிவு அர்ப்பணிப்பு பெரும்பாலும் கைலாசபதியின் ஆய்வுகளில் காணப்படுகின்றன.

சீனத்தரப்பு அரசியலை முன்னெடுத்த அவர் மக்களிலிருந்து விலகி நின்ற வரட்டு தத்துவவாதியாக காணப்படவில்லை. அரசியல் துறையில் எவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே இலக்கிய துறையில் அத்தகைய ஐக்கிய முண்ணணியை வழிநடத்தியவர். இலங்கையில் 1940,1950 களில் பொதுவுடைமை இயக்கம் செல்வாக்கு பெற்றதன் விளைவாக தோன்றியதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றிய இவ்வியக்கமானது 60 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சர்வதேச சித்தாந்த போராட்டத்தின் போது அதில் தலைமை வகித்த முன்னணி நண்பர்களை பலர் சோவியத் யூனியனின் நவீன திரிவுவாதத்தை ஏற்றிருந்தமையினால் தத்துவார்த்த நிறுவன ரீதியான சிதைவுக்குள்ளாகியது.

கைலாசபதியை பொறுத்தமட்டில் இந்தச் சீரழிவை கோட்பாட்டு ரீதியாக உணர்ந்திருந்தார் என்ற போதிலும் அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புபட்டிருந்த பலரை சரியான மார்க்கத்தில் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து அவ்வியக்கத்தில் அங்கம் வகித்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார். அவ்வகையில் இந்த ஐக்கிய முண்ணணிக்கான சிந்தனை கைலாசபதியிடம் காணப்பட்ட அதேசமயம் அவர் எக்காரணம் கொண்டும் தமது கொள்கைபிடிப்பில் இருந்து விலகியவராக அவர் காணப்படாமையே அவரது சிந்தனையின் பலமான அம்சமாகும்.

அவ்வகையில் கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் நலன் சார்ந்த கம்யூனிசுட் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தத்துவார்த்த பங்களிப்பினை வழங்கியதுடன் நேர்மையுடன் செயற்பட்ட இடதுசாரி இயக்கங்களுடன் எத்தகைய தொடர்புகளை கொண்டிருந்தார் என்பதனை சுபைர் இளங்கீரன், சி. கா. செந்திவேல் முதலானோரின் கட்டுரைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

தொகுத்து நோக்குகின்ற போது அன்றைய சூழலில் பொதுவுடைமை இயக்கங்களில்; சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பிளவு உலகின் ஏனைய நாடுகளில் உருவாகியிருந்த பொதுவுடைமை இயக்கங்களை பாதிக்க தொடங்கியது. மார்க்ஸிஸம் அதன் புணர் நிர்மாணம் குறித்து விவாதத்திற்கான சூழலை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மார்க்சிச இயக்கங்கள் தொடர்பில் மீண்டு ஒரு புனரமைப்பிற்கான தத்துவார்த்த நிறுவன நடைமுறை குறித்த பார்வை அவசியமானதொன்றாகியது, இந்த பிண்ணணியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கமொன்றினை கட்டியெழுப்புவதற்காக மார்க்ஸிஸத்தில் தம்மை அர்ப்பணித்து கொண்ட புத்தியீவிகள் யாவரையும் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியன் உட்பட புரட்சியை வென்றெடுத்த நாடுகளில் ஏற்பட்ட சமூக மாற்றமும், வர்க்க மாற்றமும் குறித்த ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய தோற்றம் அதன் ஊடுருவல், இதன் பிண்ணணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தெளிவு, சர்வதேச அரங்கில் இரு வல்லரசுகளாக தோற்றம் பெற்றிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவியத் சமுக ஏகாதிபத்தியம் முதலிய வல்லரசுகள் குறித்தும் ஏனைய நாடுகளின் அதன் ஊடுருவல் குறித்த தெளிவு, மாறாக உலகளாவிய ரீதியில் இதற்கு எதிராக மக்கள் இயக்கங்களும் போராளிகளும் எவ்வாறு பிரசன்னம் கொண்டு வருகின்றனர் என்பது பற்றிய பார்வை, அவற்றின் பின்னணியில் கம்யூனிசுட் இயக்கம் இது தொடர்பில் செய்ய வேண்டியவை - செய்யக்கூடியவை பற்றிய ஆய்வுகள் காலத்தின் தேவையாக உள்ளன. இந்த ஆய்வுக்கான அடித்தளத்தையிட்டவர் கைலாசபதி ஆவார்.

அடிக்குறிப்புகள்:-

1. செந்திவேல் சி.கா மேற்கோள்,(1992) கைலைசபதியின் சமுக நோக்கும் பங்களிப்பும்,சவுத் ஏசியன் புக்சு-சென்னை. பக்- 3

2. ஏங்கல்சு(1997) லுத்விக்போயர்பார்க்கும் மூலச்சிறப்புள்ள யேர்மன் தத்துவஞானத்தின் முடிவும், மொசுகோ பக் -36

3. கைலாசபதி (1986) திறனாய்வுப்பிரச்சனைகள், சென்னை புக்சு, சென்னை, பக் 14,15

4...................(1992) சர்வதேச அரசியல் நிழ்வுகள்(1979 - 1982) புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்சு - சென்னை பக் - 21,22

5. அதே நூல், பக் - 31

6. அதே நூல், பக் - 90,91

7. அதே நூல், பக் - 96,97

8. உதயன்(கைலாசபதியின் புனைபெயர்),(1981) செம்பகதாகை இதழ் யாழப்பாணம்

9. கைலாசபதி க. மேற்படி நூல் (சி.கா. செந்திவேல் எழுதிய முன்னுரை)

10...................(சனமகன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை.) செப்பாதாகை - 1981.

11. செந்திவேல் சி.கா மேற்படி நூல். பக் - 68 சோசலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் கைலாசபதி மறைந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரது வயதினையொட்டி (14-ஏப்-1933) பார்க்கின்றபோது இவ்வாண்டு வெள்ளி விழாவுக்கான ஆண்டாக காணப்படுகின்றது. இவ்வேளையில் கைலாஸின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களில் இன்றைய நாளில் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

Prof.Kailasapathyஅவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்சிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கிய கதியில் கைலாசபதியின் ஆக்கங்கள் செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.

இவ்வாறாக கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். இது ஒரு புறமிருக்க கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் சோசலிசத்துக்கான பாதையில் அவரது பங்களிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை நல்வாய்ப்பின்மையான(துரதிசுடமான) ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் அவர்கள் “கைலாசபதியின் அரசியல்” என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கபட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும்.

கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. சோசலிசத்திற்கான பாதை பற்றி கைலாசபதியின் பார்வையை தெளிவாக்கிக் கொள்வதற்கு அன்றைய சூழலில் மார்க்சியத்தின் தத்துவார்த்த நிறுவன பிரச்சனைகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மார்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன், கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது.

அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது அந்த வகையில் மார்க்ஸிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்க்ஸியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. இது தொடர்பில் ஏங்கல்சின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால், அக்காலத்தில் இயற்கை விஞ்ஞானங்களை காட்டிலும் இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் அதாவது பூமண்டலத்தை சேர்ந்த கனபொருட்களின் இயந்திர இயக்க விஞ்ஞானம் (சுருங்கச் சொன்னால் பூமியின் ஆகர்ச்ண சக்தியை பற்றிய ஒரு இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அக்காலத்தய இரசாயன விஞ்ஞானம் குழந்தை பருவத்தில் தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட “பிளாயிசுதான்” தத்துவரூபத்தில் அன்று இரசாயனம் இருந்து வந்தது.

உயிரியல் விஞ்ஞானமோ கட்டில் குழந்தையாய் கிடந்தது. தாவர மிருக ராசிகளை ஏதோ மேலோட்டமாக பரிசீலித்து வந்தார்கள், அவ்வளவு தான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத்தான் இவை (தாவர மிருகராசிகள்). உயிர் பெற்று யீவிக்கின்றன என்று விளக்கினார்கள். தெகார்த்தோவுக்கு மிருகங்கள் எவ்வாறு இயந்திரங்களாகத் தென்பட்டனவோ அதே மாதிரி 18ம் நூற்றாண்டின் லோகாயதவாதிகளுக்கு மனிதன் ஒரு இயந்திரமாக தென்பட்டான்.

மார்க்சு(ஸ்,) ஏங்கல்சு(ஸ்) ஆகியோரின் கருத்துக்கள் தோன்றிய காலம் முதலாளித்துவம் தமது வாலிப வயதை எட்டியிருந்த காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியானது மார்க்ஸிய சிந்தனை பிறப்பெடுத்து அது தன்னை நிறுவனமாக நிலைநிறுத்திக் கொள்கின்ற ஆரம்ப காலப்பகுதியாக காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்த காலப்பகுதியில் மார்க்ஸிய சித்தாந்தமானது உலக வரலாற்று செல்நெறியில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அது சமூக மாற்றத்திற்கான பலமான சித்தாந்த தளத்தினையும் நிறுவன அமைப்புகளையும் உருவாக்கியிருந்தது. 1917 ஆம் ஆண்டு இரசிய புரட்சியானது உலக வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கும், அவர்களை சார்ந்து நின்ற நேச சக்திகளுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். அவ்வாறே சீன புரட்சியானது உலகில் பெருந்தொகையான மக்களை புரட்சிகரமான அரசியல் ஆளுமைக்குள் கொண்டுவந்தது. இதனையொட்டி உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோட்பாடுகளும் போராட்டங்களும் அதனடியாக எழுகின்ற நிறுவன அமைப்புக்களும் அல்போனியா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, லாவோசு(ஸ்,) தென் யேமன், நீக்கரகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர அரசியல் ஆளுகையின் கீழ் வந்தது. இது மனிதனையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் இட்டுச்சென்றது.

உலகின் ஏனைய பாகங்களை பொறுத்த மட்டில் இக்காலப்பகுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான பலமான நிறுவனங்கள் உருப்பெற்று வந்தன. ஆசு(ஸ்)திரியா, பிரான்சு(ஸ்) ஆகிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பாஸிசப் போக்குகளை எதிர்த்து 1934 ஆம் ஆண்டிலே மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் நடாத்தியது. சு(ஸ்)பெயின் தேசத்திலே 1936ல் உள்நாட்டு போரை கட்டவிழ்த்து விட்ட பாசிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தையும் வெகுசன முண்ணணியையும் கட்டி எழுப்புவதில் சு(ஸ்)பானிஸ் கம்யூனிசு(ஸ்)ட் கட்சி மும்முரமாக உழைத்து வந்தது. எமது தலைமுறையில் வியட்நாம் எவ்வாறு உலக மக்களது மனச்சாட்சியை உலுப்பி சனநாயக வாதிகளையும் தேசபக்தர்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் ஒரு முகப்படுத்தியதோ அதே போன்று முப்பதுகளில் சின்னஞ்சிறிய சு(ஸ்)பெயின் உலகின் நல்லோரை நாலா திசைகளிலிருந்தும் ஈர்த்தது. எழுத்தாளர்கள் இலட்சிய பற்றுடன் சு(ஸ்)பானிச் குடியரசை ஆதரித்தனர்.

இக்காலகட்டம் அரசியல் விழிப்புணர்வை இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படுத்திய காலப்பகுதியாகும். சுபானியப் போரில் சர்வதேசப் படைப்பிரிவு ஒன்றின் தளபதியாய்ச் சமர் செய்த பி.அலெக்சாந்தர் கூறியிருப்பது போல, இக்காலப்பகுதியிலே, தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் போராட்டங்களிலும் எத்தகைய பரீச்சயமும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் கூட திடீரென அரசியல் தெளிவும் செயல் ஊக்கமும் பெற்றவராய்ப் பாசிசத்துக்கு எதிரான மகத்தான போர்களத்தில் லட்சிய வெறியுடன் குதித்தனர்.

1930 களைத் தொடர்ந்து சோவியத் இரசியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பாதையிலிருந்து நீங்கி, பிறிதொரு வர்க்க நலனை பிரதிபலிப்பாக மாறியது. உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் நலனையும் பிரதிபலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் மேல் அமர்ந்து ஆணையிடும் கட்சியாக தோற்றம் பெற்றது. சோவியத் இரசியாவால் வீழ்சியுற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளே இக்கால சூழலில் கம்யூனிசு(ஸ்)ட் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இருந்தனர். இதன் உடன் விளைவாக புரட்சியை அடுத்த சோசலிச(ஸ) சமூக வலையமைப்பில் சுரண்டப்படும் வர்க்க அமைப்பை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பிரயோகிக்கப்பட வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் மேல் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக மாறியது. மாவோ இத்தகைய போக்குகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியதுடன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது எழுத்துக்களின் ஊடாக எடுத்துக்காட்டியுள்ளார்.

புரட்சிக்கு பின்னர் சோவியத் இரசியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் குருசேவ் முதல் கொர்பக்சோ வரையில் முன் வைக்கப்பட்டு வந்த தீவிரவாத சிந்தனைகள் யாவும் சோவியத் இரசுயாவின் ஆட்சி தொழிலாள வர்கத்தின் கையிலிருந்து மாறி பூர்சுவா வர்கத்திற்கு மாறியதன் உடன் விளைவாக தோன்றியதே சோவியத் சமூக ஏகாத்தியமாகும்.

1962 ஆம் ஆண்டை தொடர்ந்து சோவியத் இரசுயாவால் ஏற்பட்ட சமாதான முறையில் பாராளுமன்றத்தை கைப்பற்றல் என்ற நிலைப்பாடானது சர்வதேச தொழிலாள வர்க்கம் குறித்த எவ்விதமான அக்கறையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட சோவியத் இரசுயாவின் சுயரூபத்தை காட்டி நிற்கின்றது. இது தற்செயல் நிகழச்சியல்ல, வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சர்வதேச ரீதியான கம்யூனிசு(ஸ்)டுகளின் தியாகங்களையும், உறுதிமிக்க போராட்டங்களையும் கூட நாம் உலக சரித்தத்தில் காணலாம். நசுபெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த காலகட்டமும், சீனாவின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடுகள் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இவ்வணியினர் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் பிண்ணயில் உழைக்கும் மக்கள் தான் சார்ந்த பதாகையை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காக தத்துவார்த்த நிறுவன வேலைத்திட்டங்களை முன் வைத்தனர்.

இந்தக் காலச்சூழலில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் ஏனைய நாடுகளிலிருந்து கம்யூனிசுட் கட்சிகளையும் பாதிக்க தொடங்கின. அதன் வெளிப்பாடாக தோன்றியதே மொசு(ஸ்)கோ, சீன சார்பு முரண்பாடுகளாகும். அதன் எதிரொலியை நாம் இலங்கையிலும் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கை பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட ஆழமான அரசியல் தத்துவார்த்த வாதங்கள் காரணமாக பொதுவுடைமை இயக்கம் 1964 இல் பிளவடைந்தது. இதன் விளைவாக அன்றைய சூழலில் முற்போக்கு அணியை வீறுடன் முன்னெடுத்த அறிஞர்களான பிரேம்சுஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, டொமினிக் யீவா, அகசுதியர் போன்ற சமாதான வழியில் பாராளுமன்ற பாதை என்ற தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைத்து. மொசுகோ சார்பை ஆதரித்து நின்றனர்.

சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்கள் அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி நின்ற இன்றைய நாளில் இந்த முரண்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல கருத்து மாறுபாடுகள் தோன்றின. இந்த சூழலானது பல புத்தியீவிகளை அறிவு தடுமாற்றத்திற்குட்படுத்தியது. இவ்வாறானதோர் சூழலில் இத்தகைய சர்வதேச அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை கைலாசபதி அவர்கள் எவ்வாறு அணுகினார். சோசலிசத்திற்கான பாதை குறித்து அவர் எத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதோர் வினாவாகும். கைலாசபதியின் பெரும்பாலான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் 1979 - 1982 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.

அன்றைய நாளில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த பிற்போக்கு சக்திகளும் உலக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அக்காலச் சூழலில் சோசலிச வேடமணிந்து சோவியத் இரசியாவும் உலக மேலாதிக்கத்திற்கெதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சோவியத் இரசியா குறித்த கைலாசபதி அவர்களின் பார்வை பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தது.

“கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல பாகங்களிலே சோவியத் யூனியன் ஊடுருவல் செய்து, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சில இடங்களிலே தனது சூத்திர பாவைகளான கியூபா, கிழக்கு யேர்மனி, வியட்நாம் முதலிய நாடுகளின் படைகளையும் ஆலோசனைகளையும் பேர்ர் தளபாடங்களையும் பயன்படுத்தி தனது செல்வாக்கினை உறுதிப்படுத்தி வந்திருக்கின்றது. மிக அண்மையில் ஆப்கானிசுதானில் தனது ஆதிக்கத்தை ரொம்பவும் அப்பட்டமாக, எதுவித ஒழிவு மறைவுமின்றி நடத்தி வருகிறது. பல நாள் ஏறிய குதிரை ஒருநாளைக்கு சறுக்கும் என்பது போல, இப்போது ஆப்கானிசுதானில் சோவியத் யூனியன் பரிதாபகரமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஆரம்பித்த சோவியத் எதிர்ப்பு நாளுக்கு நாள் வேகமடைந்து தற்சமயம் தலைநகரான காபூலுக்கே சென்றுவிட்டது.

தொடக்கத்திலே எதிர்ப்பு காட்டியவர்களை பிற்போக்குவாதிகள் என்றும், மதவாதிகள் என்றும் அலட்சியமாக தாக்கித் தலைமையில் உள்ள பொம்மை அரசாங்கம் வர்ணித்தது. எல்லைப்புற மாவட்டங்களிலே பாகிசுதான், ஈரான் ஆகிய நாடுகளும் சீனாவும் கிளர்சியாளருக்கு உதவி வழங்குவதாக பழி சுமத்தியது. ஆனால் அந்த அபாண்டப் பழி எடுபடவில்லை. ஏனெனில் ஆப்கானிசுதானிய நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய தேச பக்தர்கள் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள், தராக்கி ஆட்சியையும் அதற்கு பக்கபலமாக உள்ள சோவியத் யூனியனையும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். அங்குள்ள சோவியத் படை ஆலோசகர்கள் அதிகாரிகள் பற்றி முன்னர் அப்பகுதியில் கூறியிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன் தலைநகரான காபூலிலேயே பட்டப்பகலில் சண்டை நடந்திருக்கின்றது.

நகரின் எல்லையில் உள்ள பல - கிசார் கோட்டையில் நிலை கொண்டிருந்த அரசாங்க இராணுவப்படையினர் சில பிரிவுகள் கிளர்ச்சி செய்ததாகவும் அதற்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுந்ததாகவும் இராயதந்திர வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. கோட்டையிலிருந்த கிளர்ச்சி படைகளை மடக்கி அடக்குவதற்காக சோவியத் மீ - 24 வானுார்திகள்(கெலிகெப்டர்கள்) எறிகணைகள்(றொக்கெற்றுக்கள்) தாக்கினவாம். அதே சமயத்தில் சோவியத் டாங்கிகள் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின. சுமார் நான்கு மணிநேரம் நடந்த கடும் சண்டையின் பின் கிளர்ச்சியாளர்கள் அகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இரு தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

இன்று சோவியத் யூனியன் சிதைந்து சின்னாபின்னமாகியதற்கு அது கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணமாகும். சோசலிச போர்வையில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் சோவியத் இரசியா தமது மேலாதிக்க நலனை முன்னிறுத்துவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டு வந்தமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றார். இது அவரது மார்க்ஸிய லெனினிய மாசேதுங் சிந்தனை வழிப்பட்ட தெளிவை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு காலச் சூழலில் சோவியத் ரஷ்யாவின் மேலாதிக்க தன்மையானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விஞ்சு நிற்கும் அளவிலும் மாறியது. தோழர் மாசேதுங் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்று தற்காப்பு நிலையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தாக்கும் நிலையிலும் அதாவது தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் போக்கிலும் வேகம் காட்டி நிற்பதாக கணித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சோவியத் யூனியனது அபாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ளும் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய சமூகக்கடமை மார்க்ஸிய புத்தியீவிகளை எதிர்நோக்கியிருந்தது. கைலாசபதியின் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய அரசியல் விமர்சனங்கள் மேற்கூறிய நோக்கின் அடிப்படையிலேயே அன்று அமைந்திருந்தமை அக்கட்டுரையின் வாயிலாக இனங்கண்டு கொள்ள முடிகின்றது.

கம்பூச்சியா போன்ற நாடுகளின் விடுதலைப் போரின் அவசியம் குறித்து எழுதிய கைலாசபதி அவர்கள் அந்நாடுகளில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு கைக்கூலிகளாக தொழிற்பட்ட நாடுகளும் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிலேச்ச தாக்குதல்களை அந்நாடுகளில் நிகழ்த்தின என்பது குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

இந்தோசீனத்தில் வியட்நாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய காலமுதல் அதாவது கம்பூச்சியாவிலும் லாவோசிலும் சீனாவின் எல்லைப் புறங்களிலும் இராணுவ தாக்குதல்களை நடத்த தொடங்கிய நாள் முதல் ஒரு செய்தி அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுதான், வியட்நாம் புதியரக நச்சுப் புகையையும் ஒருவிதமான கதிர்வீச்சையும் பயன்படுத்துகிறது என்பதாகும். வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்திய படைகளும் நச்சு திராவகக் குண்டுகளையும் பயிர் அழிப்பு விசங்களையும் பெருமளவில் பயன்படுத்தின. அது பற்றி அறிந்த உலக மக்கள் மகா பாதகமான அச்செயலை கண்டித்தனர்.

அமெரிக்கா பயன்படுத்திய நச்சு திராவகங்கள் தென் வியட்நாம் வீழ்சியுற வட வியட்நாமிய படைகள் வசம் சேர்ந்தன. அவற்றையும் வியட்நாமியர் அப்போது கம்பூச்சியா லாவோசு(ஸ்) ஆகிய நாடுகளில் தேச பக்தி படைகள் தங்கியிருக்கும் பிரதேசங்களை அழிப்பதற்கும் பிரயோகிக்கின்றனர். வியட்நாமிய எல்லை பிரதேசங்களில் தற்பாதுகாப்பிற்காகச் சீன படைகள் பதிலடி கொடுக்க முற்பட்ட பொழுதும் இப்புதிய விசக் கருவிகளை வியட்நாமியர் பரீட்சித்துப் பார்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனமாக அலசி ஆராய்ந்த மேற்கு நாடுகளின் நிருபர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வியட்நாமியர் மூலமாக சோவியத் படையினர் சில நவீன நவீன கருவிகளை தென்னாசிய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

இந்தோனேசியா, விசக் கருவிகளின் பரிசோதனை களமாக ஆக்கப்பட்டுள்ளதா என சோவியத் யூனியனின் எதேச்சிகார போக்குகளை தெளிவாக அடையாளம் காட்டியதுடன் சோவியத் ஆலோசனையின் பேரில் வியட்நாம் போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்ட பொருளாதார திட்டம் குறித்தும் அதன் தோல்வி குறித்தும் வெளிப்படுத்துகின்ற கைலாசபதி இந்நாடுகளில் ஆமலாதிக்க பேரரசை உறுதிப்படுத்துவதற்காக “இந்தோ சீனா சமஸ்டி” என்ற பெயரில் ஏனைய நாடுகளை அடக்கி வைப்பதற்காக பெரியதோர் இராணுவப்படையை உருவாக்க நேர்ந்ததையும், அதன் பிண்ணணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின் தங்கிய சமூகத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்தும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ எவ்வாறு தமது மேலாதிக்க பணிகளுக்கு ஏதுவாக இருந்ததோ அதே போன்று சோவியத் ரஷ்ய ரகசிய ஒற்றர் சேவையும் (கே.யி.பி) சோவியத் அடக்குமுறைக்கு ஏதுவாக அமைந்திருந்தது பற்றியும் எழுதியுள்ளார். இவை யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்டமை பற்றியும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வைகளில் முக்கியமானது இந்தியா பற்றியதாகும். சோவியத் யூனியன் - இந்திய உறவுகள் பற்றியும் அதனடியாக எழுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகள், அதனால் உருவாக போகின்ற தீய விளைவுகள் பற்றியும் கைலாசபதியின் பார்வை பிரதானமானதாகும். உலக அரங்கிலே இந்தியா சோவியத் யூனியனின் ஊதுகுழலாக செயற்படுவதை உலகம் அறிந்துள்ளது. சர்வதேச மாநாடுகளில் ஏனைய மூன்றாவது உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து இந்திய நிலைப்பாடு வேறுபடுவதும் சோவியத் செல்வாக்கினாலேயாகும். இதற்கு அடிப்படை பொருளாதார பிடியே என்பது பலரும் அறிந்ததே. அத்துடன் இராணுவத்துறையில் சோவியத் யூனியனே இப்பொழுது முதலாம் நம்பர் சப்ளையராக விளங்குகின்றது.

அண்மையில் இந்திய விமானப்படை சோவியத் யூனியனிலிருந்து முதலாவது தொகுதி மிக்-23 ரக விமானங்களைப் பெற்றுள்ளது. அவற்றுடன் இரசியாவில் பயிற்சி பெற்ற விமானிகளும் திரும்பி உள்ளனர். பல கோடி பெறுமதியான மிக்-23 ரக விமானங்களை இந்தியா அடுத்த சில ஆண்டுகளுக்குள் பெற்றுக்கொள்வதற்கு உடன்பாடாகியுள்ளது. பிற நாடுகளிலுள்ள தளங்களை தாக்கவல்ல இவ்விமானங்கள் இரசியர்களின் ஆலோசனைப்படி பெறப்பட்டன. இந்திய விமானப்படை இப்பொழுது முற்று முழுதாக இரசிய விமானங்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கழுத்துப் பிடிப்புகளினாலேயே இந்தியாவின் குரல் உலக அரங்கில் ரஷ்யாவின் எதிரொலியாக இருப்பதை பலரும் அவதானித்துள்ளனர்.

நடுநிலைமை பற்றி திருமதி இந்திரா காந்தி எவ்வளவு தான் உரக்க கூறினாலும் இந்தியா இரசியா பக்கம் சார்ந்திருப்பதை மூன்றாவது மண்டல நாடுகள் நாளுக்கு நாள் உணர்ந்து வருகின்றன என விபரித்து விளக்குகின்ற கைலாசபதி இந்தியாவில் சோவியத் யூனியன் மேற்கொண்டுள்ள அரசியல் வலிந்து தாக்குதலை இந்தியாவில் உருவாகிவந்த இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் எவ்வாறு இனங்கண்டு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சோவியத் இரசியாவின் சமூக ஏகாதிபத்தியம் குறித்து விமர்சிக்கின்ற கைலாசபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் குறித்து விமர்சிக்க முற்படுவது அவரது தீட்சாண்யமிக்க பார்வையை எடுத்துக் காட்டுகின்றது. கைலாசபதி சோவியத்-அமெரிக்க மேலாதிக்க போட்டியால் யுத்த ஆபத்து குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளை என்றுமில்லாதவாறு திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பது கோடி டொலர் அமெரிக்க பாதுகாப்புக்குச் செலவிடப்படும். அடுத்த ஆண்டு இரண்டாயிரத்து இருநூற்று இருபது கோடி டொலர் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதத்தில் சென்றால் ஐந்து ஆண்டுகளின் பதின்மூவாயிரம் கோடி டொலர் இராணுவத்திற்கு செலவிடப்படும்.

ஏற்கனவே வலதுசாரி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் நாடுகளில் கூட இராணுவ ஆட்சிகளை நிறுவுவதற்கு அமெரிக்கா முனைந்துள்ளது. தென் கொரியா, பாகிசுதான், தாய்லாந்து, எல்சல்வடோர் முதலிய நாடுகளில் அமெரிக்காவின் கைங்கரியங்களைக் காணக்கூடியதாய் இருக்கின்றது. அணிசேரா நாடுகளின் ஒற்றுமையை குலைத்து தனக்கு வால்பிடிக்க கூடிய சில தேசங்களை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க இரசியா பெரும்பாடு படுகின்றது. இந்தியா, சிரியா, வியட்நாம், கியூபா முதலிய வால்பிடிகள் இதற்கு ஒத்தாசை புரிகின்றன.

இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டியின் காரணமாக மூன்றாம் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு கலாச்சார ஊடுருவல் குறித்து எழுதுகின்ற பேராசிரியர் அவை மனித குலத்தையே அழிக்க கூடியதோர் விசமியாக மாறியுள்ள அபாயத்தையும் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன் இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியானது எவ்வாறு மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்ககூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றியும் அதனை முறியடிக்கக் கூடிய மக்கள் இயக்கங்கள் எவ்வாறு உலகளாவிய ரீதியில் தோன்றி வருகின்றன என்பது பற்றிய அவரது பார்வை விசாலமானது.

இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் இவ்வல்ரசுகளுக்கிடையில் சிக்காமல் தமக்கான பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் தாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதனையும் தமது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கைலாசபதியின் ஈரான், ஈராக்பேர்ர் தொடர்பான பார்வை முக்கியமானது. சுருங்க சொன்னால் அமெரிக்க ரஷ்ய (சோவியத்) போட்டா போட்டி ஈரானை வெகுவாக பாதிக்கிறது. அதிதீவிரமான மதவாதியாக தோற்றமளித்தாலும் அயதொல்லா கொமெனி நடைமுறையில் பல விசயங்களில் நடுநிலைமை வகித்து வந்திருப்பது கவனிக்க்க்கூடியது. நாட்டின்உறுதிப்பாட்டில் கொமெனிக்கு மிகுந்த கவனம் உண்டு. அவர் தான் முரண்படும் சக்திகளையும் குழுக்களையும் பிரிவுகளையும் ஒருவாறு இழுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார். பலர் நினைப்பது போல கொமெனி அராயகவாதியல்ல. தான் தந்திரம் மிக்க அரசியல் தலைவர் என்பதை கொமெனி தக்கவாறு காட்டியுள்ளார்.

ஆனால் ஈரானின் பிரச்சனைகளை முழுமையாக எதிர்நோக்கவும் நாட்டை முன்னெடுத்து செல்லவும் கொமெனி மாத்திரம் போதாது. அவரது மதியழகும் இராயதந்திரமும் மாத்திரம் போதாது என்ற வகையில் ஈரான் மேலாதிக்க வல்லரசு போட்டியில் சிக்காது சுதந்திரமாக செயற்பட்டு வந்தமையையும் ஈராக் அவற்றினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் இறுதி விளைவாக வளைகுடா யுத்தத்தை ஆதரிக்க நேர்ந்ததையும் கைலாசபதி தீட்சயணத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இதே காலப் பகுதியில் இவ்விரு வல்லரசுகளின் நடைமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்களையும் அதன் உறுதிப்பாட்டையும் கைலாசபதி அடையாளம் காட்டத் தவறவில்லை. உதாரணமாக சீனா எத்தகைய தடைகளையும் தாண்டி பாட்டளி வர்க்க அரசியல் நலன்சார்ந்த பதாகையை எவ்வாறு முன்னெடுத்து செல்கின்றது என்பது குறித்தும், அரசியல் நிறுவன நடைமுறையில் எத்தகைய நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது என்பது பற்றியும் அழகுற விளக்குகின்றார். அத்துடன் சீனா தன்னை இழந்து கொள்வதாக வகையில் அமெரிக்காவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருந்தது பற்றியும் அது எத்தகைய நிதானமான தன்மையினை கொண்டிருந்தது பற்றியும் அவரது “சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது” என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். அதாவது நம்மில் பல புத்தியீவிகள் தமது சூழலில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து விலகி தொலைதூர தீர்வுகளுக்குள் ஒதுங்கி அதன் பிண்ணணியில் தமது கம்பீரத்தில் வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவர்களின் போக்கில் சர்வதேசியம் என்பது தமது சமகால சூழலிலிருந்து தப்பியோடுகின்ற போக்காகவே காணப்பட்டது. அதனால் கைலாசபதியை பொறுத்தமட்டில் சர்வதேச அரசியல் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்ததுடன் அவை எவ்வாறு இலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றார்.

1977 ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்தது. அதற்கு முன் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு இழைத்த மக்கள் விரோத தவறுகளை காரணமாக கொண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பலத்த ஆதரவுடனும் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தது. விதேசிய சார்பும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கு பயன்மிக்க பொருளாதார அரசியல் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் 1977இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள(தொட

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.