குழுவிடம் மனுதாரர் மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 12.05.2020 கொரோனாவுக்கு சித்த மருந்து - வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்கொரோனா தீயநுண்மி (வைரசு(ஸ்.)
கொரொனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ’வாதசுர குடிநீர்’ என்ற சித்த மருந்தை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
கொரோனா தொற்று தடுப்பு மருந்தாக ‘கபசுர குடிநீர்’பருக வேண்டும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். இதேபோல், வைரசு தொற்றினால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகளுக்கு ‘வாதசுர குடிநீர்’ உம் என்ற...... சூரணம் உகந்த மருந்து என்றும் அந்த சித்த மருந்தை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைவார்கள் என சித்த மருத்துவர் தணிக்காசலம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.எனவே ‘வாதசுர குடிநீர்’ என்ற சித்த மருந்தை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கொரோனா நோய் தொற்றுக்கு உகந்த மருந்தா என பரிசோதனைகளை நடத்தி, அவ்வாறு உகந்தது என்றால் உடனடியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கிருச்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘வாதசுர குடிநீர்’ வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவர்கள் குழுவிடம் மனுதாரர் மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.