குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கிளிநொச்சி-பளைப் பகுதியில் காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்பு!

03.05.2020....கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த பளை, முள்ளியடியைச் சேர்ந்த அனோஜ் என்ற மாணவனைக் காணவில்லை என்று கடந்த 28ஆம் திகதி அவருடைய பேத்தியாரால் பளை கா.து நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த சிறுவன் தாய் தந்தையர் அற்ற நிலையில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் புலோப்பளைக்கும் கிளாலிக்கும் இடைப்பட்ட களப்பு பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளதாக பளை கா.து தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன...

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.