சமூக விஞ்ஞான சிந்தனையாளர் பேராசிரியர்.க.கைலாசபதி எனும் கட்டுரையிலிருந்து
30.04.2020 ...."பிறப்பு கல்வி உத்தியோகம் என விரித்துப் பார்க்கும் போது அவற்றோடு இணைந்து நிற்கும் செயற்பாடுகள் வியக்கத் தக்கன.1953 முதல் 1982 வரையுள்ள முப்பது ஆண்டுகள் இலக்கியத் துறையில் கைலாசின் ஈடுபாடு,விளைவித்த இலக்கிய அறுவடைகள் யாவும் இமாலயச் சாதனைகள்.
பேராதனைப் பல்கலைக் கழகம்,கொழும்பு வித்தியலங்காராப் பல்கலைக் கழககம்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் விரிவுரையாற்றி நின்ற காலத்திலும் வெவ்வேறு துறைகளில் தலைவராக,தமிழ் பேராசிரியராகப் பொறுப்புகள் பலவற்றை வகித்து செயற்பட்ட காலத்திலும் அவரால் ஈர்க்கப் பட்ட மாணவர்கள் பல நூறு பேராவர்.இம் மாணவர்கள் வாயிலாக கைலாசை அறிந்து ஈர்க்கப் பட்டோர் அதனிலும் பன் மடங்காவர்.இந்த பரம்பலை மதித்தோர் அதிகமானோர் .பொறாமையடைந்தோர் ஒரு சிலர் இன்னும் கைலாசுக்கு சேறு பூச எத்தனித்து வீழ்ந்து நிற்பதையும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்"