குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

THE COLOR OF CORONA (Through the eye of conspiracy)

THE COLOR OF CORONA
(Through the eye of conspiracy)

Cont.....

Conspiracy – 03

எல்லா கொள்ளை நோய் வரலாற்றிலும் அதை கட்டுக்குள் கொண்டுவந்த நம்பிக்கையூட்டும் நாட்கள் இருந்திருக்கிறது.

covid 19 க்கும் ஒரு தீர்வு வரும்.

ஆனால் ......

தீர்வைக்காணமுதல், எவற்றையெல்லாம் கடக்க வேண்டுமோ என்பது எனக்கு தெரியாது.

மனிதவரலாறில் ஏறக்குறைய கிறிசுதுவுக்கு முன் 3000ஆண்டுகளுக்கு முன்னரே கொள்ளை நோய் நிலைகள் இருந்ததற்கு ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவற்றின் அடிப்படையில் முதலாவது சீனாவில்தான் ஏற்பட்டிருக்கிறது (இவங்களுக்கு இதே....வேலைய போச்சு …)

அதன் பின் epidemic ,pandemic என ஆக குறைந்தது 20இற்கும் மேற்பட்ட பிரபலமானவை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன் பொது தன்மையை பார்க்கும் பொழுது நோயின் அதியுச்ச பரம்பலின்போது ஆக குறைந்தது “ஒரு மில்லியன் ” உயிரிழப்புகளாவது ஏற்பட்டிருக்கிறது.

அதன் வீரியமான நிலவுகை அண்ணளவாக ஒரு வருடத்திலும் குறையாமல் இருந்திருக்கிறது.

இதையும் தாண்டி பல வருடங்களுக்கு மேலாக இழுத்துக்கொண்டு இருந்த வரலாறும் இருக்கிறது.

அதே போல்,குறிப்பிடட காலங்களுக்கொருமுறையான மீள்கையும் (recurrence ) நிகழ்ந்திருக்கிறது.

பெரும்பாலும் தடுப்பூசி அறிமுகத்துடனேதான் கட்டுப்பாடடைந்திருக்கின்றன.

ஆக நாமும் ஒரு மில்லியன் வரையான உயிரிழப்பையும் ஒரு வருடம் வரையான வீரியமான பரம்பலுக்கும் ஆளாவோமா என கணிக்க முடியாது.

அல்லது நிலமை அதையும் தாண்டி "ஐலேசாவோ ..." தெரியவில்லை!

வெளிப்படுத்தப்படட தரவுகளின் அடிப்படையில் நாம் இப்பொழுதுதான் இரண்டு இலட்சம் இறப்புகளை அண்மித்திருக்கிறோம்.

ஆச்சரியம் என்னவென்றால் Corona வின் தாய்வீட்டில் தரவுகள் சந்தேகத்தை சரமாரியாக கிளப்புகினறன.

இதனடிப்படையிழும் இன்னொரு conspiracy வெளிவந்து கலவரப்படுத்தி விட்டிருக்கிறது.

இந்த குழப்பமும் சீனாவில் தான்.

அதாவது சீனா சொல்கின்ற எண்ணிக்கையும், அங்கு சேமிக்கப்பட்டிருக்கும் எரியூட்டப்பட்டவர்களின் அஸ்திகளும் பலமடங்குகளில் வித்தியாசப்படுவதை புகைப்படங்களுடன் கூடிய செய்திகளாக பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.

Hong Kong ஐ சேர்ந்த Jennifer zeng என்ற மனிதஉரிமைகள் ஆர்வலர் , சீனாவின் முக்கியமான மூன்று தொலைத்தொடர்புநிறுவனங்களின்(China mobile ,China uni horn ,china telecommunication ) புள்ளிவிபரத்தை வைத்து தனது ஊகத்தை வெளிப்படுத்துகிறார். மூன்று நிறுவனங்களும் சேர்ந்து மில்லியன்களுக்கும் அதிகமான பயனாளர்களின் தொலைபேசி பாவனையில் இல்லையென்றும், அவர்களுடன் தொடர்புகொள்ளமுடியவில்லை என்றும் தெரிவித்துஉள்ளது.

இவர்களெல்லோரும் Mobile பாவிப்பதை நிறுத்திவிடார்களா?

அல்லது

Mobile பாவிக்க முடியாத , வேறு உலகம் எங்காவது சென்றுவிடர்களா , என்ன?

அமெரிக்காவின் இறப்புக்கள் தற்போது சொல்லப்படுவதை காட்டிலும் அதிகமாக இருக்கவேண்டும் .

அங்கு, covid 19 சோதனை செய்திருக்காவிடில் ,covid 19 ஆல் இறந்தால் கூட , covid 19 இறப்பென பதியப்படாமல் அது pneumonia (நுரையீரலழற்சி ) இறப்பென பதியப்படுகிறதென ,April 7 இல் CNN Health இல் வெளிவந்த கட்டுரை சொல்கிறது.

இவையெல்லாம் ஒரு பானை சோற்றிற்கு பதம் காட்டும் விடயங்கள். நம்மூரிலும் Ada derana ஒரு bar chart போட்டது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

இறப்புகள் உண்மையில் எவ்வளவு என்று இறந்தவர்களுக்கு மட்டும்தான் சரியாக தெரியும்.

.Conspiracy – 04

.அவதானித்து பார்த்தீர்களானால் covid 19 தொடர்பாக இரண்டு பேர் கதைக்க தொடங்கினால்,

" உங்களுக்கு தெரியாதா என்ன , இதெல்லாம் இயற்கை சமநிலைக்காக நடக்கிற சமாச்சாரம்,. எல்லாம் ஒரு சமநிலைக்கு வரத்தானே வேணும், " என்று ஒரு வியாக்கியானம் வராமல் கதை முடியாது.

அதற்கு- " இங்க பாருங்க சிங்கம் சந்தியில நிக்குது ...அங்க பாருங்க road ல மான் படுத்துக்கிடக்குது.." என்று ஆதாரங்கள் வேறு.

இயற்கையின் சமநிலைக்காக அல்லது, சனத்தொகையின் அதிகரிப்பிற்குரிய துலங்கலாக தான் இதெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றது என்று சொல்ல மூளை உடனே ஒப்பவில்லை.

கடந்து வந்த கொள்ளை நோய்களில் 80% ஆனவை உலக சனத்தொகை தற்பொழுது இருப்பதாய் விட அரைவாசியாக இருக்கும் பொழுதே ஏற்பட்டிருக்கின்றன.

இயற்கை - சமநிலைக்காக ஒரு virus ஐ தோற்றுவித்து அதை பரவ செய்துகொண்டிருக்கிறதென்பதெல்லாம் அபத்தம்.

இயற்கையின் இயங்கு அலகான சாகியத்தின் (eco system ) சமநிலையானது உணவுவலை,காலநிலை, தரைத்தோற்றம் அவற்றிற்கிடையன சிக்கலான இடைத்தொடர்பு என்பவற்றில் தங்கியுள்ளது.

மனித செயற்பாடுகளே சமநிலையை குழப்புகின்றன. சமநிலைய பேணுவதற்காக இயற்கை நோயை ஏற்படுத்திஇருக்கிறது என்பதற்கான எந்தஒரு எண்ணக்கருவோ மாதிரிகளோ நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.

மாறாக மனிதன் இயற்கையோடு ஏற்படுத்தும் இடையீடுகள் முரணானதாகவோ அல்லது பாதுகாப்பற்றதாகவோ( வௌவால் soup போடுதல், சிம்பன்சி குரங்கை பலாத்காரப்படுத்தல்) இருக்கும் பொழுதுதான் இவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன.

சாக்கியத்தின் சமநிலையை குழப்பினால் , அது இன்னொரு சமநிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் அல்லது அழிந்து வேறு ஒரு சாகியமாகிவிடும் விடும் என்பதுதான் நியதி.

அதைவிடுத்து நாங்கள் கண்மூடித்தனமாக செய்து தொலைக்கின்ற வேலைக்கெல்லாம் இயற்கை சமநிலையை உருவாக்கிக்கொள்ளும் என்று நினைத்து கொள்ளவேண்டாம்.

இவனென்ன conspiracy ஐ பற்றி மட்டும புலம்பிக்கொண்டிருக்கிறான் என நினைக்க கூடாதென்பதற்காக,

அதை பற்றி மட்டும் சொல்லி முடிக்கவிரும்பவில்லை. தேடலின் போது கிடைத்த வேறு சில விடயங்களும் இருக்கின்றன.

.Observation – 01

.இதெல்லாமிருக்க , எவ்வாறு சில நாடுகள் Covid 19 இனால் ஏற்படட நிலையை சரியாக கையாள்கின்றன. இதை எழுந்தமானமாக சொல்லிவிட முடியாது.

ஆசுதிரேலியாவின் ICMA நிறுவனம் GRID எனப்படும் ஒரு சுட்டியை உருவாக்கி அதன் மூலம் covid 19 இனை சரியான முறையில் கையாளுகின்ற நாடுகளை தரப்படுத்தியுள்ளது. எதனால் அந்நாடுகளுக்கு இது சாத்தியப்படுள்ளது என்பதையும் ஆராய்ந்திருக்கிறது.

சரியான நேரத்தில் எல்லைகளை மூடியாமை , ஊரடங்குகள் , விழிப்புணர்வுகள், எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் கூட்டாக நிலைமையை எதிர்கொண்டமை, பரந்த அளவிலான contact tracing , Screening tests , என்பனவாகும்.

இதனடிப்படையில் நியூஸிலாந்து முதலிடத்திலும் , சிங்கப்பூர் இரண்டாமிடத்திலும் ,இலங்கை பத்தாமிடத்திலும் ஜப்பான் பன்னிரண்டாமிடத்திலும் இருக்கின்றன.

.Observation – 02

."அறிவியலில் இவ்வளவு வளர்ந்து விட்டோமே ஒரு தடுப்பூசியை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?" என அங்கலாய்ப்பது உண்மை.

முதலில் தடுப்பூசியை உருவாக்க பொருத்தமான நோயாக்கியாக இருக்கவேண்டும்.

தடுப்பூசி விலங்குகள் , மனிதர்கள் என பல படிநிலைகளில் சோதிக்கப்படவேண்டும்.

சோதித்தால் தான் அது வெற்றிகரமாக தொழிற்படுவதை அறியமுடியும்.அல்லது தடுப்பூசியால் நோயை விட அதிகமான பாதிப்பு உடனடியாகவோ அல்லது நீண்டகாலத்திலோ ஏற்படலாம்.

இவ்வாறெல்லாம் செய்து முடிக்க பலவருடங்கள் தேவைப்படும்.

அதைவிட இந்த pandemic ஐ முறியடிக்க உலக சனத்தொகையில் 60 தொடக்கம் 70% மனிதர்கள் தடுப்பூசி ஏற்ப்படவேண்டும்.

அவ்வளவு தடுப்பூசியையும் தயாரிக்கவேண்டும் , இவ்வாறாக ஏராளமான நடைமுறைசிக்கல்கள் உள்ளன இந்த தடுப்பூசி விடயத்திலும் இருக்கின்றன.

இதுவரையிலும் நடந்ததை பார்த்தால்,

அமெரிக்காவில் Seatle நகரில் நேரடியாகவே மனிதர்களில் தடுப்பூசி சோதனை தொடங்கப்பட்டுவிட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் oxford இல் அடுத்த trial நடந்துகொண்டிருக்கிறது.

pharmaceutical யம்பவான்களான gsk உம் Sanofi உம் இணைந்து களத்திலிறங்கிவிட்டன.

ஆகவே காத்திருப்போம்.

ஆனால் திரிபடைந்து முப்பதிற்கும்(Professor Li Lanjuan) மேற்பட்ட உப வகைகளை உருவாகிவிட்டிருக்கும் இந்த Virus எதிராக அது அவ்வளவு சுலபமாக இருக்கப்போவதில்லை.

என்னதான் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாலும் Natural history of disease , Recurrence ,Carrier status , Long term complication சார்பாக Natural history of disease ஐ அறியும் வரை எப்பொழுதும் ஆபத்தே.சுபெயின் இல் மீண்டும் corona ,சீனாவில் மீண்டும் corona என்ற செய்திகள் மறைமுகமா இதைத்தான் காடி நிற்கின்றன.

அழிவென்பது அமெரிக்க படங்களில் வருவது போல பயமுறுத்தும் பின்னணியோடும் graphics effect ஓடும் வரப்போகும் ஒன்றல்ல, அது இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.