இன்று திங்கட் கிழமை தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3,4 என்பவற்றில் முடிவடையும் நபர்கள் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைவோர் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தியவசிய பொருட் கொள்வனவுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அது குறித்த விளக்கத்தை மேற்படி அளித்திருந்தார்.