குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

இது பேராசிரியர் கைலாசபதி மாதம் எதிர்வரும் சித்திரை ஐந்தாம் திகதி(05.04.2020)பேராசிரியர்.1..4

இது பேராசிரியர் கைலாசபதி மாதம் எதிர்வரும் சித்திரை ஐந்தாம் திகதி(05.04.2020)பேராசிரியர் பகுதி...1.......4 மட்டும்.

க. கைலாசபதி அவர்களின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் இந்த மாதம் முழுவதும் அவர் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பதிவிட இருக்கிறேன் வரும் மார்கழி மாதம் வருகின்ற அவரது நினைவு நாளில் ஒரு முழுமையான தொகுப்பு ஒன்றை வெளியிடும் நோக்கில் இம் முயற்சி முன்னெடுக்கப் படுகிறது.பேராசிரியரிடம் படித்த மாணவர்கள் அவரது மாக்சிய கொள்கைகளால் கவரப் பட்டவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் உங்கள் மனப் பதிவுகளை எழுதுங்கள். ஏற்றப்படுகிறது  16.04.2020

அவர் எழுத்தும் வாழ்வும் அவர் சார்ந்த அரசியல் கோட்பாடுகளும் எதிர்கால சந்ததியினருக்கு இன்றும் புதிதாய் எழுச்சியூட்டும் அறிமுகமாய் அமையும் வாருங்கள் தோழர்களே கரம் கோர்ப்போம்.

கைலாசபதி ஆய்வு வட்டம் 2005ஆம் ஆண்டு "கைலாசபதி தளமும் வளமும் " எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருந்ததது அந்த தொகுப்பில்

1.பேராசிரியர்.எம்.ஏ.நுகமான்

2.கவிஞர்.இ.முருகையன்

3.பேராசிரியை.சித்திரலேகா மெளனகுரு

4.கலாநிதி.செ.யோகராயா

5.முற்போக்கு விமர்சகர்.லெனின்.மதிவாணன்

6.கல்வியாளர்.அ.முகம்மது சமீம்

7.பேராசிரியர்.சி.மெளனகுரு

8.மேனாள் முதன்மையர்.பால.சுகுமார்

9.எழுத்தாளர்.நீர்வை பொன்னையன்

10.எழுத்தாளர்.செ.கணேசலிங்கன்

11.கவிஞர்.ஏ.இக்பால்

12.கல்வியாளர்.க.சண்முகலிங்கம்

13.கலாநிது.வ.மகேசுவரன்

14.எழுத்தாளர்.தெ.மதுசூதனன்

16.பேராசிரியர்.எசு.சிவலிங்கராயா


ஆகியோர் காத்திரமான கட்டுரைகளை வழங்கியுள்ளனர்.


பேராசிரியர் கைலாசபதியின் இதுவரை வெளி வந்த நூல்கள்



1.பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966


2.தமிழ் நாவல் இலக்கியம்,1968


3.Tamil Heroic Poetry,Oxford,1968


4.ஒப்பியல் இலக்கியம்,1969


5.அடியும் முடியும்,1970


6.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971


7.இலக்கியமும் திறனாய்வும்,1976


8.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976


9.சமூகவியலும் இலக்கியமும்,1979


10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979


11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum


12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980


13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980


14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)


15.இலக்கியச் சிந்தனைகள்,1983

பாரதி ஆய்வுகள்,1984


16.The Relation of Tamil and Western Literatures


17.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986


18.On Art and Literature,1986


19.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)


20.On Bharathi,1987


21.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)


22.Tamil (mimeo)(co-author A,Shanmugadas)


23.தமிழ் வீர நிலைக் கவிதை

மொழிபெயர்ப்பு கு.வெ.பாலசுப்பிரமணியம்


ஓவியம் செளந்தர்




பேராசிரியர் கைலாசபதி மாதம்


பதிவு-2


செ.பொ.கோபிநாத் அவர்களின் இணயப் பக்கத்திலிருந்து


பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி.


பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.


பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார்.


கைலாசபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்பு பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957).


பல்கைலக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.


1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.


அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்தார்.


பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.


கைலாசபதி அவர்கள் சனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்..


மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.


இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு 06.12.1982 இல் இயற்கை எய்தினார். முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.


Balasingam Sugumar

3 ஏப்ரல், முற்பகல் 9:31 ·

பேராசிரியர் கைலாசபதி மாதம்


பதிவு 3


பேராசிரியர் க.கைலாசபதியின் படைப்புகள்; ஒரு பார்வை-(தம்பு. சிவசுப்பிரமணியம்)

பேராசிரியர் க.கைலாசபதியின் படைப்புகள்; ஒரு பார்வை


தமிழ் இலக்கிய மரபிலே புதிய பரிமாணங்களை உருவாக்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி ஆவார். அத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்டு செழுமை மிக்க பணியை ஆற்றியவர் என்ற வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இமயமாக உயர்ந்து நிற்கின்றார்.


‘வாழ்வும் எழுத்தும்’ என்னும் மகுடத்தில் பிறநாட்டு நல்லறிஞர் சிலரை, குறிப்பாகப் பிரித்தானிய எழுத்தாளர்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் மாணவராக இருந்த காலத்தில் தமது கட்டுரைகளை ‘தமிழ்மணி’, ‘இந்து சாதனம்’, ‘சுரபி’ போன்ற பத்திரிகைகளிலும், கல்லூரியின் இலக்கியமன்றச் சஞ்சிகைகளிலும் இடம்பெறச் செய்தார்.


‘தினகரன்’ நாளிதழின் ஆசிரியராக இருந்த காலத்தில், ‘தினகரன்’ பத்திரிகை புதிய தளத்தில் நின்று செயற்படத் தொடங்கியது. அதன் அடி ஊற்றாக நின்று ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலான பணியை ஆற்றினார். பல இலக்கியக் கர்த்தாக்களை உருவாக்கிய பெருமையும் கைலாசப் பதியைச் சாரும்.


1961ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த இவர் 1966ல் இலண்டன் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநீதிப்பட்டத்துக்காக ‘கிதிணியிழி சிரிஞிலியிவி யிலிரிகிஞிவீ’ என்னும் ஆய்வேட்டை வழங்கினார்.


இந்த ஆய்வேடு தமிழுலகுக்குப் பல புதிய திறப்புகளையும் எல்லைகளையும் அறிமுகப்படுத்தியது.


சங்ககாலம் வாய்மொழிப் பாடற்காலம் என்றும், சங்ககாலம் வீரநிலைக்காலம் என்றும் கைலாசபதி இந்நூற்கண் குறித்துள்ளார். இந்த ஆங்கில நூலை” குமரன் புத்தக இல்லம் வெளியிட்டு வைத்துள்ளது.


‘அடியும் முடியும்’ புவியியல் ஆய்வுகள் சூரியனிலிருந்து பிரிந்து உலகம் உருவாகிய காலத்தையும் உயிரினத்தின் பரிணாமவளர்ச்சியையும் மனிதனின் தோற்றத்தையும் அறிவியல் ஆய்வுகள் திட்டமாக வரையறை செய்துள்ளன.


இம்முறையில் தமிழின் தொன்மையையும் ஒரு காலவரையறைக்கு உட்பட்டதாகும் என்கிறார் கைலாசபதில் அகலிகைக் கதையின் அடிமுடியை வால்மீகியிலிருந்து புதுமைப் பித்தன், முருகையன் வரை புதுப் பொருளில் விளக்குகிறார்.


சங்க இலக்கியத்தில் ஆரம்பித்த கடவுள் வாழ்த்து இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வாழ்த்தாக முதன்மையாக மாறுவதை நிரூபிக்கிறார். சிலம்பின் அடியையும் மூடியையும் மற்றொரு கட்டுரையில் தேடுகிறார். நந்தனாரைப் பற்றிய கட்டுரையில் சாதியின் வர்க்கத்தன்மையுடன் தேசியத் தன்மையையும் ஆராய்ந்துள்ளார். கலாநிதி க. கைலாசபதியின் ஆய்வு நூல்களில் குறிப்பிடத்தக்க சிறப்புப் பெறும் நூல் இது வாகும் என்று இயம்பியுள்ளார்கள்.


‘பாரதி ஆய்வுகள்’ மகாகவி பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தியவர் மிகச்சிலர், பாரதியாரின் வரலாறு, அரசியல், பொருளியல், அழகியல், உளவியல், சமூக வியல் முதலிய துறைகளின் நோக்கில் இந்நூலின் ஆய்வு அமைந்துள்ளது. பாரதியின் கவிதைகளை மேல்நாட்டுப் பிரபல கவிஞர்களுடன் ஒப்பு நோக்கியும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.


பாரதியின் பாடல்களைப் பல பதிப்பகங்களும், தனிநபர்களும் நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றின் பாடபேத ஆராய்ச்சிக்குறிப்புகளும் அலசப்பட்டுள்ளன. மகாகவி பாரதியாரின் பங்களிப்புகளை அழமாகவும் அவதானமாகவும் இந்த நூலில் உள்ள இருபத்திரண்டு கட்டுரைகளும் ஆராய்க்கின்றன. பாரதியை எளிமையாகக் கற்றறிவதற்கும், அவரது படைப்பாற்றலைப் புரிந்து கொள்வதற்கும் இந்நூல் துணைபுரியும் என்பது உண்மை.


‘ஒப்பியல் இலக்கியம்’ இலக்கியமும் அதன் விளை நிலமாகிய சமுதாயமும் உலகப் பொதுவான நியதிகளுக்கு ஏற்ப நடப்பனவே, இந்நூலிலுள்ள கட்டுரைகள் யாவற்றிலும் ஒப்பியல் நோக்கு இழையோடியிருப்பதைக் காணலாம்.


‘ஒப்பியலின் தத்துவங்கள்’ என்ற கட்டுரை இலக்கியத்தின் நிலையையும் ஒப்பியல் ஆராய்ச்சியின் விஞ்ஞானப் பண்புகளையும் ஆராய்க்கிறது. தமிழில் ஒப்பியல் ஆய்வு நடந்திருப்பதையும் ‘தமிழில் வீரயுகப்பாடல்கள் என்ற கட்டுரை கூறும். பழமை போற்றும் பண்பும் காதலின் கட்டுப்பாடும் கிரேக்க இலக்கியத்துடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.


தமிழகச் சித்தர் சீன தாவோயிகளுடன் இணைந்து பார்க்கப்பட்டுள்ளனர். சிந்துக்குத் தந்தை என்ற பாரதி சுந்தரம் பிள்ளையுடனும் ஷெல்லி, பைரன், வால்ட் விட்மன் ஆகிய மேல்நாட்டுக் கவிஞருடனும் ஒப்பு நோக்கி ஆரயப்பட்டுள்ளார். இத்தகைய ஒப்பியல் ஆய்வு பொருள் விளக்கத்திற்கும் பேருதவி புரியும் என்பது திண்ணம்.


‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’- ‘நில உரிமைக் காரணாகவும், முதலாளியாகவும், பொருள்களை நுகர்வோனாகவும், சேவைகளைப் பெறுவோனாகவும் விளங்கிய கோயில், வங்கியாகவும், பள்ளிக்கூடங்களாகவும், பொருட் காட்சிச் சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்களாகவும் விளங்கியது.


சுருங்கக்கூறின். அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும் கலைக்களிலும் சிறந்தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப் பெற்றது மட்டுமன்றி? அவற்றையெல்லாம் தர்ம உணர்விலிருந்து உதித்த மனிதாபிமானத்தால் செம்மைப்படுத்தியதில், மத்திய கால இந்துக் கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உலக வரலாற்றிலேயே அருமையாகத்தான் உள்ளன எனலாம்” எனக்கூறும் பேராசிரியர் நீலகண்ட சாசுதிரியாரின் கவிநயம் வாய்ந்த சொற்களை நாம் மறப்பதற்கில்லை.


ஆனால் சிறப்பைக் காணும், நாம், அதேவேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில் எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து- சில சமயங்களில் ஆளும் வர்க்கமாகவே- காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிகவும் முக்கியமானதாகும்.


ஏனெனில் கருணையும், சாந்தமும், அமைதியும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னாலேயே பல அநாகரிகச் செயல்களும் நடந்தேறியுள்ளன.


மன்னரும் வேளாளரும் சேர்ந்து கோயிலைக் கேடயமாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும் வேளாள வர்க்கத்தினரின் செல்வக் குழந்தைகளாக இருந்தன. நூலாசிரியர் நுணுக்கமாக நோக்கியுள்ளார்.


இந்நூலில் அன்றைய சமுதாய அமைப்பின் யதார்த்த நிலையை எடுத்துக்கூறி, தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார் பேராசிரியர் கைலாசபதி. ஒரு குறிப்பிட்ட வர்க்கம் எல்லா நன்மைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையை கோயில் என்ற களம் அமைத்துக் கொடுத்திருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.


வர்க்க பேதத்தை உருவாக்குகின்ற இடமாகவும் கோயில் மையப்படுத்தப்பட்டுள்ளது. அறிவும் தகவல்களும் சரியானபடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற மனப்போக்குடன் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி.


‘இலக்கியமும் திறனாய்வும்’- என்னும் நூலைத் தந்த பேராசிரியர் கைலாசபதி கலையையும் இலக்கியத்தையும் மார்க்சியக் கண்கொண்டு நோக்கினார். இலக்கியத்துறையில் இவர் செயற்பட்ட தளம் வேறு, இலக்கிய ஆய்வாளர், இலக்கியப் புலமையாளர் என்ற வகையில் சமூக வளர்ச்சிப் போக்குக்கும் இலக்கியச் செல்நெறிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கினார். கைலாசபதியின் மிகப் பெரும்பாலான எழுத்துக்கள் இவ்வகைப்பட்டவைதான்.


மார்க்சியம், இலக்கிய வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை இவற்றில் வெளியிடப்பட்டது. எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப் பிராணி. காலம் தோறும் சமுதாயத்தில் முரண்பாடுகளும் போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


இவற்றின் மத்தியில் வாழும் எழுத்தாளன் இவற்றுக்கு முகங்கொடுத்து புரிந்து கொள்வதோடு அவற்றுக்கான தீர்வு கொள்ளும் தகைமையிலும் அவனது இலக்கியப் படைப்பின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது.


திறனாய்வு என்பது வெறும் வெறும் வெறும் விவரணமோ, கூற்றுத் திறனோ அன்று, அழகியல் சார்ந்த முயற்சியாக இருக்கும் வேளை ஆய்வறிவு சார்ந்த ஓர் ஆயுதமாகவும் அது விளங்குகின்றது. இப்பின்புலத்தில் மொழியும் இலக்கியமும், இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்கால தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றி இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது.


இலக்கியமும் திறனாய்வும்’ என்னும் நூலைத் தந்த பேராசிரியர் க. கைலாசபதி ‘திறனாய்வுப் பிரச்சினைகள்’ என்னும் நூலையும் தந்துள்ளார்.


இந்நூல் அரை நூற்றாண்டுகால தமிழிலக்கியப் பரப்பை விமர்சித்தவர்களின் முடிவுகளை புதிய கண்ணோட்டத்தில் திறனாய்வதைக் காணலாம். இக் காலகட்டத்தின் இலக்கிய முனிவராகக் (ரிசியாகக்) கருதப்பட்ட க.நா.சு. வை மையமாகக் கொண்டு ‘எழுத்து’ சஞ்சிகை ஆசிரியர் சி.சு. செல்லப்பா, வெ. சாமிநாதன், முத்துசாமி, சுந்தரராமசாமி, இரகுநாதன் முதலானோரின் கருத்துக்களையும் ஆராய்கிறார்.


வாசகருக்காக எழுதுவது, கலைஞன்- பரந்துபட்ட மக்கள், இரசனை முறைத் திறனாய்வு, வாழ்வு வேறு கலை இலக்கியம் வேறு என்ற கூற்று, கலை கலைக்காக போன்ற கருத்தியல் பிரச்சினைகளையும் இந்நூல் திறனாய்வு செய்கின்றது. திறனாய்வு என்பது எப்போதும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் தோன்றும், தத்துவப் போராட்டங்களின் வெளிப்பாடாகவும் அமையும் என்று க.கைலாசபதி கூறுவார்.


“வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆய்வை பிறிதொரு கட்டத்திற்கு வளர்த்தெடுத்ததில் கைலாசபதியின் பங்கு மகத்தானது” என்று பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் இயம்பியுள்ளார்.


“கவிதை நயம்” - இந்த நூலை பேராசிரியர் க. கைலாசபதி கவிஞர் இ. முருகையனுடன் இணைந்து இந்தப் படையலை முன்வைத்துள்ளார். மனிதன் படைத்து இலக்கிய வடிவங்களுள் கவிதையே காலத்தால் முந்தியது. இசைத்தன்மை, ஓசைச் சிறப்பு உள்ளது. வாய்விட்டுப் பாடுவதால் பாட்டு என்போம்.


கவிதை இன்பம் தருவதோடு உயர் இலட்சியங்களையும் கொண்டது. பழையன, புதியனவாக பல்லாயிரக்கணக்கான கவிதைகள் தமிழில் உள்ளன. இவற்றிடை சிறந்தவற்றை தேடவும் சுவைக்கவும், உணர்பவனைப் பண்படுத்தவும் சிறந்த கவிதைகள் உதவும், அத்துடன் நல்லறிவு பெறுவதற்கும் கவிதையை உரைத்துத் தரங்காணும் முறையையும் இந்நூல் எடுத்துக் கூறுகின்றது.


உவமை, உருவக, கற்பனை, ஓசைநயம், சொல்வளம், பொருளாற்றல் முதலியன கவி பற்றிய அனைத்துத் துறைகள் சார்ந்தும் இந்நூல் ஆராய்கின்றது. கதையை நன்கு சுவைக்கவும் ஆய்ந்தறிந்து நலனாயவும் இந்நூல் உதவியாக இருக்கும்.


‘இலக்கியச் சிந்தனைகள்’- “இலக்கிய ஆர்வலர்களால் நன்கு மதிக்கப்பட்ட பேராசிரியர் க. கைலாசபதி இலக்கியத் திறனாய்வாளராகவும், திறமையும் வளமும் மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பதினாறு தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டதுடன் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்” என்று சொல்லுகின்ற போது அவருடைய இலக்கியச் சிந்தனைகள் எவ்வாறு அமைகின்றது என்பதை நோக்குவோம்.


பழந்தமிழ் இலக்கியத்தையும், நவீன எழுத்துக்களையும் விஞ்ஞான பூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வாதியாகவும் முதல்வராகவும் விளங்கிய பேராசிரியர் க. கைலாசபதியின் பத்தொன்பது கட்டுரைகளை இந்நூலில் காணலாம்.


‘விமர்சனம் என்பது உலகை விபரிப்பது மாத்திரமன்றி அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு... ஓயாத பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும்’ என்ற அவரது கலை இலக்கிய விமர்சனம் பற்றிய உயர்ந்த கோட்பாடு இந்த நூலிலுள்ள கட்டுரைகளிலேயும் ஊடுருவி நிற்பதைக் காணலாம்.


‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்’ இலங்கை, மலேசியா முதலிய நாடுகளின் தமிழிலக்கிய வளர்ச்சி நெறியை தமிழ் நாட்டு வளர்ச்சிப் படிநிலையுடன் இந்நூல் ஒப்புநோக்க முயலும், மத்தி காலக் கோவில்கள் பற்றி நவீனப் பார்வையில் இந்நூல் கூறும். தமிழ் நாவல் வரலாறு, நாடகம், தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகியவை பற்றியும் இந்நூலிலுள்ள கட்டுரைகள் விவரிக்கும். ஈழத்தின் முற்போக்கு முன்னோடி இளங்கீரன் “பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துகளும்” என்னும் நூலை வெளியிட்டிருந்தது. அந்நூலில் அவருடைய இலக்கியப் போக்குகள் பற்றி சிந்தனைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.


‘ஈழத்து இலக்கியமுன்னோடிகள்’- இந்த நூலில் நாவலரின் இலக்கிய நோக்கு, பத்திராபதி சரவணமுத்துப் பிள்ளை, அம்பலவாண நாவலரின் கல்விப் பணி, நாவலாசிரியர் நாகமுத்து, பாவலர் துரையப்பா பிள்ளை போன்றோரின் விபரங்கள் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகள் என்பன பரவலாகத் தரப்பட்டுள்ளன.


இந்நூலில் விவரிக்கப்பட்ட ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் அனைவருமே இந்தியாவுடன் இடையறாத தொடர்புகள் வைத்திருந்தனர். சிலர் தமிழகத்திலே தங்கியிருந்து தமிழ் பணியும் சைவப் பணியும் ஆற்றியவர்கள். ஈழத்துப் புலவர்களை ஆராயும் போது, தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.


ஈழத்து இலக்கிய வளர்ச்சி இன்னொரு வகையில் பொதுவாகத் தமிழிலக்கியம் பற்றியதாகவும் அமைந்து விடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த தமிழ் புலவர்கள் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள் அருகலாக இருந்த அக்காலத்தில் தமிழறிஞர்களும் புலவர்களும் அடிக்கடி சந்தித்து, அளவளாவியது மட்டுமல்லாது நூல்கள்,


‘இரு மகாகவிகள்’ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்தியக் கவிஞர்கள் இருவர். வங்கக் கவிஞர் தாகூர் வங்க மொழில் கவிதைகள் எழுதினர்.


தமிழகக் கவிஞன் பாரதி, தமிழில் பாடினான். தாகூரால் வங்க மொழியும் வங்கமும் வளம்பெற்றது. பாரதியால் தமிழ் மொழியும் தமிழகமும் புகழ்பெற்றது. இருவருமே பாரதம் முழுமைக்கும் பொது வானவர்கள். ஏன், உலகுக்கே பொதுவானவர்கள்.


இருவருமே உலக மகாகவிகள், இரு கவிஞரும் இந்திய தேசியக் கவிஞர். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள். இரு கவிஞர்களிடையேயும் ஒற்றுமைகள் நிலவிய போதும் வாழ்விலும் கொள்கைகளிலும் வேற்றுமைகளும் இருந்தன. அவற்றையெல்லாம் ஒப்பியல் நோக்கில் இந்நூல் ஆராயும்.


‘கைலாசபதி முன்னுரைகள்’ கலாநிதி க. கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.


இவை 1967ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வு நூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை.


இலக்கிய ஆர்வலர்களால் நீண்ட காலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னுரைகளை அவ்வப்§¡பது கைலாசபதி எழுதி வழங்கினார். குறித்த இலக்கிய வகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன.


செவ்வானம், நெடும்பகல், கண்டறியாத நான் சாக மாட்டேன், பைந்தமிழ் வளர்த்த பதின்மர், காலதரிசனம் தோணி வருகிறது, முட்கள், ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறார்.


ஆக்க இலக்கியமும் அறிவியலும், ஒளி நமக்கு வேண்டும், மண்ணும் மனித உறவுகளும், சிரமம் குறைகிறது, ஈழத்துச் சித்தர்கள், தோட்டக் காட்டினிலே, தமிழ் நாவல்களில் மனித உரிமையும் மக்கள் போராட்டமும், நாடகம் நான்கு காலகட்ட பிறப்பு( யுகப் பிரவசம்), பட்டுக் கோட்டையின் பாட்டுத்திறம், இயக்கமும் இலக்கிய போக்குகளும், தமிழியற் கட்டுரைகள், தமிழில் இயங்கியல்- ஒரு பார்வை, மலை நாட்டுப் பாடல்கள், அரசிகள் அழுவதில்லை ஆகிய நூல்களுக்கே கைலாசபதி முன்னுரைகளை எழுதியிருந்தார்.


‘தமிழ் வீரநிலைக் கவிதை’ கலாநிதிப் பட்டத்திற்காக கைலாசபதி ‘கிதிணியிழி சிரிஞிலியிவி யிலிரிகிஞிவீ’ என்னும் ஆய்வேட்டை வழங்கியிருந்தார். அதைத் தமிழில் பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ என்றும் பெயர்த்துள்ளார்.


இந்நூல் தென் இந்திய பண்டைய வீர நிலைக் கவிதைபற்றிய ஆய்வாகும். சிறப்பாகக் கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீரநிலைக் கவிதைகளுடன் ஒப்பு நோக்கி தமிழ்ப் பண்டைய பாடல்களின் மேம்பாட்டையும் இவ் ஆய்வு நூல் விளக்குகிறது.


பண்டைய தமிழ்க் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவர்க்குரிய தகுதிவாய்ந்த இடத்தையும் விரித்துக்கூறும் ஒப்பீட்டு இலக்கிய மரபில் பண்டைய பாணர்கள், புலவர்களின் மரபையும் சமூகப் பணியையும் விரித்துக் கூறும் நூலாகவும் இது அமைந்துள்ளது. “ஆய்வியல் நெறிகள் முற்றிலும் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஆய்வேடு” என முன்னாள் பேராசிரியர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமனியம் மதிப்பிட்டுள்ளார்.


“பேராசிரியர் கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம் என்ற அறிஞர் அ. முகம்மது சமீம் எழுதிய கட்டுரையில்.... “கலையும் இலக்கியமும் அவை தோன்றிய காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைக்கின்றன என்பது மார்க்சிய சித்தாந்தம். பேராசிரியர் கைலாசபதி ஒரு மார்க்சிய வாதி, அவர் கலையையும் இலக்கியத்தையும் மார்க்சிய கண்கொண்டுதான் பார்த்தார்.


சங்க இலக்கியங்களை, மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து தமது முடிவுகளை தமிழுலகிற்கு வைத்ததில் தான் கைலாசபதியின் மோதாவிலாசம் தெரிந்தது. தொன்மையான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமுகம், முதலாளியச் சமூகம் என்று சமுக அடிப்படை இந்த இலக்கியங்களை ஆராய்ந்தார். இருபத்தி நான்காவது நினைவு தினத்தையொட்டி ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ நூல் வெளிவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.


“சமூகவியலும் இலக்கியமும்” - மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத்துறையாக வளர்ந்து வரும் சமூகவியலும் இலக்கிய ஆய்வுக்கு இன்று உட்பட்டுள்ளது. இந்நூலில் சமூகவியலும் இலக்கியமும் தனிக்கட்டுரையாக விளங்கும் இப்புதிய நோக்கில் தன்னுணர்ச்சிப் பாடல்கள், இசைத் தமிழ், நாட்டார் பாடல்கள் இலக்கியத் திறனாய்வின் நலன் ஆகிய துறைகள் தனித்தனியாக இந்நூலில் அலசப்பட்டுள்ளன. அத்துடன் தமிழிலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் சந்தனைகள், இலக்கியத் திறனாய்வும் உணர்வும் நலனும் ஆகிய கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


‘நாவலர் பற்றி கைலாசபதி’ பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், நாவலர் வகுத்த புதுப்பாதை, நவலரும் இந்து மத மறுமலர்ச்சியும், நாவலரல் அடிச்சுவட்டில் தேசியம், நாவலர் இலக்கிய நோக்கும் பணியும், ஆறுமுக நாவலர் சபாபதி நாவலரும், பாரதியும் நாவலரும் ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பிடித்துள்ளன.


இத்தகைய நூல்களை பலதந்து, தமிழின் வளர்ச்சிக்கும், அவறின் மேம்பாட்டுக்கும், இலக்கியச் செல்நெறிகளுக்கும் புதிய பாதையைக் காட்டி நின்ற பேராசிரியர் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்று மிளிர்கின்றார். அவருடைய நூல்கள் யாவற்றையும் தேடி எடுத்துப் பதிப்பித்து வெளியிட்ட ‘குமரன் புத்தக இல்லம்’ பெருமை பெற்று நிற்கின்றது.


தம்பு. சிவசுப்பிரமணியம்-{தினகரன்-கூராயுதம் }



Balasingam Sugumar

4 ஏப்ரல், முற்பகல் 8:31 ·

பேராசிரியர் கைலாசபதி மாதம்


பதிவு-4


பேராசிரியர் கைலாசபதியும் சமூகவியலும்


லசி குணரத்தினம்


ஒரு சம்பாசணையூடாக இந்தக் கட்டுரையினை ஆரம்பிக்கிறேன். எனக்கும் என் நண்பருக்கும் இடையிலான உரையாடல் இது. நான் கைலாசபதி தொடர்பாக இம்முறை உவங்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர், எந்தக் கைலாசபதி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்குத் தெரிந்த வரை கைலாசபதி என்றால் அது பேராசிரியர் க. கைலாசபதி மட்டும் தானே. ஏன் இவ்வாறு கேட்கிறாள் என்று யோசித்தவாறே, யாழ் பல்கலைக்கழகத்திலே மண்டபம் அமைத்துள்ளார்களே அந்தக் கைலாசபதி என்றேன் நான். அதற்கு அவள், ஓ அவரா!! மண்டபம் அமைத்துள்ளார்கள் என்று தெரியும். ஆனால் எதற்கு, ஏன் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். ஆனால் என்னுள் தான் பல வினாக்களை அது எழுப்பிற்று.


ஆக இதிலிருந்து ஒன்று தெரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகில் பல கைலாசபதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தமிழ்ச் சேவையும் இடம்பெற்றிருக்கின்றது. கைலாசபதி தொடர்பான தேடலில் ஈடுபட்ட போது பொ.கைலாசபதி தொடர்பான தகவலும் கொசுறாகக்; கிடைத்தது. ஈழத்து இலக்கியம் பயின்றவர்கள், தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பேராசிரியர் கைலாசபதி என்கின்ற போது பேராசிரியர். க. கைலாசபதி தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால், சாதாரண மக்களுக்கும், வேறுதுறைகளிலே ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கைலாசபதி என்கின்ற போது எந்தக் கைலாசபதி என்ற குழப்பநிலை தோன்றுவது தவிர்க்க இயலாதது. எனவே, யார் இந்தக் கைலாசபதி? அப்படி என்ன செய்துவிட்டார் தமிழ் உலகுக்கு? என்ற வினாவை எழுப்புவோருக்கு அறிமுகம் தேவையற்றவரான பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதியின் அறிமுகம் அவசியம் தேவையானதே.


அத்துடன் பேராசிரியர் கைலாசபதி தொடர்பாக இப்பொழுது எழுதுவதற்குத் தேவை என்ன உள்ளது என எண்ணுவோருக்குச் சரியான பதில் 'வரலாறு மிக முக்கியம் மக்காள்' என்பதே. நாம் வந்த பாதை நமக்குச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய சந்ததியினர் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தின் காரணத்தால் ஈழத்து இலக்கியப் போக்கினையே சமூக ஊடகத்தினூடாகத் தவறாகப் பயன்படுத்தும் தன்மைகளைத் தான் அதிகம் காண்கின்றோம். எனவே கோவிலின் அத்திவாரத்தைச் சரியாகப் போட்டால் தான் கோபுரம் அழகாகத் தெரியும். அந்த அடிப்படையை, மூலாதாரத்தை நமக்கு வழங்கிய முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்வது தமிழினதும் தமிழ்ச்சமூகத்தினதும் வளர்ச்சியை அளவிடவும் நாம் சரியான பாதையில் செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.


பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். தன்னை முன்னிறுத்தி ஈழத்தில் இலக்கிய பரம்பரையொன்றினை உருவாக்கிய கெட்டிக்காரர். திறனாய்வு சம்பந்தமான பேச்சுக்களே தமிழுக்கு இழுக்கு என பாரம்பரிய தமிழ் விற்பன்னர்கள் எண்ணிக் கொண்டிருந்தவேளை, திறனாய்வில் உச்சநிலை கண்டவர்.


தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி.


இப்படியாகக் பேராசிரியர் கைலாசபதியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் ஒரு கடல். அதனை அளந்து கூறுவதென்பது இயற்கைக்கு முரணானது. அவ்வாறே கைலாசபதியின் இலக்கியப் பணியினை வரையறுத்துக் கூறுவதுமாகும். தமிழ் உள்ளகாலம் வரைக்கும் கைலாசபதியும் அவர் தம் தமிழ்த் தொண்டும் நின்று நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். எனவே தான் இக்கட்டுரை, பேராசிரியர் கைலாசபதியின் சமூகவியல் பார்வையினையும் அவருடைய இலக்கியங்கள் எவ்வாறு சமூகத்தைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன என்பது தொடர்பாகவும் ஆராயவுள்ளது.


பேராசிரியர் சு. வித்தியானந்தரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்து பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்து முதலாவது தலைமையாசிரியராகப் பதவியேற்று அது பின்னர் பல்கலைக்கழகமாக உயர்வதற்கு முன்னின்று உழைத்த பெருந்தலைவர். ஒரு மனிதன்; பிறப்பது வேண்டுமானால் சாதாரண நிகழ்வாக இருக்கலாம் ஆனால் இறப்பது சரித்திரமாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில்; அப்படிப்பட்ட சரித்திரத்தை உருவாக்கிய வரலாற்று நாயகன் பேராசிரியர் கைலாசபதி. பொதுவாக இலக்கிய கர்த்தாக்கள் இறந்த பின்னர் தான் உலகம் அவர்களைக் கொண்டாடும். சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை அதற்குச் சிறந்த உதாரணம். ஆனால் கைலாசபதி தமிழுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கின்ற போதே மக்களாலும் கலைஞர்களாலும் ஆராதிக்கப்பட்டவர்.

கைலாசபதியின் வாழ்க்கைக் குறிப்புக்கள் அடங்கிய முழுமையான நூல் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றி அவரது ஆசிரியர்களும், மாணவர்களும், சகபாடிகளும், கலைஞர்களும் எழுதிய கட்டுரைகளினை ஆதாரமாகக் கொண்டு அவரின் ஆரம்ப வாழ்க்கை, இலக்கிய பயணம், சமூக சிந்தனையினூடான இலக்கிய பங்களிப்பு என்பவற்றை அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. வெறுமனே இலக்கியங்களைப் படைத்துத் தரப்படுத்தலையும் ஜனரஞ்சகத்தையும் வெளிப்படுத்தும் சனரஞ்சகவாதியாக மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாது தனது இலக்கியம், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.


பேராசிரியர் கைலாசபதியினால் எழுதப்பட்ட நூல் வரிசை பின்வருமாறு:


இரு மகாகவிகள், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது), இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும் (அவர் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து எழுதியது), சமூகவியலும் இலக்கியமும், திறனாய்வுப் பிரச்சினைகள், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் என்பன பேராசிரியரால் தமிழில் எழுதப்பட்டன.


தமிழ் கீரோயிக் பொயற்றி (Tamil Heroic poetry) , த ரிலேசன் ஒவ் தமிழ் அன்ற் வெசு(ஸ்)டேன் லிற்றேயர் (the relation of Tamil and western literature), ஒன் ஆர்ட் அன்ட் லிற்றேயர் (On Art and literature), (on barathi) போன்ற நூல்கள் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. எனினும் அவரின் பல இலக்கியங்கள் அவர் அமரத்துவம் அடைந்த பின்னர் தொகுக்கப்பட்டவையாதலால் இலக்கியங்கள் தோற்றம் பெற்ற சரியான காலவரையறையினை மேற்கொள்வது இயலாததாகின்றது.


முன்னுரைகள் மாத்திரம் நாற்பத்தி மூன்றுக்கு மேல் எழுதியுள்ளார். பத்திரிகைக்கும், இதழ்களுக்கும், சஞ்சிகைக்கும் எழுதிய பல கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன. இவை அனைத்துமே அவரது காலத்திலும் காலத்தைக் கடந்தும் சமூகத்தில் பெரும் புரட்சியினை ஏற்படுத்துவனவாய் அமைந்துள்ளன என்பது மனங் கொள்ளத்தக்கது.


இலங்கை, பிரிட்டிசாரின் காலனியாதிக்கத்தின் கீழிருந்த காலப்பகுதியில் ஆங்கில மோகம் உச்சந் தொட்டிருந்த காலத்திலும் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று அதில் முதல் தரத் தேர்ச்சி பெறுவதென்பது மிகப் பெரிய சாதனையே. அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் கைலாசபதி அவர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதே வாழ்நாள் சாதனையாக இன்றும் இலங்கையிலுள்ள இளைஞர்கள் குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கைலாசபதி, ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து வந்து, இலங்கையில் இருந்து கொண்டே தன் வாழ்நாளெல்லாம் சேவையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை கொண்டவராக விளங்கிய கைலாசபதி, தன்னுடன் இணையும் நட்பு வட்டாரத்தையும் அவர்களுக்கே உரித்தான தனித்திறமையை வளர்ப்பதில் அவர்களுக்கு உற்ற துணையாக ஊக்குவிப்பாளராகவும், சிறந்த படிக்கல்லாகவும் திகழ்ந்துள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.


1933ம் ஆண்டு சித்திரை மாதம் ஐந்தாம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் கோலாலம்பூர் விக்டோரியா இன்ஸ்டிடியூட்டிலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கற்றார். இங்கு கற்குங்காலை மாக்ஸியவாதியான ஆசிரியர் மு. கார்த்திகேசனின் தொடர்பு கிடைத்ததுடன், பொதுவுடைமைவாதியாகக் கைலாசபதி மிளிர்வதற்கு இவரின் தொடர்பும், அவரின் பாசறையில் கல்வி கற்றமையுமே அடிப்படையாக அமைந்தன.


பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது உயர்கல்வியைக் கற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியதுடன் அங்கு தமிழ்ப் பாடத்தைத் தனது சிறப்புத்துறையாகத் தெரிவு செய்து அதில் முதலாம் தரத்தில் சித்தியும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற வேளையில், பேராசிரியரி. சு. வித்தியானந்தர், பேராசிரியர். வி. செல்வநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற ஈழத்தின் புகழ்பூத்த பேராசிரியர்களைத் தனது குருவாகக் கைவரப் பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தின் இளங்கதிர் சஞ்சிகைக்கு அவர் எழுதிய 'நாடும் நாயன்மாரும்' என்ற கட்டுரையின் மூலம் சிறந்த ஆய்வாளராகத் தமிழுலகில் தன்னை வெளிப்படுத்தினார்.


பல்கலைக்கழகக் கல்வியை முடித்த கையுடன் லேக்கவுசு(ஸ்) பத்திரிகையான தினகரனில் (அரச பத்திரிகை) உதவி ஆசிரியராக இணைந்து பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பத்திரிகைத்துறைக்கும் அக்கால இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றினார். தினகரன் பத்திரிகையில் அவர் பணிபுரிந்த காலப்பகுதி பத்திரிகை வரலாற்றின் சொர்க்ககாலம் என வர்ணிக்கப்படுகின்றது.


அதன் பின்னர், மறுபடியும் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் இம்முறை மாணவராக அல்ல, உதவி விரிவுரையாளராக. அதன் பின்னர் விரிவுரையாளராகி, புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்தில் பேமிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பினை மேற்கொண்டார். அங்கு கைலாசபதியின் ஆய்வுக்கான மேற்பார்வையாளராக இருந்த பேராசிரியர் யோர்ச் தொம்சன் கார்ல்மாக்சின் சீடராக மிளிர்ந்தவர். அவரின் உறுதுணையுடன் ஏலவே பொதுவுடைமைத் தத்துவம் விதைக்கப்பட்ட கைலாசபதி சமூகவியலின் மாக்சியச் சிந்தனைகளில் மூழ்கித்திளைத்து மாக்ஸியவாதியானார்.


திறனாய்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கைலாசபதி தனது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காகத் தெரிவு செய்த துறை எதுவெனத் தெரியுமா? அது ஒப்பியல் இலக்கிய நோக்கு. அவர் சங்கத் தமிழ்ப்பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி தனது முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரின் ஆய்வு 1968ம் ஆண்டு ஒக்சு(ஸ்)போர்ட் பல்கலைக்கழக அச்சகம் தமிழ் ஹீரோயிக் பொயற்றி (Tamil Heroic Poetry) தமிழ் வீரயுகக்கவிதைகள் என்ற நூலாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.


அங்கிருந்து மீண்டும் இலங்கை வந்தவருக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கிடைத்து, அங்கே தமிழ்த்துறைத் தலைவராகக் கடமைப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்தியாலங்கார வளாகத்தின் இந்து நாகரீகத்துறை தலைவர் பதவி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இருந்த போதே வெளியிடங்களில் கலை கலாசார நிறுவனத்தொடர்புகளையும் பேணிக் கொண்டார். அதன் பயனாக பல்வேறு சபைகளுக்கும், திணைக்களங்களிலும் முக்கிய பொறுப்பேற்றுக் ஈழத்தின் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உந்துதலாக மிளிர்ந்தார். அமெரிக்காவின் கலிபோர்ணியப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்

.

இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் வளாகம் ஒன்றை ஆரம்பித்த போது அதன் தலைவராகவும் தமிழ்ப்பேராசிரியராகவும் கைலாசபதியவர்கள் கடமை புரிந்தார். ஆமலே குறிப்பிட்டது போன்று, இந்த வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்று இன்று தலை நிமிர்ந்து சிறப்பிடம் பெறுவதற்குப் பேராசிரியர் கைலாசபதியின் பெரும் பணி ஈழத்து வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. அப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியாவும் அவர் செயற்பட்டுள்ளார்.


இது பேராசிரியர் கைலாசபதியின் வாழ்க்கை வரலாற்றின் பரந்து கிடக்கும் இலக்கியப் பணிகளின் சிறு அறிமுகம் மாத்திரமே. இங்கு அவரின் குடும்பப் பின்னணி பற்றியும் குறிப்பிடுவது சாலப்பொருந்தும். ஏனெனில் கைலாசபதியின் ஒவ்வொரு வெளியீடுகளிலும் அவரின் மனைவியின் உறுதியும் உறுதுணையும் வெளிப்பட்டு நிற்குமாற்றைக் காணலாம். 'மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும்' என்ற நூலைத் தன் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து ஆய்வுரையாக வெளியிட்டுள்ளார். சர்வமங்களம் அவரின் சர்வமாகத் திகழ்ந்தார் என்பது கைலாசபதியின் சமகாலத்தவரின் ஆணித்தரமான கருத்தாகும். இவர்களுக்கு சுமங்களா, பவித்ரா என்ற இரு மகள்மார் உள்ளனர்.


இவ்வாறாக இலக்கிய வாழ்க்கையினைச் சிறப்புற மேற்கொண்ட கைலாசபதியவர்கள், குடும்பப் பின்னணியிலும் மேன்மையான வாழ்க்கை வாழ்ந்து தனது எழுத்துக்கள் மாத்திரமல்ல. இயல்பு வாழ்வும் கூட சமூகவியல் தளத்தினைப் பின்னணியைக் கொண்டதாக அமைத்துள்ள பாங்கைக் காணலாம். 1982ம் ஆண்டு இவ்வுலகை விட்டு அமரத்துவமடைந்த வேளை தமிழ் இலக்கிய உலகே தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்திருந்த தன்மையினை அக்கால இலக்கியங்களுடாக அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. அத்தகு பேராசிரியர் கைலாசபதியின் வரலாற்றினை கைப்பிடிக்குள் அடக்கி விட முடியாது.


தமிழ் இலக்கிய, கல்வி, கலை, கலாசார, அரசியல் துறைகளில் சிறப்புத் தன்மை கொண்ட ஆய்வறிவாளர் (Intellectual) என்று போற்றத்தக்கவர் கைலாசபதி அவர்கள். புறநிலைக் கொள்கையிலே (Practical criticism) கைதேர்ந்தவர். இவர் இலக்கிய வரலாற்றாசிரியராக இருந்து திறனாய்வைச் செய்திருக்கின்றார். திறனாய்வுக் கட்டுரைகள், தனியாட்கள் ஆய்வாராய்ச்சி என்பவற்றைத் தமிழுலகில் சீரிய முறையில் அமுல்படுத்தியுள்ளார். தனிமனிதப்பண்புகளை அதிகம் வெளிப்படுத்தியது சமூகவியலே. கூட்டான சமுதாய வாழ்க்கையினைப் பாடுபொருளாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்திலே தனிமனிதப் பண்புகளையும் தனிமனிதத் தன்மையினையும் அறிமுகப்படுத்தியவராக கைலாசபதி விளங்குகின்றார். ஆகவே சமூகவியல் தொடர்பாகவும் அதில் மாக்ஸிசம் தொடர்பாகவும் அறிந்து கொள்வதன் மூலமே கைலாசபதி சமூகவியல் கருத்துக்களை குறிப்பாக மாக்ஸிசத்தினை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பது புலனாகும்.


ஒரு சமூகவியலாளன் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று கரிசனை கொள்வதுடன், தற்போது சமூகம் எவ்வாறு உள்ளது, அதன் கடந்த காலம், அதன் மாற்றங்கள் என்பது தொடர்பாக ஆராய்ந்து வரலாற்றுடன் இணைத்து சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படுத்துபவனாக இருக்க வேண்டும். அந்த வகையிலே பேராசிரியரான கைலாசபதி தனது இலக்கியத்திலே சமூகக் கருத்துக்களை உட்புகுத்தி சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக விளங்கினார். பேராசிரியரின் கூற்றாகவே தனது இலக்கியங்கள் சமூகவியல் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றுள்ளன என விளக்கக் காணலாம்.


கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும் போது அவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக் காண்கிறேன். திறனாய்வுத் துறையில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கிய கால முதல் கலை இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வந்திருக்கிறேன். மார்க்சீயத்தைத் தழுவிக் கொண்ட நாள் முதலாக அதன் முனைப்பான கூறுகளில் ஒன்றாகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்குக் கொண்டு வந்துள்ளேன். சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்விற்கு என்னை இட்டுச் சென்றது. இவற்றின் பயனாக இலக்கியத்தை அறிவியல் அடிப்படையிலே அணுகக் கற்றுக் கொண்டேன். (க.கைலாசபதி, 1979)


சமூகவியல் மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத் துறையாக வளர்ந்து வருகின்றது. அது இன்று இலக்கிய ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்கின்றார். கைலாசபதி கூறும் சமூகவியல் மாக்ஸிசம் சார்ந்ததாகவே இருக்கக் காணலாம். அவரின் அனைத்து ஆக்கங்களிலும் பொதுவுடைமைத் தத்துவம் இழையோடியிருக்கும் பாங்கை அவதானிக்க முடியும்.


சமூகவியிலின் தந்தையென வர்ணிக்கப்படும் ஓகசு(ஸ்)ட் கொம்ற் புலக்கொள்கைவாதம் சார்ந்ததாக சமூகக் கட்டமைப்பினை ஆராய்ந்ததுடன் சமூக மாற்றத்தை விரும்பாதவராக பாரம்பரிய சமூகத்திலே ஊறித் திளைத்தவராகக் காணப்படுகின்றார். அவர் கார்ல் மாக்சிற்கு எதிரானவராகவே முதலாளித்துவ சமூகத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் தத்துவங்களை வெளிப்படுத்தினார் என்பது கைலாசபதியின் வாதம். மாக்சிசவாதியாகத் தன்னை வரித்துக் கொண்டமையால் மாக்ஸ் கூறும் சமவுடைமையே சமூகக்கட்டமைப்பின் வாதமாக முன்வைக்கின்றார். இளங்கோவின் ஊழிக்கோட்பாட்டுத் தத்துவத்தைப் புறக்கணித்து விட்டு சிலப்பதிகாரத்தைப் பற்றிய ஆய்வு செய்வதென்பது கடினமென்கின்றார். ஆக எழுத்தாளர்களின் வகிபங்கான தனிமனித இயல்பே முன்னிற்பதுடன் வாசகர் பற்றிய அக்கறை குறைந்தவராகவே கைலாசபதி விளங்கியிருக்கக் காணலாம்.


எனினும் கைலாசபதியின் ஆய்விலக்கியங்கள் மரபு வழியினின்றும் சற்றே விலகி புதிய ஆய்வுப் பரம்பரையினை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. ஆய்வுரைகளுக்கான உசாத்துணையினை வழங்குகின்ற போது நூலாசிரியர், நூலின் பெயர், பதிப்புப் போன்ற விடயங்களே உள்ளடக்கப்படும். ஆனால் கைலாசபதி உசாத்துணையில் நூலாசிரியர் பற்றியோ நூல் பற்றியோ அடிக்குறிப்பொன்றினை வழங்கும் மரபைக் காணலாம். அத்துடன் வாசகர்களுடன் தான் பகிர விரும்பும் நூற்பட்டியலையும் அவ்விலக்கியத்தின் முடிவில் இணைத்து விடுவார். அது ஒரு ஆர்வமிக்க வாசகர் வட்டத்தை அவர் பக்கம் திருப்பக் காரணமாக இருந்தது. அவரின் இத்தகைய முயற்சி ஆய்வுலகிற்குப் புதியதாக இருந்ததுடன் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குச் சிறந்த வடிகாலாக அமைந்துள்ளது. அவரின் கட்டுரையின் முடிவில் அமைந்த சான்றாதாரங்களைப் பார்த்த போது நாமும் ஏன் அந்த உசாத்துணை அமைப்பைப் பயன்படுத்தக் கூடாது? என்ற எண்ணத்தை இக் கட்டுரையாளருக்கும் ஏற்படுத்திற்று.


வரலாறு என்பது தானே தோன்றியதன்று. அது மனிதனாலும் சமூகத்தினாலும் படிப்படியாக புனையப்பட்டு கட்டியமைக்கப்பட்டது என்பதே மாக்ஸின் வாதம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தமக்கேற்றாற் போல் உலகை மாற்றியமைத்துக் கொண்டார்கள். முதலாளித்துவ சமுதாயம் தமது இருப்புத்தன்மையினை உறுதிப்படுத்த உழைக்கும் கூலித் தொழிலாள மக்களை தமது இலாப நோக்கங்கருதி உருவாக்கினர். அதனூடாக முதலாளிமார் ஆள்பவர்களாகவும் உழைக்கும் வர்க்கத்தினர் அடிமைகளாகவும் ஆளப்படுபவர்களாகவுமே அமைகின்றனர். உதாரணமாக, தெற்காசிய நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் சாதிக்கட்டமைப்பில் உயர்சாதி மக்கள், தாழ்சாதி மக்கள் என்ற வேறுபாட்டை, செய்யும் தொழிலைக் கொண்டு வேறுபடுத்தி ஆளும் உயர்சாதியினர் தாழ்சாதி மக்களை அடிமைகளாகவே கொண்டாடிய வரலாறு இன்று வரை தொடர்கின்றதே, எதனால்? நிலவுடைமைப் பொருளாதாரத்தை மையப்படுத்தி பாகுபாடுகளை முதலாளித்துவ சமூகம் உருவாக்கிய ஒற்றைக் காரணம் தானே.


கைலாசபதி காலவோட்டத்தைக் கருத்திற்கொண்டு இலக்கியம் படைத்தார். ஒவ்வொரு இலக்கியமும் தோற்றம் பெற்றதற்குப் பின்புலத்தில் காரணம் உண்டு என்றும் அது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற் போல் மாற்றங் காணும் என்றும் நம்பினார். இன்றிலிருந்து வேறுபட்டதான முன்னைய வரலாறு என்று ஒன்று உண்டு என்றும் அதனைக் கண்டறிவது தான் வரலாறு மற்றும் இலக்கிய ஆய்வு என்பதும் கைலாசபதியின் வாதம். நிகழ்காலத்துத் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கின்றது என்று கூறும் கைலாசபதி. அகலிகை வரலாற்றையும் கண்ணகி கதையினையும் மேற்கோள் காட்டி ஒப்பியலிலக்கிய ஆய்வில் பெண்களுக்கான கற்பு நெறி, ஆணாதிக்கச் சிந்தனை போன்றன வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களுடனும் உளவியலுக்கு முன்னுரிமை கொடுத்தும் தோற்றம் பெற்றுள்ளன என்கின்றார்.


இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகும். தமிழ் சமுதாய வரலாற்றை ஏனைய எழுத்தாளர்கள் வேறு விதமாக நோக்க கைலாசபதியோ கார்ல் மாக்சின் மாக்சிய தத்துவத்திலிருந்து ஆராய்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்றாற் போல் தான் இலக்கியம் படைக்கப்பட்டு வரலாறு தோற்றம் பெற்றுள்ளது என நிறுவுகிறார். சங்க இலக்கிய காலம் (கி.பி. 250 வரையான காலப்பகுதி), பக்தி இலக்கிய காப்பிய காலம் (கி.பி.600-1300), நவீன இலக்கிய காலம் (கி.பி.19ம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை) என மூன்று காலங்களை முக்கியத்துவப்படுத்தி காலபேத ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன் சமுதாயச்சிந்தனைகள், அக்கால இலக்கியங்களில் தனித்தன்மை பெறுமாற்றை விரிவாகக் கூறியிருக்கக் காணலாம்.


கார்ல் மாக்சு(ஸ்) எவ்வாறு சமுதாயத்தை, நிலத்தையும் மூலதனத்தையும் மையப்படுத்திக் கணிப்பிட்டு வகைப்படுத்தினாரோ அதனைப் போன்று கைலாசபதியும் மாக்சைப்பின்பற்றி ஒவ்வொரு தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தினையும் வகைப்படுத்துகின்றார். பழம் பொதுமைச்சமூகம், அடிமைச்சமூகம், நிலவுடைமைச்சமூகம், முதலாளியச்சமூகம், சமவுடைமைச்சமூகம் என்கின்றார். தமிழ் இலக்கிய வரலாறு தமிழர் தம் தனித்தன்மை பொருந்திய பொற்காலம் என வரலாற்றாய்வாளர்கள் உரைப்பர். ஆனால் கைலாசபதியோ தமிழரின் நிலைமாறுகால மாற்றம் ஏற்பட்ட காலமாக சங்ககாலத்தமிழர் வரலாற்றை சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கக் காணலாம்.


முன்னர் குழுவுக்கும் கணத்துக்கும் பொதுவாக இருந்த சகோதரத்துவ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய 'பெருஞ்செய்யாடல்' ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்கால கட்டத்திலே தவிர்க்க முடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன. அக்காலத்திலே புலவராக மட்டுமன்றி அறிவராகவும் வரலாற்றாசிரியராகவும் போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர்கள் இந்த நடைமுறை விதிகளைப் பிரசித்தப்படுத்தினர். சமுதாயம்  (குமுகாயம) முழுதற்கும் பொதுவானவையல்ல. இவ்விதிகள் தலை மக்களுக்கிடையேயுள்ள 'கண்ணியமான' உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படை எனலாம். (க.கைலாசபதி)


கைலாசபதியின் போக்கில் சமூகவியல் இரண்டு வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்று சோசலிசக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது. மற்றையது சோசலிச விரோத நெறியில் வளர்ந்தது என்கின்றார். அந்த வகையிலே ஓகசு(ஸ்)ட் கொம்ற், கெர்பெட் சு(ஸ்)பென்சர், வில்லியம் கிரகம்சும்னர், மாக்சு(ஸ்) வெபர் போன்ற சமூகவியலாளர்கள் சோசலிச விரோத நெறியில் வளர்ந்துள்ளதோடு சமூகவியல் கோட்பாடுகளையும் வகுத்துள்ளார்கள் என்கின்றார். அவர்களின் சமூகவியல் தொடர்பான கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதுடன், சமுதாய மாற்றத்தினை விரும்பாதவர்களெனவும் வர்ணிக்கின்றார்.


மேற்கூறியோரது கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதாயின், சமுதாயத்தையும் சமுதாய அமைப்பையும் உள்ளவாறே கொண்டு அதன் இயக்கப்பாட்டைக் கூறுகளாய் விவரிப்பது சமூகவியலாகும். பொருளாதாரப் பிரச்சினைகளையோ உறவுகளையோ பிரச்சினைகளாகக் காண அவர்கள் விரும்பவில்லை. கூர்ந்து நோக்கினால் விஞ்ஞான அடிப்படை என்ற பெயரில் அதனுடன் ஒப்புமை காட்டினாலும் உண்மையில் விஞ்ஞான நோக்கத்திற்கு முரணாகவே இவர்கள் நடந்து கொள்கின்றார்கள். இவர்களது ஆய்வுமுறை அனுபவ வாதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். (க.கைலாசபதிஇ 1979)


சமூகவியல் என்பது எதனைக்குறிக்கும். அதற்கு ஒரு வரைவிலக்கணத்தினையும் கைலாசபதி குறிப்பிடுகின்றார். விஞ்ஞானப்பூர்வமாகவும் புறநிலையாகவும் மனிதனையும் சமுதாயத்தையும் ஆராய்வதே சமூகவியலின் சாராம்சமாகும் என்கின்றார். சமூக நிறுவனங்களைப் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்வதுடன் சமூகத்தின் அடிப்படை குடும்பமும் அதன் சமூகமயமாதல் செயற்பாடும் என்பது சமூகவியாளர்களின் கருத்தாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞானங்களுக்கெல்லாம் இளைய விஞ்ஞானமாகக் கைத்தொழிற்புரட்சியின் பின்னர் சமூகத்தைப்பற்றிய கரிசனைகளும் புத்தொளிர்க்கால சிந்தனைகளும் எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றியது தான் சமூகவியலாகும்.


சமூக நிறுவனங்களும், நடைமுறைகளும், நம்பிக்கைகளும், வழக்காறுகளும் சமூகவியலில் ஆராயப்படுகின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளும் கைலாசபதி, சமூக நிறுவனங்கள், சமயம், பொருளாதாரம், அரசியல், குடும்பம் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதுடன், இவை யாவற்றினுடைய இயக்கத்தையும், இயக்காற்றலையும் ஆராய்வதே சமூகவியலின் தலையாய பண்பும் பணியுமாகும் என்பதனை ஒப்புக் கொள்கின்றார்.


சமூகவியலில் பயன்படுத்தும் ஆராய்ச்சித்தகவல்கள், தரவுகள், செய்திகள், பக்கச்சார்பற்றவை என்றும் ஆராய்ச்சியாளன் எத்தகைய விழுமியங்களையும் பற்றி நிற்காது தனது ஆய்வை மேற்கொள்வதுடன் அவனுக்கு தரவுகளை மீறிய தனது துறைக்குப் புறம்பான அக்கறைகள் இருக்க முடியாது என்று சமூகவியல்வாதியான மாக்சு(ஸ்) வெபர் கூற கைலாசபதியோ அதனைப் புறக்கணித்து மாக்சி(ஸி)ன் பொதுவுடைமைக் கோட்பாட்டிற்குள்ளேயே நின்று திறனாய்வை மேற்கொண்டிருக்கக் காணலாம். மாக்ஸிசம் தொடர்பாக ஒரு சமூகவியலாளர் கூறிய கருத்தினை இங்கு, கைலாசபதி மேற்கோள் காட்டுகின்றார்.


முதலாளித்துவ சமுதாயத்தின் தவிர்க்க இயலாத புரட்சிகர நியதியை வெளிப்படையாகக் கூறி, அதனை வளர்க்க முனையும் அளவுக்கு மாக்சி(ஸி)சம் ஒரு சமூகவியலாகும். வர்க்கப் போராட்டத்தின் இயக்காற்றலை நாம் கைக்கொள்ள வேண்டும் என்று நம்மை அவசியப்படுத்துவதால், ஒரு விதத்தில் அது சமூகவியலைச் சார்ந்து நிற்கின்றது எனலாம். ஆயினும், சமூக உறவுகள் உற்பத்திச் சக்திகளின்றும் உறவுகளினின்றும் பொருளியலினின்றும் பிரித்தெடுக்கப்பட்டனவாய் இருக்க முடியும் என்று கருதக் கூடிய விதத்தில், சமூகவியல் அடிப்படையில் சமூகத்தின் நியதியை மாக்சி(ஸி)சம் காணவில்லை ((Shaw,Martin 1975)


காலவதியாகி விட்ட கோட்பாடு, சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைனக் கொண்டது மாக்சி(ஸி)சம் என்றும் விமர்சனங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகியிருக்கின்றன. மாக்சி(ஸி)ன் கொள்கைகள் உலக அரங்கில் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது. தமிழர்களும் மாக்சி(ஸி)ன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. மாக்சின் பொதுவுடமைக் கொள்கை தமிழுக்குப் புதிது. இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் கொம்யூனிசு(ஸ்)ட்வாதத்தை, பாரம்பரியக் கலாசாரக் கொள்கைகளில் ஊறித்திளைத்தவர்கள், வரலாற்றை மாற்றிப் போடும் இக்கொள்கையினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.


எனினும் தற்துணிவுடன் கைலாசபதி மாக்ஸியத்தினை ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் திறனாய்வுக்கும் ஒப்பியலுக்கும் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மகத்தானது. மாக்ஸியத்தை ஏற்றுக் கொள்கின்றோமோ இல்லையோ, ஆனால் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி என்ற இரண்டு ஆளுமைகளை விடுத்து ஈழத்தின் திறனாய்வினை எடுத்தியம்புவது சற்றும் இயலாத காரியமே.


1953-1982 வரையான குறுகிய காலப்பகுதியில் ஒரு சகாப்தத்தினை உருவாக்குவதென்பது அபூர்வமான விடயமே. ஆனால் கைலாசபதியோ 49 ஆண்டுகள் என்ற குறைந்த ஆயுட்காலத்தில் தன்னை மீறியதாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் துணைபுரிந்துள்ளார். இந்தியாவில் இருக்கின்ற இலக்கியவாதிகள் கைலாசபதியின் திறனாய்வுத் திறமையினைக் கண்டு ஐயப்பட்டுள்ளதோடு வியப்புற்றுப் பாராட்டியுமுள்ளனர்.


யெயகாந்தன் தொடக்கம் பல இந்திய, இலங்கை இலக்கியவாதிகளை அவர்கள் சமூகவியல் நோக்கில் இலக்கியம் படைக்காது அழகியலுக்காக மாத்திரமே இலக்கியம் படைத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் இலக்கியங்கள் சமூக மாறுதலுக்கு வழிகோலவில்லை. கற்பனை வளம் பொருந்திய படைப்புக்களாக இருப்பினும் அவை மக்களின் உளரீதியானதும் பிரச்சினைகளிலிருந்து வெளிக் கொண்டு வரும் முறமைகளை விவரிப்பனவாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.


தனது சமகால இலக்கியவாதிகள் கூறும் கருத்துக்களை அவர்கள் சார்பாக பக்கச்சார்பற்று விமர்சனத்திற்கு உட்படுத்தாது, மாக்சிசக் கொள்கையுடன் ஒப்பிட்டு திறனாய்வு செய்திருக்கின்றார். சில இடங்களில் மாக்சின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் அதனைத் திணிக்கும் தன்மைகளையும், ஏனைய பார்வையுடையவர்களை சமுதாயப்பார்வைக்கு எதிரானவர்களாக ஒதுக்கி விடும் தன்மையினையும் காணக்கிடைக்கின்றது. க.நா. சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றோர் 'மாக்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்று கைலாசபதியினை விமர்சனம் செய்யும் போக்கும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இத்தகைய காலப்பின்னணியில், மாக்சிசக் கருத்துக்களை, கடினமான சொற்பிரயோகத்தை, அப்படியே பயன்படுத்தாது தனது இலக்கியத்திற்குத் தேவையானதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்ததில் கைலாசபதி திறனாய்வாளராகவும் ஒப்பியல் இலக்கியவாதியாகவும் வெற்றி வாகை சூடுகின்றார். கார்ல் மாக்சின் பொதுவுடமைவாதத்தைப் பற்றி, முழுமையான அறிவை வெறுமனே கோட்பாடாகவன்றி இலக்கிய வரலாற்று நோக்கில் தெரிந்து கொள்ளவும், புதிய திறனாய்வு முயற்சிகளை மேற்கொள்ளவும், ஒப்பியல் இலக்கியம் படைக்கவும் கைலாபதியின் நூல்கள் துணை புரியும் என்பது குன்றிலிட்ட விளக்கேஒரு சம்பாஷணையூடாக இந்தக் கட்டுரையினை ஆரம்பிக்கிறேன். எனக்கும் என் நண்பருக்கும் இடையிலான உரையாடல் இது. நான் கைலாசபதி தொடர்பாக இம்முறை உவங்களுக்கு எழுதலாம் என்று இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர், எந்தக் கைலாசபதி என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. எனக்குத் தெரிந்த வரை கைலாசபதி என்றால் அது பேராசிரியர் க. கைலாசபதி மட்டும் தானே. ஏன் இவ்வாறு கேட்கிறாள் என்று யோசித்தவாறே, யாழ் பல்கலைக்கழகத்திலே மண்டபம் அமைத்துள்ளார்களே அந்தக் கைலாசபதி என்றேன் நான். அதற்கு அவள், ஓ அவரா!! மண்டபம் அமைத்துள்ளார்கள் என்று தெரியும். ஆனால் எதற்கு, ஏன் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். ஆனால் என்னுள் தான் பல வினாக்களை அது எழுப்பிற்று.


ஆக இதிலிருந்து ஒன்று தெரிகிறது. தமிழ் கூறும் நல்லுலகில் பல கைலாசபதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தமிழ்ச் சேவையும் இடம்பெற்றிருக்கின்றது. கைலாசபதி தொடர்பான தேடலில் ஈடுபட்ட போது பொ.கைலாசபதி தொடர்பான தகவலும் கொசுறாகக்; கிடைத்தது. ஈழத்து இலக்கியம் பயின்றவர்கள், தமிழ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பேராசிரியர் கைலாசபதி என்கின்ற போது பேராசிரியர். க. கைலாசபதி தான் ஞாபகத்திற்கு வருவார். ஆனால், சாதாரண மக்களுக்கும், வேறுதுறைகளிலே ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கைலாசபதி என்கின்ற போது எந்தக் கைலாசபதி என்ற குழப்பநிலை தோன்றுவது தவிர்க்க இயலாதது. எனவே, யார் இந்தக் கைலாசபதி? அப்படி என்ன செய்துவிட்டார் தமிழ் உலகுக்கு? என்ற வினாவை எழுப்புவோருக்கு அறிமுகம் தேவையற்றவரான பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதியின் அறிமுகம் அவசியம் தேவையானதே.


அத்துடன் பேராசிரியர் கைலாசபதி தொடர்பாக இப்பொழுது எழுதுவதற்குத் தேவை என்ன உள்ளது என எண்ணுவோருக்குச் சரியான பதில் 'வரலாறு மிக முக்கியம் மக்காள்' என்பதே. நாம் வந்த பாதை நமக்குச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய சந்ததியினர் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தின் காரணத்தால் ஈழத்து இலக்கியப் போக்கினையே சமூக ஊடகத்தினூடாகத் தவறாகப் பயன்படுத்தும் தன்மைகளைத் தான் அதிகம் காண்கின்றோம். எனவே கோயிலின் அத்திவாரத்தைச் சரியாகப் போட்டால் தான் கோபுரம் அழகாகத் தெரியும். அந்த அடிப்படையை, மூலாதாரத்தை நமக்கு வழங்கிய முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்வது தமிழினதும் தமிழ்ச்சமூகத்தினதும் வளர்ச்சியை அளவிடவும் நாம் சரியான பாதையில் செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.


பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். தன்னை முன்னிறுத்தி ஈழத்தில் இலக்கிய பரம்பரையொன்றினை உருவாக்கிய கெட்டிக்காரர். திறனாய்வு சம்பந்தமான பேச்சுக்களே தமிழுக்கு இழுக்கு என பாரம்பரிய தமிழ் விற்பன்னர்கள் எண்ணிக் கொண்டிருந்தவேளை, திறனாய்வில் உச்சநிலை கண்டவர்.


தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி.


இப்படியாகக் பேராசிரியர் கைலாசபதியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் ஒரு கடல். அதனை அளந்து கூறுவதென்பது இயற்கைக்கு முரணானது. அவ்வாறே கைலாசபதியின் இலக்கியப் பணியினை வரையறுத்துக் கூறுவதுமாகும். தமிழ் உள்ளகாலம் வரைக்கும் கைலாசபதியும் அவர் தம் தமிழ்த் தொண்டும் நின்று நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். எனவே தான் இக்கட்டுரை, பேராசிரியர் கைலாசபதியின் சமூகவியல் பார்வையினையும் அவருடைய இலக்கியங்கள் எவ்வாறு சமூகத்தைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன என்பது தொடர்பாகவும் ஆராயவுள்ளது.


பேராசிரியர் சு. வித்தியானந்தரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்து பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்து முதலாவது தலைமையாசிரியராகப் பதவியேற்று அது பின்னர் பல்கலைக்கழகமாக உயர்வதற்கு முன்னின்று உழைத்த பெருந்தலைவர். ஒரு மனிதன்; பிறப்பது வேண்டுமானால் சாதாரண நிகழ்வாக இருக்கலாம் ஆனால் இறப்பது சரித்திரமாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில்; அப்படிப்பட்ட சரித்திரத்தை உருவாக்கிய வரலாற்று நாயகன் பேராசிரியர் கைலாசபதி. பொதுவாக இலக்கிய கர்த்தாக்கள் இறந்த பின்னர் தான் உலகம் அவர்களைக் கொண்டாடும். சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை அதற்குச் சிறந்த உதாரணம். ஆனால் கைலாசபதி தமிழுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கின்ற போதே மக்களாலும் கலைஞர்களாலும் ஆராதிக்கப்பட்டவர்.


கைலாசபதியின் வாழ்க்கைக் குறிப்புக்கள் அடங்கிய முழுமையான நூல் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றி அவரது ஆசிரியர்களும், மாணவர்களும், சகபாடிகளும், கலைஞர்களும் எழுதிய கட்டுரைகளினை ஆதாரமாகக் கொண்டு அவரின் ஆரம்ப வாழ்க்கை, இலக்கிய பயணம், சமூக சிந்தனையினூடான இலக்கிய பங்களிப்பு என்பவற்றை அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. வெறுமனே இலக்கியங்களைப் படைத்துத் தரப்படுத்தலையும் சனரஞ்சகத்தையும் வெளிப்படுத்தும் சனரஞ்சகவாதியாக மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாது தனது இலக்கியம், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.


பேராசிரியர் கைலாசபதியினால் எழுதப்பட்ட நூல் வரிசை பின்வருமாறு:


இரு மகாகவிகள், பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது), இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும் (அவர் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து எழுதியது), சமூகவியலும் இலக்கியமும், திறனாய்வுப் பிரச்சினைகள், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் என்பன பேராசிரியரால் தமிழில் எழுதப்பட்டன.


தமிழ் கீரோயிக் பொயற்றி (Tamil Heroic poetry) , த ரிலேசன் ஒவ் தமிழ் அன்ற் வெசு(ஸ்)டேன் லிற்றேயர் (the relation of Tamil and western literature), ஒன் ஆர்ட் அன்ட் லிற்றேயர் (On Art and literature), (on barathi) போன்ற நூல்கள் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. எனினும் அவரின் பல இலக்கியங்கள் அவர் அமரத்துவம் அடைந்த பின்னர் தொகுக்கப்பட்டவையாதலால் இலக்கியங்கள் தோற்றம் பெற்ற சரியான காலவரையறையினை மேற்கொள்வது இயலாததாகின்றது.


முன்னுரைகள் மாத்திரம் நாற்பத்தி மூன்றுக்கு மேல் எழுதியுள்ளார். பத்திரிகைக்கும், இதழ்களுக்கும், சஞ்சிகைக்கும் எழுதிய பல கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன. இவை அனைத்துமே அவரது காலத்திலும் காலத்தைக் கடந்தும் சமூகத்தில் பெரும் புரட்சியினை ஏற்படுத்துவனவாய் அமைந்துள்ளன என்பது மனங் கொள்ளத்தக்கது.


இலங்கை, பிரிட்டிசாரின் காலனியாதிக்கத்தின் கீழிருந்த காலப்பகுதியில் ஆங்கில மோகம் உச்சந் தொட்டிருந்த காலத்திலும் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று அதில் முதல் தரத் தேர்ச்சி பெறுவதென்பது மிகப் பெரிய சாதனையே. அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் கைலாசபதி அவர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதே வாழ்நாள் சாதனையாக இன்றும் இலங்கையிலுள்ள இளைஞர்கள் குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கைலாசபதி, ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து வந்து, இலங்கையில் இருந்து கொண்டே தன் வாழ்நாளெல்லாம் சேவையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை கொண்டவராக விளங்கிய கைலாசபதி, தன்னுடன் இணையும் நட்பு வட்டாரத்தையும் அவர்களுக்கே உரித்தான தனித்திறமையை வளர்ப்பதில் அவர்களுக்கு உற்ற துணையாக ஊக்குவிப்பாளராகவும், சிறந்த படிக்கல்லாகவும் திகழ்ந்துள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே.


1933ம் ஆண்டு சித்திரை மாதம் ஐந்தாம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் கோலாலம்பூர் விக்டோரியா இன்ஸ்டிடியூட்டிலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கற்றார். இங்கு கற்குங்காலை மாக்ஸியவாதியான ஆசிரியர் மு. கார்த்திகேசனின் தொடர்பு கிடைத்ததுடன், பொதுவுடைமைவாதியாகக் கைலாசபதி மிளிர்வதற்கு இவரின் தொடர்பும், அவரின் பாசறையில் கல்வி கற்றமையுமே அடிப்படையாக அமைந்தன.


பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது உயர்கல்வியைக் கற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியதுடன் அங்கு தமிழ்ப் பாடத்தைத் தனது சிறப்புத்துறையாகத் தெரிவு செய்து அதில் முதலாம் தரத்தில் சித்தியும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற வேளையில், பேராசிரியரி. சு. வித்தியானந்தர், பேராசிரியர். வி. செல்வநாயகம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற ஈழத்தின் புகழ்பூத்த பேராசிரியர்களைத் தனது குருவாகக் கைவரப் பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தின் இளங்கதிர் சஞ்சிகைக்கு அவர் எழுதிய 'நாடும் நாயன்மாரும்' என்ற கட்டுரையின் மூலம் சிறந்த ஆய்வாளராகத் தமிழுலகில் தன்னை வெளிப்படுத்தினார்.


பல்கலைக்கழகக் கல்வியை முடித்த கையுடன் லேக்கவுசு(ஸ்) பத்திரிகையான தினகரனில் (அரச பத்திரிகை) உதவி ஆசிரியராக இணைந்து பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பத்திரிகைத்துறைக்கும் அக்கால இலக்கிய வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றினார். தினகரன் பத்திரிகையில் அவர் பணிபுரிந்த காலப்பகுதி பத்திரிகை வரலாற்றின் சொர்க்ககாலம் என வர்ணிக்கப்படுகின்றது.


அதன் பின்னர், மறுபடியும் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். ஆனால் இம்முறை மாணவராக அல்ல, உதவி விரிவுரையாளராக. அதன் பின்னர் விரிவுரையாளராகி, புலமைப்பரிசில் பெற்று இங்கிலாந்தில் பேமிங்காம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பினை மேற்கொண்டார். அங்கு கைலாசபதியின் ஆய்வுக்கான மேற்பார்வையாளராக இருந்த பேராசிரியர் யோர்ச் தொம்சன் கார்ல்மாக்சின் சீடராக மிளிர்ந்தவர். அவரின் உறுதுணையுடன் ஏலவே பொதுவுடைமைத் தத்துவம் விதைக்கப்பட்ட கைலாசபதி சமூகவியலின் மாக்சியச் சிந்தனைகளில் மூழ்கித்திளைத்து மாக்சியவாதியானார்.


திறனாய்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கைலாசபதி தனது கலாநிதிப்பட்ட ஆய்வுக்காகத் தெரிவு செய்த துறை எதுவெனத் தெரியுமா? அது ஒப்பியல் இலக்கிய நோக்கு. அவர் சங்கத் தமிழ்ப்பாடல்களை கிரேக்க வீரயுகப் பாடல்களுடன் ஒப்பு நோக்கி தனது முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரின் ஆய்வு 1968ம் ஆண்டு ஒக்சு(ஸ்)போர்ட் பல்கலைக்கழக அச்சகம் தமிழ் கீரோயிக் பொயற்றி (Tamil Heroic Poetry) தமிழ் வீரயுகக்கவிதைகள் என்ற நூலாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.


அங்கிருந்து மீண்டும் இலங்கை வந்தவருக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கிடைத்து, அங்கே தமிழ்த்துறைத் தலைவராகக் கடமைப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்தியாலங்கார வளாகத்தின் இந்து நாகரீகத்துறை தலைவர் பதவி வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இருந்த போதே வெளியிடங்களில் கலை கலாசார நிறுவனத்தொடர்புகளையும் பேணிக் கொண்டார். அதன் பயனாக பல்வேறு சபைகளுக்கும், திணைக்களங்களிலும் முக்கிய பொறுப்பேற்றுக் ஈழத்தின் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உந்துதலாக மிளிர்ந்தார். அமெரிக்காவின் கலிபோர்ணியப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்

.

இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் வளாகம் ஒன்றை ஆரம்பித்த போது அதன் தலைவராகவும் தமிழ்ப்பேராசிரியராகவும் கைலாசபதியவர்கள் கடமை புரிந்தார். ஆமலே குறிப்பிட்டது போன்று, இந்த வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்று இன்று தலை நிமிர்ந்து சிறப்பிடம் பெறுவதற்குப் பேராசிரியர் கைலாசபதியின் பெரும் பணி ஈழத்து வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. அப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியாவும் அவர் செயற்பட்டுள்ளார்.


இது பேராசிரியர் கைலாசபதியின் வாழ்க்கை வரலாற்றின் பரந்து கிடக்கும் இலக்கியப் பணிகளின் சிறு அறிமுகம் மாத்திரமே. இங்கு அவரின் குடும்பப் பின்னணி பற்றியும் குறிப்பிடுவது சாலப்பொருந்தும். ஏனெனில் கைலாசபதியின் ஒவ்வொரு வெளியீடுகளிலும் அவரின் மனைவியின் உறுதியும் உறுதுணையும் வெளிப்பட்டு நிற்குமாற்றைக் காணலாம். 'மக்கள் சீனம் : காட்சியும் கருத்தும்' என்ற நூலைத் தன் மனைவி சர்வமங்களத்துடன் இணைந்து ஆய்வுரையாக வெளியிட்டுள்ளார். சர்வமங்களம் அவரின் சர்வமாகத் திகழ்ந்தார் என்பது கைலாசபதியின் சமகாலத்தவரின் ஆணித்தரமான கருத்தாகும். இவர்களுக்கு சுமங்களா, பவித்ரா என்ற இரு மகள்மார் உள்ளனர்.


இவ்வாறாக இலக்கிய வாழ்க்கையினைச் சிறப்புற மேற்கொண்ட கைலாசபதியவர்கள், குடும்பப் பின்னணியிலும் மேன்மையான வாழ்க்கை வாழ்ந்து தனது எழுத்துக்கள் மாத்திரமல்ல. இயல்பு வாழ்வும் கூட சமூகவியல் தளத்தினைப் பின்னணியைக் கொண்டதாக அமைத்துள்ள பாங்கைக் காணலாம். 1982ம் ஆண்டு இவ்வுலகை விட்டு அமரத்துவமடைந்த வேளை தமிழ் இலக்கிய உலகே தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்திருந்த தன்மையினை அக்கால இலக்கியங்களுடாக அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. அத்தகு பேராசிரியர் கைலாசபதியின் வரலாற்றினை கைப்பிடிக்குள் அடக்கி விட முடியாது.


தமிழ் இலக்கிய, கல்வி, கலை, கலாசார, அரசியல் துறைகளில் சிறப்புத் தன்மை கொண்ட ஆய்வறிவாளர் (Intellectual) என்று போற்றத்தக்கவர் கைலாசபதி அவர்கள். புறநிலைக் கொள்கையிலே (Practical criticism) கைதேர்ந்தவர். இவர் இலக்கிய வரலாற்றாசிரியராக இருந்து திறனாய்வைச் செய்திருக்கின்றார். திறனாய்வுக் கட்டுரைகள், தனியாட்கள் ஆய்வாராய்ச்சி என்பவற்றைத் தமிழுலகில் சீரிய முறையில் அமுல்படுத்தியுள்ளார். தனிமனிதப்பண்புகளை அதிகம் வெளிப்படுத்தியது சமூகவியலே. கூட்டான சமுதாய வாழ்க்கையினைப் பாடுபொருளாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்திலே தனிமனிதப் பண்புகளையும் தனிமனிதத் தன்மையினையும் அறிமுகப்படுத்தியவராக கைலாசபதி விளங்குகின்றார். ஆகவே சமூகவியல் தொடர்பாகவும் அதில் மாக்ஸிசம் தொடர்பாகவும் அறிந்து கொள்வதன் மூலமே கைலாசபதி சமூகவியல் கருத்துக்களை குறிப்பாக மாக்ஸிசத்தினை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பது புலனாகும்.


ஒரு சமூகவியலாளன் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று கரிசனை கொள்வதுடன், தற்போது சமூகம் எவ்வாறு உள்ளது, அதன் கடந்த காலம், அதன் மாற்றங்கள் என்பது தொடர்பாக ஆராய்ந்து வரலாற்றுடன் இணைத்து சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படுத்துபவனாக இருக்க வேண்டும். அந்த வகையிலே பேராசிரியரான கைலாசபதி தனது இலக்கியத்திலே சமூகக் கருத்துக்களை உட்புகுத்தி சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக விளங்கினார். பேராசிரியரின் கூற்றாகவே தனது இலக்கியங்கள் சமூகவியல் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றுள்ளன என விளக்கக் காணலாம்.


கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நான் எழுதி வெளியிட்டிருப்பவற்றைப் பார்க்கும் போது அவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் சமுதாயத் தொடர்பமைவு உள்ளனவாய் இருக்கக் காண்கிறேன். திறனாய்வுத் துறையில் முக்கிய கவனம் செலுத்தத் தொடங்கிய கால முதல் கலை இலக்கியம் முதலியவற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும் சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆராய்ந்து வந்திருக்கிறேன். மார்க்சீயத்தைத் தழுவிக் கொண்ட நாள் முதலாக அதன் முனைப்பான கூறுகளில் ஒன்றாகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்குக் கொண்டு வந்துள்ளேன். சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்விற்கு என்னை இட்டுச் சென்றது. இவற்றின் பயனாக இலக்கியத்தை அறிவியல் அடிப்படையிலே அணுகக் கற்றுக் கொண்டேன். (க.கைலாசபதி, 1979)


சமூகவியல் மனிதப் பண்பியல் துறைகளுடன் சமூக விஞ்ஞானத் துறையாக வளர்ந்து வருகின்றது. அது இன்று இலக்கிய ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்கின்றார். கைலாசபதி கூறும் சமூகவியல் மாக்சு(ஸி)சம் சார்ந்ததாகவே இருக்கக் காணலாம். அவரின் அனைத்து ஆக்கங்களிலும் பொதுவுடைமைத் தத்துவம் இழையோடியிருக்கும் பாங்கை அவதானிக்க முடியும்.


சமூகவியிலின் தந்தையென வர்ணிக்கப்படும் ஓகசு(ஸ்)ட் கொம்ற் புலக்கொள்கைவாதம் சார்ந்ததாக சமூகக் கட்டமைப்பினை ஆராய்ந்ததுடன் சமூக மாற்றத்தை விரும்பாதவராக பாரம்பரிய சமூகத்திலே ஊறித் திளைத்தவராகக் காணப்படுகின்றார். அவர் கார்ல் மாக்ஸிற்கு எதிரானவராகவே முதலாளித்துவ சமூகத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் தத்துவங்களை வெளிப்படுத்தினார் என்பது கைலாசபதியின் வாதம். மாக்சிசவாதியாகத் தன்னை வரித்துக் கொண்டமையால் மாக்ஸ் கூறும் சமவுடைமையே சமூகக்கட்டமைப்பின் வாதமாக முன்வைக்கின்றார். இளங்கோவின் ஊழிக்கோட்பாட்டுத் தத்துவத்தைப் புறக்கணித்து விட்டு சிலப்பதிகாரத்தைப் பற்றிய ஆய்வு செய்வதென்பது கடினமென்கின்றார். ஆக எழுத்தாளர்களின் வகிபங்கான தனிமனித இயல்பே முன்னிற்பதுடன் வாசகர் பற்றிய அக்கறை குறைந்தவராகவே கைலாசபதி விளங்கியிருக்கக் காணலாம்.


எனினும் கைலாசபதியின் ஆய்விலக்கியங்கள் மரபு வழியினின்றும் சற்றே விலகி புதிய ஆய்வுப் பரம்பரையினை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. ஆய்வுரைகளுக்கான உசாத்துணையினை வழங்குகின்ற போது நூலாசிரியர், நூலின் பெயர், பதிப்புப் போன்ற விடயங்களே உள்ளடக்கப்படும். ஆனால் கைலாசபதி உசாத்துணையில் நூலாசிரியர் பற்றியோ நூல் பற்றியோ அடிக்குறிப்பொன்றினை வழங்கும் மரபைக் காணலாம். அத்துடன் வாசகர்களுடன் தான் பகிர விரும்பும் நூற்பட்டியலையும் அவ்விலக்கியத்தின் முடிவில் இணைத்து விடுவார். அது ஒரு ஆர்வமிக்க வாசகர் வட்டத்தை அவர் பக்கம் திருப்பக் காரணமாக இருந்தது. அவரின் இத்தகைய முயற்சி ஆய்வுலகிற்குப் புதியதாக இருந்ததுடன் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குச் சிறந்த வடிகாலாக அமைந்துள்ளது. அவரின் கட்டுரையின் முடிவில் அமைந்த சான்றாதாரங்களைப் பார்த்த போது நாமும் ஏன் அந்த உசாத்துணை அமைப்பைப் பயன்படுத்தக் கூடாது? என்ற எண்ணத்தை இக் கட்டுரையாளருக்கும் ஏற்படுத்திற்று.


வரலாறு என்பது தானே தோன்றியதன்று. அது மனிதனாலும் சமூகத்தினாலும் படிப்படியாக புனையப்பட்டு கட்டியமைக்கப்பட்டது என்பதே மாக்சின் வாதம். ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தமக்கேற்றாற் போல் உலகை மாற்றியமைத்துக் கொண்டார்கள். முதலாளித்துவ சமுதாயம் தமது இருப்புத்தன்மையினை உறுதிப்படுத்த உழைக்கும் கூலித் தொழிலாள மக்களை தமது இலாப நோக்கங்கருதி உருவாக்கினர். அதனூடாக முதலாளிமார் ஆள்பவர்களாகவும் உழைக்கும் வர்க்கத்தினர் அடிமைகளாகவும் ஆளப்படுபவர்களாகவுமே அமைகின்றனர். உதாரணமாக, தெற்காசிய நாடுகளில் பரவலாக நடைமுறையில் இருக்கும் சாதிக்கட்டமைப்பில் உயர்சாதி மக்கள், தாழ்சாதி மக்கள் என்ற வேறுபாட்டை, செய்யும் தொழிலைக் கொண்டு வேறுபடுத்தி ஆளும் உயர்சாதியினர் தாழ்சாதி மக்களை அடிமைகளாகவே கொண்டாடிய வரலாறு இன்று வரை தொடர்கின்றதே, எதனால்? நிலவுடைமைப் பொருளாதாரத்தை மையப்படுத்தி பாகுபாடுகளை முதலாளித்துவ சமூகம் உருவாக்கிய ஒற்றைக் காரணம் தானே.


கைலாசபதி காலவோட்டத்தைக் கருத்திற்கொண்டு இலக்கியம் படைத்தார். ஒவ்வொரு இலக்கியமும் தோற்றம் பெற்றதற்குப் பின்புலத்தில் காரணம் உண்டு என்றும் அது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற் போல் மாற்றங் காணும் என்றும் நம்பினார். இன்றிலிருந்து வேறுபட்டதான முன்னைய வரலாறு என்று ஒன்று உண்டு என்றும் அதனைக் கண்டறிவது தான் வரலாறு மற்றும் இலக்கிய ஆய்வு என்பதும் கைலாசபதியின் வாதம். நிகழ்காலத்துத் தேவைகள் முற்காலத்து வரலாற்றைக் கட்டமைக்கின்றது என்று கூறும் கைலாசபதி. அகலிகை வரலாற்றையும் கண்ணகி கதையினையும் மேற்கோள் காட்டி ஒப்பியலிலக்கிய ஆய்வில் பெண்களுக்கான கற்பு நெறி, ஆணாதிக்கச் சிந்தனை போன்றன வரலாற்றுச் சூழலில் மக்களின் உணர்வு அழுத்தங்களுடனும் உளவியலுக்கு முன்னுரிமை கொடுத்தும் தோற்றம் பெற்றுள்ளன என்கின்றார்.


இலக்கியம் காலத்தின் கண்ணாடியாகும். தமிழ் சமுதாய வரலாற்றை ஏனைய எழுத்தாளர்கள் வேறு விதமாக நோக்க கைலாசபதியோ கார்ல் மாக்சின் மாக்சிய தத்துவத்திலிருந்து ஆராய்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்றாற் போல் தான் இலக்கியம் படைக்கப்பட்டு வரலாறு தோற்றம் பெற்றுள்ளது என நிறுவுகிறார். சங்க இலக்கிய காலம் (கி.பி. 250 வரையான காலப்பகுதி), பக்தி இலக்கிய காப்பிய காலம் (கி.பி.600-1300), நவீன இலக்கிய காலம் (கி.பி.19ம் நூற்றாண்டு முதல் சமகாலம் வரை) என மூன்று காலங்களை முக்கியத்துவப்படுத்தி காலபேத ஆராய்ச்சியில் ஈடுபட்டதுடன் சமுதாயச்சிந்தனைகள், அக்கால இலக்கியங்களில் தனித்தன்மை பெறுமாற்றை விரிவாகக் கூறியிருக்கக் காணலாம்.


கார்ல் மாக்ஸ் எவ்வாறு சமுதாயத்தை, நிலத்தையும் மூலதனத்தையும் மையப்படுத்திக் கணிப்பிட்டு வகைப்படுத்தினாரோ அதனைப் போன்று கைலாசபதியும் மாக்சைப்பின்பற்றி ஒவ்வொரு தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தினையும் வகைப்படுத்துகின்றார். பழம் பொதுமைச்சமூகம், அடிமைச்சமூகம், நிலவுடைமைச்சமூகம், முதலாளியச்சமூகம், சமவுடைமைச்சமூகம் என்கின்றார். தமிழ் இலக்கிய வரலாறு தமிழர் தம் தனித்தன்மை பொருந்திய பொற்காலம் என வரலாற்றாய்வாளர்கள் உரைப்பர். ஆனால் கைலாசபதியோ தமிழரின் நிலைமாறுகால மாற்றம் ஏற்பட்ட காலமாக சங்ககாலத்தமிழர் வரலாற்றை சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கக் காணலாம்.


முன்னர் குழுவுக்கும் கணத்துக்கும் பொதுவாக இருந்த சகோதரத்துவ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய 'பெருஞ்செய்யாடல்' ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்கால கட்டத்திலே தவிர்க்க முடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன. அக்காலத்திலே புலவராக மட்டுமன்றி அறிவராகவும் வரலாற்றாசிரியராகவும் போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர்கள் இந்த நடைமுறை விதிகளைப் பிரசித்தப்படுத்தினர். சமுதாயம் முழுதற்கும் பொதுவானவையல்ல. இவ்விதிகள் தலை மக்களுக்கிடையேயுள்ள 'கண்ணியமான' உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படை எனலாம். (க.கைலாசபதி)


கைலாசபதியின் போக்கில் சமூகவியல் இரண்டு வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்று சோசலிசக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது. மற்றையது சோச(ஷ)லிச(ஸ) விரோத நெறியில் வளர்ந்தது என்கின்றார். அந்த வகையிலே ஓகசு(ஸ்)ட் கொம்ற், கெர்பெட் சு(ஸ்)பென்சர், வில்லியம் கிரகம்சும்னர், மாக்சு(ஸ்) வெபர் போன்ற சமூகவியலாளர்கள் சோசலிச(ஸ) விரோத நெறியில் வளர்ந்துள்ளதோடு சமூகவியல் கோட்பாடுகளையும் வகுத்துள்ளார்கள் என்கின்றார். அவர்களின் சமூகவியல் தொடர்பான கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதுடன், சமுதாய மாற்றத்தினை விரும்பாதவர்களெனவும் வர்ணிக்கின்றார்.



மேற்கூறியோரது கருத்துக்களைத் திரட்டிக் கூறுவதாயின், சமுதாயத்தையும் சமுதாய அமைப்பையும் உள்ளவாறே கொண்டு அதன் இயக்கப்பாட்டைக் கூறுகளாய் விவரிப்பது சமூகவியலாகும். பொருளாதாரப் பிரச்சினைகளையோ உறவுகளையோ பிரச்சினைகளாகக் காண அவர்கள் விரும்பவில்லை. கூர்ந்து நோக்கினால் விஞ்ஞான அடிப்படை என்ற பெயரில் அதனுடன் ஒப்புமை காட்டினாலும் உண்மையில் விஞ்ஞான நோக்கத்திற்கு முரணாகவே இவர்கள் நடந்து கொள்கின்றார்கள். இவர்களது ஆய்வுமுறை அனுபவ வாதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். (க.கைலாசபதிஇ 1979)


சமூகவியல் என்பது எதனைக்குறிக்கும். அதற்கு ஒரு வரைவிலக்கணத்தினையும் கைலாசபதி குறிப்பிடுகின்றார். விஞ்ஞானப்பூர்வமாகவும் புறநிலையாகவும் மனிதனையும் சமுதாயத்தையும் ஆராய்வதே சமூகவியலின் சாராம்சமாகும் என்கின்றார். சமூக நிறுவனங்களைப் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்வதுடன் சமூகத்தின் அடிப்படை குடும்பமும் அதன் சமூகமயமாதல் செயற்பாடும் என்பது சமூகவியாளர்களின் கருத்தாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞானங்களுக்கெல்லாம் இளைய விஞ்ஞானமாகக் கைத்தொழிற்புரட்சியின் பின்னர் சமூகத்தைப்பற்றிய கரிசனைகளும் புத்தொளிர்க்கால சிந்தனைகளும் எழுச்சி பெற்ற காலத்தில் தோன்றியது தான் சமூகவியலாகும்.


சமூக நிறுவனங்களும், நடைமுறைகளும், நம்பிக்கைகளும், வழக்காறுகளும் சமூகவியலில் ஆராயப்படுகின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளும் கைலாசபதி, சமூக நிறுவனங்கள், சமயம், பொருளாதாரம், அரசியல், குடும்பம் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதுடன், இவை யாவற்றினுடைய இயக்கத்தையும், இயக்காற்றலையும் ஆராய்வதே சமூகவியலின் தலையாய பண்பும் பணியுமாகும் என்பதனை ஒப்புக் கொள்கின்றார்.



சமூகவியலில் பயன்படுத்தும் ஆராய்ச்சித்தகவல்கள், தரவுகள், செய்திகள், பக்கச்சார்பற்றவை என்றும் ஆராய்ச்சியாளன் எத்தகைய விழுமியங்களையும் பற்றி நிற்காது தனது ஆய்வை மேற்கொள்வதுடன் அவனுக்கு தரவுகளை மீறிய தனது துறைக்குப் புறம்பான அக்கறைகள் இருக்க முடியாது என்று சமூகவியல்வாதியான மாக்ஸ் வெபர் கூற கைலாசபதியோ அதனைப் புறக்கணித்து மாக்சின் பொதுவுடைமைக் கோட்பாட்டிற்குள்ளேயே நின்று திறனாய்வை மேற்கொண்டிருக்கக் காணலாம். மாக்சிசம் தொடர்பாக ஒரு சமூகவியலாளர் கூறிய கருத்தினை இங்கு, கைலாசபதி மேற்கோள் காட்டுகின்றார்.


முதலாளித்துவ சமுதாயத்தின் தவிர்க்க இயலாத புரட்சிகர நியதியை வெளிப்படையாகக் கூறி, அதனை வளர்க்க முனையும் அளவுக்கு மாக்சிசம் ஒரு சமூகவியலாகும். வர்க்கப் போராட்டத்தின் இயக்காற்றலை நாம் கைக்கொள்ள வேண்டும் என்று நம்மை அவசியப் படுத்துவதால், ஒரு விதத்தில் அது சமூகவியலைச் சார்ந்து நிற்கின்றது எனலாம். ஆயினும், சமூக உறவுகள் உற்பத்திச் சக்திகளின்றும் உறவுகளினின்றும் பொருளியலினின்றும் பிரித்தெடுக்கப்பட்டனவாய் இருக்க முடியும் என்று கருதக் கூடிய விதத்தில், சமூகவியல் அடிப்படையில் சமூகத்தின் நியதியை மாக்ஸிசம் காணவில்லை ((Shaw,Martin 1975)


காலவதியாகி விட்ட கோட்பாடு, சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைனக் கொண்டது மாக்சிசம் என்றும் விமர்சனங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகியிருக்கின்றன. மாக்சின் கொள்கைகள் உலக அரங்கில் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது. தமிழர்களும் மாக்ஸின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. மாக்சின் பொதுவுடமைக் கொள்கை தமிழுக்குப் புதிது. இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் கொம்யூனிசுட்வாதத்தை, பாரம்பரியக் கலாசாரக் கொள்கைகளில் ஊறித்திளைத்தவர்கள், வரலாற்றை மாற்றிப் போடும் இக்கொள்கையினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.


எனினும் தற்துணிவுடன் கைலாசபதி மாக்ஸியத்தினை ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் திறனாய்வுக்கும் ஒப்பியலுக்கும் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மகத்தானது. மாக்சியத்தை ஏற்றுக் கொள்கின்றோமோ இல்லையோ, ஆனால் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி என்ற இரண்டு ஆளுமைகளை விடுத்து ஈழத்தின் திறனாய்வினை எடுத்தியம்புவது சற்றும் இயலாத காரியமே.


1953-1982 வரையான குறுகிய காலப்பகுதியில் ஒரு சகாப்தத்தினை உருவாக்குவதென்பது அபூர்வமான விடயமே. ஆனால் கைலாசபதியோ 49 ஆண்டுகள் என்ற குறைந்த ஆயுட்காலத்தில் தன்னை மீறியதாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் துணைபுரிந்துள்ளார். இந்தியாவில் இருக்கின்ற இலக்கியவாதிகள் கைலாசபதியின் திறனாய்வுத் திறமையினைக் கண்டு ஐயப்பட்டுள்ளதோடு வியப்புற்றுப் பாராட்டியுமுள்ளனர்.


யெயகாந்தன் தொடக்கம் பல இந்திய, இலங்கை இலக்கியவாதிகளை அவர்கள் சமூகவியல் நோக்கில் இலக்கியம் படைக்காது அழகியலுக்காக மாத்திரமே இலக்கியம் படைத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களின் இலக்கியங்கள் சமூக மாறுதலுக்கு வழிகோலவில்லை. கற்பனை வளம் பொருந்திய படைப்புக்களாக இருப்பினும் அவை மக்களின் உளரீதியானதும் பிரச்சினைகளிலிருந்து வெளிக் கொண்டு வரும் முறைமைகளை விவரிப்பனவாகவும் இருக்க வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.


தனது சமகால இலக்கியவாதிகள் கூறும் கருத்துக்களை அவர்கள் சார்பாக பக்கச்சார்பற்று விமர்சனத்திற்கு உட்படுத்தாது, மாக்சிசக் கொள்கையுடன் ஒப்பிட்டு திறனாய்வு செய்திருக்கின்றார். சில இடங்களில் மாக்ஸின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் அதனைத் திணிக்கும் தன்மைகளையும், ஏனைய பார்வையுடையவர்களை சமுதாயப்பார்வைக்கு எதிரானவர்களாக ஒதுக்கி விடும் தன்மையினையும் காணக்கிடைக்கின்றது. க.நா. சுப்பிரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்றோர் 'மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்று கைலாசபதியினை விமர்சனம் செய்யும் போக்கும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இத்தகைய காலப்பின்னணியில், மாக்சிசக் கருத்துக்களை, கடினமான சொற்பிரயோகத்தை, அப்படியே பயன்படுத்தாது தனது இலக்கியத்திற்குத் தேவையானதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்ததில் கைலாசபதி திறனாய்வாளராகவும் ஒப்பியல் இலக்கியவாதியாகவும் வெற்றி வாகை சூடுகின்றார். கார்ல் மாக்ஸின் பொதுவுடமைவாதத்தைப் பற்றி, முழுமையான அறிவை வெறுமனே கோட்பாடாகவன்றி இலக்கிய வரலாற்று நோக்கில் தெரிந்து கொள்ளவும், புதிய திறனாய்வு முயற்சிகளை மேற்கொள்ளவும், ஒப்பியல் இலக்கியம் படைக்கவும் கைலாபதியின் நூல்கள் துணை புரியும் என்பது குன்றிலிட்ட விளக்கே