குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

"உலகின் முதல் விஞ்ஞானி நம் மண்ணில் தோன்றிய சித்தர் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்!

"உலகின் முதல் விஞ்ஞானி நம் மண்ணில் தோன்றிய சித்தர் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தொன்மையையும், நம் பாரம்பரிய மருத்துவத்தையும் உலகறியச் செய்ய முடியும்.

நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மூலம் ஏற்கெனவே டெங்குவை ஒழித்த அனுபவம் நம்மிடம் உள்ளது."

சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்.

"மாண்புமிகு தமிழக முதல்வரும் பாசமிகு சகோதரருமான எடப்பாடியாருக்கு அன்பு வணக்கம்.

இன்று, நம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய காலத்தில் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மக்களைக் காப்பாற்றுவதற்கு எடுத்த சரித்திரப்புகழ் வாய்ந்த ஒரு நடவடிக்கையை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அவரைப் போன்று, கொரோனாதீயநுண்மி  கொடூரத்திற்கு தாங்கள் ஒரு முடிவு கட்டி, தமிழ் மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்து, நீங்கள் பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியச் சொத்து. ’அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளே அண்டம்’ என்பது உலகத்தின் முதல் விஞ்ஞானியாகக் கருதப்படும் சித்தர் பொன்மொழி. இந்த உலகமும், மனித உடலும் ஐந்து தன்மைகளையே அடிப்படையாகக் கொண்டது.

அதாவது, நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் எனும் பஞ்சபூதங்களால்தான் இந்த உலகமும், மனித உடலும் படைக்கப்பட்டுள்ளது. எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இரத்தவோட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களால்தான் இந்த உடல் இயங்குகிறது. அதனால், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதன் அடிப்படையில் மூலிகைகள், செடிகள், பூக்கள், வேர்கள், பட்டைகள் வாயிலாக மனிதருக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் நம் சித்த வைத்தியத்தின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், நமது பாரம்பரிய மருத்துவ நம்பிக்கையை, நாகரிகம் என்ற பெயரில் காலம் சிதைத்துவிட்டது.

நான் சென்னை பெருநகர மேயராகப் பொறுப்பேற்ற நேரத்தில், டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ந்தேபோனேன்.

உடனடியாக பல்வேறு சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில், நிலவேம்புக் குடிநீரும், பப்பாளி இலை சாறும் சிறந்த தீர்வு என்பதைக் கண்டறிந்தேன். இந்தத் தீர்வு சரிதானா என்பதை, சென்னை கிங்ஸ் மருத்துவநிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளச் செய்தேன். அது, டெங்கு நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக செயலாற்றுவது உறுதியானதும், அந்த ஆய்வு அறிக்கையோடு அன்றைய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருச்ணனுடன் இணைந்து, நமது புரட்சித் தலைவி அவர்களை சந்தித்து தகவல் தெரிவித்தோம்.

புரட்சித்தலைவி அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார். சென்னை மற்றும் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம் நடத்தி, நோய்த் தொற்று ஏற்படாமல் தமிழகத்தைக் காப்பாற்றினார்.

அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு பயன்படுத்த உத்தரவிட்டு, அதனை பத்திரிகைகளில் முழுப்பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு உருவாக்கினார்.

அதனாலே, டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்படியொரு தருணம் மீண்டும் உருவாகியுள்ளது. கொரோனா தீயநுண்மி கிருமிகளுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது.

இந்த நேரத்தில், நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தின் பெருமையை உலகறிய நிலைநாட்டவும், அதன் மூலம் நம் விவசாயத்திற்கும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும் ஓர் அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளது.

ஆம், இப்போது கொரோனா தீயநுண்மிக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பல பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கூறிவருகிறார்கள். அதேபோன்று கொரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளை தயார் செய்வதற்கான குறிப்புகள் நிறைய மருத்துவர்களிடம் இருக்கிறது.

ஆகவே, பாரம்பரிய வைத்தியம் மூலம் கொரோனா தீயநுண்மியை வெல்லமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அனைத்து மாற்று மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், நேச்சுராபதி, யோகா மருத்துவர்களை மட்டுமின்றி, நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியால் ஆயுச் மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட கோமியோபதி, யுனானி மருத்துவர்களையும் கலந்து பேசி போர்க்காலம் அடிப்படையில் கொரோனாவுக்கு மருந்தும், தடுப்பு மருந்துகளும் கண்டறிய வேண்டும்.

அப்படி கண்டறிந்த மருந்துகளை, மத்திய, மாநில அரசுகளின் பகுப்பாய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து, அதன் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரிந்ததும், மக்களுக்கு மருந்து கிடைப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

என்னுடைய அனுபவ ஆய்வு மற்றும் மண்ணின் மரபு சார்ந்த வாழ்க்கை முறையில் இருந்து, நமது பாரம்பரிய சித்த வைத்தியத்தின் மூலம், கொரோனா தீயநுண்மியை  நிச்சயம் அழிக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியொரு மருந்தை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை தங்களுக்கும், நம் தமிழகத்திற்கும் கிடைக்க வேண்டும்.

ஒரு விவசாயி தமிழக முதல்வராக இருக்கும் நேரத்தில் இப்படியொரு சரித்திர சாதனை நிறைவேற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ஆயுச் மருத்துவத்தின் மகிமையை அறிந்தவர் நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. ஆகவே, அவர் நமது கண்டுபிடிப்புக்கு நிச்சயம் உரிய மதிப்பு கொடுத்து இந்தியா முழுவதும் அறிமுகம் செய்வார்.

இதன் மூலம் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் பெருமையை உலகறிய பறைசாற்ற முடியும். இதன் மூலம் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் தங்கள் பெயர் நிலைத்திருக்கும்.

கொரோனா தீயநுண்மி அழிப்பது மட்டுமின்றி, போதிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம், உடலில் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி, எந்த ஒரு நோய்க் கிருமிகளாலும் பாதிப்பு ஏற்படாது என்பதுதான் அடிப்படை மருத்துவம்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒருவரது உடலில் இருக்கும் கீமோகுளோபின் அளவைப் பொறுத்து அமைகிறது.

அதாவது, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் மற்றும் இரும்புச்சத்து அடிப்படையில் கீமோகுளோபின் நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 மி.கி. அளவும், பெண்களுக்கு 11.5 முதல் 13.5 மி.கி. அளவும் இருக்க வேண்டும். இந்த கீமோகுளோபின் அளவு அதிகரித்துவிடாமலும், குறைந்துவிடாமலும் பாதுகாக்கும் தன்மை நம் தமிழ் மண்ணில் விளையும் பாரம்பரிய உணவுகளிலும் மூலிகைகளிலும் நிரம்பியுள்ளது.

ஆம், நாக்கு சுவைக்காக உண்ணும் உணவால் ஆரோக்கியம் கிடைப்பதில்லை. நம் பாரம்பரிய உணவு முறைகளாக சிறு தானியங்கள் மற்றும் மூலிகைகளே நோய் எதிர்ப்பு சக்திகளைத் தருவதுடன், உடல்ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கின்றன.

காலையில் இஞ்சி

கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய்...

மண்டலம் தின்றால்

கோலை ஊன்றி குறுகி நடப்பவன்

கோலை வீசி குலாவி நடப்பானே...

என்று நம் மூலிகைகளின் மகத்துவத்தை அன்றே சொல்லியிருக்கின்றனர் நம் சித்த பெருமக்கள்.

ஆகவே மூலிகைகள் மற்றும் நம் பாரம்பரிய சிறு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விவசாயத்திற்கும், நமது தொன்மையான சித்த வைத்தியத்தையும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் அரசு இயங்கவேண்டும்.

இதனால் நம் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பொருளாதாரச் செல்வமும் மக்களுக்கு ஆரோக்கியச் செல்வமும் தடையறக் கிடைக்கும்.

மேலும், இந்தத் தருணத்தில் மக்களுக்கு ஆரோக்கியத்திற்கான வாழ்வியல் பண்புகளை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்கும் வகையில், உணவை 32 முறை மென்று தின்ன வேண்டும், சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போன்ற உணவு இலக்கணத்தையும் அரசு கற்றுத்தர வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆம், ஆரோக்கியம்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. ஆரோக்கியமில்லாத உடல், ஆரோக்கியமில்லாத செல்வம், ஆரோக்கியமில்லாத பதவியால் யாருக்கும் பயன் இல்லை. ஆகவே, நம் பாரம்பரிய மருத்துவ முறையே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தவேண்டிய நல்ல தருணம் இது.

பாட்டி வைத்தியம், அஞ்சறைப்பெட்டி வைத்தியம் கை வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படும் நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மீட்டெடுக்கும் அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்துவரும் சித்தபெருமக்களின் மகத்துவத்தை உலகறியச் செய்ய வேண்டும்.

உலகின் முதல் விஞ்ஞானி நம் மண்ணில் தோன்றிய சித்தர் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தொன்மையையும், நம் பாரம்பரிய மருத்துவத்தையும் உலகறியச் செய்ய முடியும்.

நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு மூலம் ஏற்கெனவே டெங்குவை ஒழித்த அனுபவம் நம்மிடம் உள்ளது. ஆகவே, கொரோனா வைரஸை அழிப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்குமான மருந்து சித்த வைத்தியத்தில் நிச்சயம் உண்டு.

அதனால், நம் மண்ணையும் மனிதகுலத்தையும் காப்பாற்றும் வகையில் சித்த மருத்துவத்தையும், பாரம்பரிய விவசாயத்தையும் மீட்டெடுத்து, ஆரோக்கியத்துடனும் செல்வத்துடனும் மனித குலம் வாழ்வதற்கு வழி காட்டும் நல்வாய்ப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, வெற்றியடைய அன்புடன் வாழ்த்துகிறேன்."

நன்றி.

அன்பன்

சைதை.சா.துரைசாமி

முன்னாள் மேயர், சென்னை பெருநகர மாநகராட்சி.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.