குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலகத்திற்கே காவல்துறையாக (உலகபோலீசுகாரனாக) அமெரிக்கா அதற்கே கண்ணில் விரல்விட்டாட்டும் கியூபா!

23.03.2020 தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இன்றுவரை கண்ணில் விரல்விட்டு ஆட்டம் காட்டும் அசுரன் யாரென்றால் கண்ணை மூடிக் கண்டு சொல்லலாம் அது கியூபா என்று!ஈரான் ஈராக்கில் பெட்ரோலியம் போல உலகின் சக்கரை கிண்ணம் என்றழைக்கப்பட்ட கியூபாவின் சக்கரை வளம் அமெரிக்காவின் கண்ணை உறுத்த ,அடிபணியமாட்டோம் என கியூபா வீரம் காட்ட கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட இராயீய ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி, மற்ற நாடுகளையும் அதற்காக நிர்பந்தித்து கியூபாவை உலகில் இருந்து தனிமைபடுத்தியது அமெரிக்கா!!


இன்று கொரானா போல 1980 ல் கியூபாவில் மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!


"உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!


அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.


பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காசுட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!


அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.


உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.


இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!


உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்", என்று அறிவித்தார்.


அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.


இன்றைக்கு தீயநுண்மி 'கொரோனா' வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!


அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!


கியூபா தீயநுண்மி(கேரேனாவுக்கு)மருந்து தயாரித்து சீனாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு உலகம் முழுவதும் தன்னுடைய மருத்துவ சேவையை தொடங்கியுள்ளது


39 ஆண்டுகளுக்கு முன் கியூபா என்ற நாடு கண்டுபிடிச்ச மருந்தை W.H.O தடை செய்தது. ஆனால் அதே மருந்துதால் தான் இன்று சீனா தங்கள் நாட்டு கொரோணா நோயாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள்! அது அன்று கியூபா கண்டுபிடிச்ச Alpha 2b என்று மருந்தே !!


இப்போதாவது புரிகின்றதா ? பொருளாதார தடை ஏன் விதிக்கப்படுகின்றது என்று ?


எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக்கூட உள்ள விடமாட்டேன்னு சொல்லுறான்...ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீச் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது....

கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து...தஞ்சம் கொடுத்துள்ளது...மருத்துவம் வழங்கி அவர்களை குணப்படுத்த முன்வந்துள்ளது...


அதற்கு வித்திட்டது கம்யூனிசம் என்னும் பேரன்பு...!


மனிதநேயமே கம்யூனிசம்...! ஒரு நண்பாரின் பதிவில் இருந்து நகல் செய்யப்பட்டது