குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்தவகை குருதி உள்ளவர்களுக்கு கொரோனா பரவாதாம்!

சீனா கூறியதகவல். கட்டுநாயக்க விண்ணுந்து நிலைய ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி!9.03.2020 உலகையே நடுநடுங்க வைக்கும் கொடிய தீயநுண்மி(கொரோனா வைரசு) ஏ குருதிவகை கொண்டவர்களையே அதிகமாகத் தாக்குவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.சீனாவில் தோன்றிய தீயநுண்மி(கொரோனா வைரசை) கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .

அத்துடன் இந்த தீறுண்மி(வைரசு) உலக அளவில் மிக வேகமாக பரவி வருவதுடன் உலக அளவில் இந்த வைரசுக்கு 7 ஆயிரத்து 987 பேர் பலியாகி உள்ளதுடன் சுமார் 145 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரசு தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்த வைரசுக்கு உலகம் முழுக்க ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

தீயநுண்மி(கொரோனா வைரசு ) இதுவரையிலும் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது . இந்த தீயநுண்மி  எப்படி தோன்றியது , இது எதிலிருந்து உருவானது என்ற பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .

இந்நிலையில் உலக சுகாதார ஆராய்ச்சி மையம் தொடங்கி உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீன ஆய்வாளர்கள் வுகானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர் . அதாவது குருதி வகைகளை வைத்து SARC-CoV-2 பரிசோதனையை பயன்படுத்தி 2173 நோயாளிகள் குருதி வகைகளை வைத்து தீயநுண்மி நேர்மறை ஆய்வு செய்யப்பட்டது. அதில் 1778 நோயாளிகளில் 37.75% பேர் ஏ குருதி வகைகளையும் , 9.10 சதவிழுக்காட்டுப்பேர் குருதி வகைகளையும் கொண்டுள்ளனர்.

அதாவது தீயநுண்மி ஏ வகை குருதி கொண்டவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி வகை குருதி கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

கட்டுநாயக்க விண்ணுந்து நிலைய ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களுக்கு விமான நிலையம் மற்றும் விண்ணுந்துசேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேயர் யெனரல் யீ.ஏ.சந்திரசிறி பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒட்டுமொத்த நாட்டையும் தீயநுண்மி தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட, தன்னலமின்றியும் ஓய்வின்றியும் பணிபுரியும் பண்டாரநாயக்க சர்வதேச விண்ணுந்து நிலையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

நாடு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது உங்களின் அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவையும் மகத்தானது என்றும் அவர் பாராட்டியுள்ளதுடன் நன்றிகளையும் உரித்தாக்கியுள்ளார்.

இதேவேளை, இன்றிலிருந்து சர்வதேச விண்ணுநொதுகள் கட்டுநாயக்க விண்ணுந்து நிலையத்தில் தரையிறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், சரக்கு மற்றும் அவசர தேவைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் தீநுண்ணியால் இறந்த 206 பேரில் 41. 26% பேர் ஏ இரத்தவகை கொண்டுள்ளதாகவும் , 25 சதவீதம் பேர் ஓ குருதி வகை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும் இதற்காக ஏ வகை குருதி கொண்டவர்கள் பீதியடைய தேவையில்லை எனவும் குருதி கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாகவும் அர்த்தமில்லை எனவும் தியான்யின் ஆராய்ச்சியாளர் காவ் இங்டாய் கூறியுள்ளார்.

அத்துடன் அனைவரும் அரசு அதிகாரிகள் கூறும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .

இதேவேளை இதற்கு முன்னதாக சார்சுநோய் வந்தபோது நடத்தப்பட்ட குருதிப்பரிசோதனை ஆய்விலும் ஏ வகைகுருதி கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதுவும் சார்சு குழுவின் குடும்பத்தைச் சேர்ந்த வைரசுஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.