குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் மருத்துவ கண்காணிப்பில் 133 பேர்!

15.03.2020 தீநுண்மி (கொரோனா வைரசு) தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற ஐயத்தில் இதுவரை 133 பேர் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 45 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

 

நீர்கொழும்பு மருத்துவமனையில் 15 பேர்,

குருநாகல் போதனா மருத்துவமனையில் 14 பேர்,

கம்பகா மருத்துவமனையில் 13 பேர்

பொலன்னறுவை மற்றும், இரத்தினபுரி மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

சிறுவர் ரிட்ச்வே சீமாட்டி மருத்துவமனையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் 4 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், நாட்டில் இதுவரை 10 பேருக்கு தீநுண்மி (கொரோனா) தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

28 பேரின் மாதிரிகள் நேற்றைய நாள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று பரவுவதை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று முற்பகல் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இராணுவத்தளபதி லெப்டினன் யெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க, சிறப்பு வைத்திய நிபுணர் பபா பலிகவடன உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகைள ஆரம்பிப்பதற்கு முன்னர் இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் ஊடாக தொற்று பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க இதன்போது தெரிவித்திருந்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.