குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகைக்காக்க எல்லோரும் எண்ணுவோம்!

கொல்லும் தீநுண்மியை (கொரோனாவை)

வெல்லும் மனிதர் யார் என்றே

எண்ணங்கள் எழுகின்றன?

தீநுண்மியை மனிதர் வெல்வாரோ ?

மனிதரை தீநுண்மி வெல்லுமோ?

அது பரவாமல் தாக்காமல் இருக்கும்

முறைகள் தான் நடக்கு.

இந்த தீநுண்ணி எப்படி வந்தது?

அதனைஅறிவதே தொடக்கமாக இருக்கு

அதனை ஆராய்ந்த பின்பே

மருந்தென்பது காணமுடியும்

என்பதே அறிவியல் முடிவாக இருக்கு!


தனிநபர்களின் அறிவு பொருட்களை

தேக்கினால் சரியென்பது தீர்வாக இருக்கு!

மற்றவர்க்கில்லாமல் எமக்கென்று ஆக்கும்

அறியாமை தேங்கிக்கிடக்கு!!


தீநுண்மியைக்காட்டி தன்னல நுண்மிகள்

பெருகி மனிதவரலாற்றில் விரும்பாப்

பண்பொன்று உருவாகி மனிதம் அழியுமோ!

தீநுண்மியால் மாற்று நடைமுறைகள் உயருமோ!!


வீட்டுக்குள்ளிருந்தாலும்

உலகிற்குள் நுழைவோம்

உலகிற்குள் இருந்தாலும்

வீட்டிற்குள் சுருங்குவோம்

சுயநலம் கருவாகியிருப்பின்.


ஏட்டில் எடுத்ததை

எண்ணத்தில் உயர்வாய்

கொள்வோம் உயர்வோம்

உலகைக்காக்க

எல்லோரும் எண்ணுவோம்

அதுவே எல்லோரையும்காக்கும்

மருந்தாகும் கடவுளுமாகும்.


பூநகரி பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 14.03.2020

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.