நாளை மார்ச் 15- ஆம் திகதி முதல் இந்தத் தடை அமுலாகும் என மக்கள் விண்ணுந்து(விமான) சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கு இலங்கை பயணத்தடை விதித்தது. நாளை சனிக்கிழமை முதல் இரு வாரங்களுக்கு இத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை மேலும் 8 நாடுகளுக்கு இருவார கால பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 11 நாடுகளுக்கான பயணத் தடை அமுலில் உள்ளது.
இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்த பயணத் தடைகள் விசுதரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விண்ணுந்து( விமான) சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.