14.10.2019 இதுவெல்லாம் பெரியநிலையில்லை! சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இடையே மொழிபெயர்ப்பு செய்தவர் ஒரு தமிழர் என்பதே நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அவர் கோவை சேர்ந்தவர் என்பதும், மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ரவீந்திரன் என்பதும் தெரியவந்துள் ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் யீ யின்பிங் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது புராதன சின்னங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது பிரதமர் மோடி, அதிபர் யி யின்பிங்கிற்கு இந்திய பாரம்பரிய கலாச்சாரங்கள் மற்றும் மாமல்லபுரம் புராதன சின்னங்களில் வரலாறு குறித்தும் விளக்கினார். மோடி இந்தியில் பேசியதை சீனத்திற்கு மொழிபெயர்த்து யி யின்பிங்கிற்கு விளக்கியவர் ஒரு தமிழர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்காக அவர்களின் நிழல் இருந்தவர்கள் இருவர். அதில் ஒருவர் சீன அதிகாரி மற்றொருவர் இந்திய அதிகாரியான ரவீந்திரன் மதுசூதனன். படுவேகமாக சீன மொழி பேசிய ரவீந்திரனை பார்த்து ஒரு கட்டத்தில் சீன அதிபரே அதிந்து போனார்…. மாமல்லர்கள் காலத்து சிற்பங்களை பார்த்து வியப்பதா ? தமிழர் சீன மொழியை அச்சு அசலாக பேசுவதை பார்த்து வியப்பதா என்று தெரியாத நிலை. ஒட்டு மொத்தத்தில் சீன அதிபருக்கு தமிழர்கள் என்றால் யார் என்பது நன்றாக புரிந்திருக்கும்…