குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தனிச்சிங்கள வாக்குகளால் இலங்கையில் சனாதிபதி தெரிவு உறுதி அழுத்திச்சொல்கின்றார் நிலாந்தன்!அரசியல்

கட்டுரை. 17/08/2019- சில வாரங்களுக்கு முன்பு டான் தொலைக்காட்சியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்………“சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்தசனாதிபதி! சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.

ஒரு சின்னக் கணக்கு.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096.

வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676.

வெற்றிபெறத் தேவையானது-6,396,839.

தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393.

அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914.

இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839.

ஆக சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட இல்லாமல் சனாதிபதி ஆகிவிடமுடியும்.இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள்சனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!” இது கருத்தில் கொள்ளத்தக்க வாதம் தான்.

இடைச்செருகள்  இன்று வெறுப்பு நிலை தலைவர்கள் இரணில்  மைத்திரி விருப்புநிலைத்தலைவர்கள் மகிந்த பசில் கொத்தா சயித் சயித்திற்கு இரணிலாதரவாளர்களின் முழு ஆதரவுஇருக்கப்போவதில்லை.

அப்படியென்றால் இலகுவெற்றி யாருக்கு என்றுபார்த்தால் மொட்டுக்கட்சிக்கு என்பதே இன்றைய நி்லை அன்று சந்திரிக்காவின் ஒரே  இலக்கு மகிந்த குடும்  ஆட்சி  அமரக்கூடாது  இன்று அவரின் ஒரே இலக்கு சிறிலங்கா சட்சியின் தலைமையைக்கைப்பற்றுவது இதற்கு மைத்திரி பக்கம் தோற்றாலும் அது அவருக்குசாதகம். அவர் ஒன்றை  பார்க்கவேண்டும்  மகிந்த இன்று இரண்டுகட்சியின் தலைவராகவும்  வலம் வரும் வல்லவர் போல் நிலை யுண்டு  மைத்திரி  சந்திரிக்காவை  விடவும்  மகிந்த பக்கம் செல்லக்கூடிய வராகவே  இருக்கின்றார் காரணம் இரணிலின் சந்திரிக்காவின் நட்பு  ஆழமானது என்பதால் சிறிலங்கா கட்சியின் தலமை  சந்திரிக்காவிற்கு போவதற்கு தடையாக  மைத்திரியே  இருக்கப்போகின்றார் ஒக்டுாபர் குழப்பம் அதனைத்தான் உணர்த்தியுள்ளது.

எனவே என்தனிப்பட்ட நிலை சிறுபான்மைவாக்குகளை உடைக்கும் திறமை விழவிடாமல் ததடக்கும் சண்டித்தனம் ஒருவித செயல் திறனும் மகிந்த பக்கம் உள்ளது இதையும் எடுத்தெண்ண வேண்டும்.

இலங்கையின் பொருளாதார காரர் பசிலை விரும்புகின்றார்கள் படைத்தரப்பு கொத்தாவை விரும்புகின்றார்கள் இளையவர்கள் நமாலை விரும்புகின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள்  கவிஞர்கள் கலைஞர்கள்  மகிந்த பக்கத்தை  விரும்புகின்றார்கள்  குறிப்பாக முல்லைத்தீவில் கனகரத்தினம் அதிகம் விரும்புவது  மகிந்த வெற்றியை இதுபுதுக்குடியிருப்பு பக்க வாக்குகளை  அதிகம் மகிந்த அணிக்கு சாய்க்கும் சாத்தியம் உண்டு!துமிழரசுக்கட்சி வாக்குகள் அப்படி யே  இருந்தாலும்  அதுஅவர்களின் தனிப்பட்ட நலன்களைப்பேணுமே ஒழிய  இனிமேலும் அரசியலில் தாக்கம் எத்தகையது என்பது கேள்விக்குறியே!

குகநாதனின் கணக்கில் ஒரு தர்க்கம் உண்டு. 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை இலங்கை வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு எதிரணி தமிழ் பகுதிகளில்தான் பெருமளவு வெற்றி பெற்றது. அதேசமயம் சிங்களப் பகுதிகளில் அக்கூட்டு எதிரணி கொழும்பு, கண்டி,கம்பகா திகாமடுல்ல ஆகிய பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மகிந்த 47.58 வீத வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன 51.28 விகிதத்தை பெற்றார். அதாவது மகிந்த 3.07 விகித வாக்குகளால் தோல்வியுற்றார்.

இது ஓர் அரும்பொட்டு வெற்றி இந்த வெற்றிக்கு பெருமளவு காரணம் தமிழ் முசுலிம் மலையக வாக்குகளே

அதே ஆண்டு ஓகசுற் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தின் அலை ஒன்று வீசியது. எனினும் நல்லாட்சிக்கான ரணில்-மைத்திரி கூட்டுக்கு கிடைத்தது 45.66 விகிதமாகும். மகிந்த ராயபச்ச அணிக்கு கிடைத்தது 42.38 விகிதமாகும். அதாவது 3.28 விகித வேறுபாட்டில் ரணில் மைத்திரி அணி வெற்றி பெற்றது. சனாதிபதி தேர்தலுக்குப் பின் ஒரு வெற்றி அலை வீசிய போதிலும் மகிந்த அணிக்கும் ரணில் மைத்திரி அணிக்கும் இடையிலான வாக்கு விகித வித்தியாசம் எனப்படுவது 3.28 விகிதம்தான்.

அதன் பின் நிகழ்ந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராயபச்ச அணி பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றியைப் கண்டு அஞ்சியே ரணல் – மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தது. முடிவில் கடந்த ஆண்டு தேர்தல்களை நடாத்தியது. அத்தேர்தலில் ராயபச்ச அணி தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் பொது ஜன பெரமுன என்ற கட்சியாக போட்டியிட்டு பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் மைத்திரியைக் குழப்பியது. அதன் விளைவே கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குழப்பம் ஆகும்.

பொதுசன பெரமுன எனப்படுவது போர் வெற்றியின் குழந்தை. போர் வெற்றியை நிறுவன மயப்படுத்தி அதைக் கட்டிறுக்கமான ஒரு கட்சியாக மகிந்த கட்டி எழுப்பியுள்ளார். மகிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டி எழுப்பியதில்ராயபச்சக்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனினும் சந்திரிக்காவின் கண்டிச் சிங்கள மேட்டுக்குடி வம்சத்துக்கு நிகராக நின்று பிடிப்பதில் ராயபச்சக்களுக்கு அடிப்படையான சவால்கள் முன்பு இருந்தன. ஆனால் யுத்த வெற்றியின் மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த மேட்டுக்குடி கண்டிச் சிங்கள வம்சங்கள் எதனாலும் முடியாத ஒன்றை ராயபக்ச சாதித்துக் காட்டினார்.

 

வெல்ல முடியாது ஒர் அமைப்பு என்று நம்பப்பட்ட புலிகள் இயக்கத்தை அவர் தோற்கடித்தார். அதன்மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த கண்டிச் சிங்கள மேட்டுக்குடிகளுக்கு எதிராகத் தன்னை தோற்கடிக்கப்பட முடியாத ஒருவராக நிறுவுவதை. பண்டாரநாயக்காக்களின் கட்சியாகக் காணப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது முதன்மையை நிறுவுவதை  விடவும் தனது போர்வெற்றிகளையே ஒரு கட்சியாகக் கட்டியெழுப்புவது என்று அவர் முடிவெடுத்தார். அப்படி முடிவெடுத்துக் கட்டி எழுப்பப்பட்டதே தாமரை மொட்டுக் கட்சியான பொது சன பெரமுன. இதன் மூலம் ராயபச்சக்கள்போர் வெற்றியைத் தமது குடும்பச் சொத்தாக்கி அதை நிறுவனமயப்படுத்தியும் விட்டார்கள்.

“கடந்த உளூராட்சி மன்றத் தேர்தலில் இக்கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ஆசியாவிலேயே சீனக் கொம்மியூனிசுட் கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய கட்சி அதுவென்றும் டியிட்டல் தளங்களிலில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது என்றும்” சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எசு.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 இல் இருந்து மகிந்ததான் சிங்கள-பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கேள்விக்கிடமற்ற தலைவராக காணப்படுகிறார். 2015இல் அவரைத் தோற்கடித்தது தமிழ் முசுலிம் வாக்குகள்தான். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை பொறுத்தவரை மகிந்த தான் அதன் தலைவர்.

2015இல் மைத்திரி கட்சியை இரண்டாக உடைத்தார். அதுதான் மகிந்தவின் தோல்விக்கான வழிகளைத் திறந்து விட்டது .ஆனால் 2015இலிருந்து தொடர்ச்சியாக நடந்த எல்லா தேர்தல்களிலும் மகிந்ததான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தி தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.

இப்பொழுது மகிந்த போர் வெற்றி வாதத்தை நன்கு நிறுவன மயப்படுத்தி அதை ஒரு கட்சியாகக் கட்டி எழுப்பி விட்டார். பிளவுண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெருந்துண்டு மகிந்தவிடம் சென்று விட்டது. அக் கட்சியின் சிதைவின் மீது பொது சன பெரமுன கட்டியெழுப்பப்படுகிறது. பொது சன பெரமுனவின் சனாதிபதி வேட்பாளராக போர் வெற்றி நாயகர்களில் ஒருவரான கோத்தபாயவை அறிவிக்கப்பட்ருக்கிறார்.

போர் வெற்றி வாதம் எனப்படுவது 2009 க்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சிதான். எனவே போர் வெற்றி வாதத்தை ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பியதன் மூலம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாக்;குகளை அப்படியே கொத்தாக அள்ளியெடுக்க ராயபச்ச சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள்.

இவ்வாறு ராயபச்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து தமது வியூகத்தை வகுக்கும் வகுத்திருக்கும் ஒரு பின்னணியில் இரணில் விக்கிரமசிங்க என்ன செய்யப் போகிறார்?

அவர் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை காலம் தாழ்த்துவதன் மூலம் சயித்தின் ஆதரவாளர்களை எப்படிச்சமாளிக் கலாம் என்று அவர் சிந்திக்கிறார். கட்சித் தலைமையை அவர் வேறு யாரிடமாவது கையளிக்கத் தயாரா?

அவருடைய தரப்பு வேட்பாளர் யாராகவும் இருக்கலாம் ஆனால் அந்த வேட்பாளர் மூவின வாக்குகளை திரட்டும் ஒருவராக இருக்கவேண்டும்.

ஆனால் அவ்வாறு மூவின வாக்குகளைத் திரட்டப்போகும் வேட்பாளருக்குப் பின்வரும் சவால்கள் உண்டு.

முதலாவது சவால் – ஈசுடர் குண்டு வெடிப்புக்குப் பின் ஒரு பகுதி சிங்களப் பொதுக் கூட்டு உளவியல் எனப்படுவது உறுதியான ஒரு தலைமைத்துவத்தை கோரத் தொடங்கிவிட்டது.

அப்படி ஓர் உறுதியான தலைமை போர் வெற்றி வாதிகள் மத்தியில்தான் உண்டு. லிபரல் சனநாயக முகமூடி அணிந்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் மத்தியில் உண்டா?

இரண்டாவது சவால் – ஒரு புதிய மாற்றத்தை அல்லது பெருந்திருப்பத்தை ஏற்படுத்தத் தேவையான ஒரு புத்துணர்ச்சி மிக்க கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப வல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் அந்த அணியிடம் இல்லை.

2015 இல் மைத்திரிபால சிறிசேன அப்படி ஒரு வேட்பாளர் போல தோன்றினார். அப்பொழுதும் கூட அவருடைய அமைச்சின் கீழ் வேலை செய்த சில தமிழ் மருத்துவர்கள் சொன்னார்கள்…….அவர் காட்டும் லிபரல் சனநாயக முகம் ஒரு முகமூடி என்று.

தென்னிலங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரைகள் யாவும் சிங்களத்தில் அமைந்திருந்த பொழுது அதைச் சுட்டிக்காட்டிய தமிழ் மருத்துவர்களிடம் நீங்கள் சிங்களம் பழகுங்கள் என்று அவர் கூறியதாகத் தகவல் உண்டு.

இப்பொழுது மைத்திரியின் முகமூடி கிழிந்து விட்டது. இனி அவரைப் போல யாரைக் கொண்டு வந்தாலும் அது முகமூடியா நியமா என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பார்கள்.

முசுலிம் மக்களும் சந்திப்பார்கள். ஏன் மைத்திரி வாக்களித்த சிங்கள மக்களும் சந்திப்பார்கள்.அதாவது மாற்றத்தை குறித்து புத்துணர்ச்சி மிக்க எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் நாட்டில் இப்பொழுது இல்லை.

இது இரணில் அணிக்குப் பாதகமான அம்சம்.

மூன்றாவது சவால் – 2015இல் பிளக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இப்பொழுது பெருமளவுக்கு மீள இணைக்கப்பட்டு அதில் பெரும்பகுதி மகிந்தவோடு நிற்கிறது. சிறு துண்டு மைத்திரியோடு நிற்கிறது.

நாலாவது சவால் – தமிழ் மக்களின் கூட்டுக் உளவியல் 2015ல் காணப்பட்டதை போல இப்பொழுது இல்லை. கூட்டமைப்பின் மீதும் ரணிலின் மீதும் அதிருப்தியும் கோபமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. கம்பெரலிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகள் மைதானங்கள் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாவற்றையும் மேவிக்கொண்டு நாவற்குழியில் கட்டப்பட்டு வரும் விகாரை தெரிகிறது, கன்னியா தெரிகிறது, பழைய செம்மலை தெரிகிறது. எனவே தமிழ் மக்களின் கூட்டுக் உளவியலை ராயபச்சவுக்கு எதிராக திரட்டுவது என்ற ஓர் உத்தியில் மட்டுமே கூட்டமைப்பும் ரணிலும் தொங்க வேண்டி இருக்கும்.

ஐந்தாவது சவால் – முசுலிம் வாக்குகள். ஈசுடர் குண்டுவெடிப்பின் பின் முசுலிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வெல்ல முடியாத பேரினவாதத்தோடு மோதுவதை விடவும் அதோடு சுதாகரித்துக் கொள்ளலாம் என்று ஒரு தரப்பு முசுலிம்கள் யோசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஆற்றிய உரையில் வெற்றி பெறும் தரப்பு எது என்று பார்த்துத் தாம் முடிவெடுக்க போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015 இல் மாற்றத்துக்காக விழுந்த வாக்குகளில் முசுலிம்களின் வாக்குகளும் கணிசமானவை. முசுலிம் கூட்டுக் உளவியல் 2015 இல் காணப்பட்டதை போல இப்பொழுதும் காணப்படுகிறதா?

ஆறாவது சவால் – 2015இல் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் லிபரல் சனநாயக வாதிகளும் பல்கலைக்கழக புத்தியீவிகளும் கருத்துருவாக்கிகளும் படைப்பாளிகளும் மத குருக்களும் தென்னிலங்கையில் ஒரு கூட்டாகத் திரண்டு வேலை செய்தார்கள. ஆனால் இம்முறை அப்படி மாற்றத்தை குறித்த ஓர் அலையை உருவாக்குவது யார்? அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மீதும் வாக்காளர்கள் மீதும் தார்மீகத் தலையீட்டை மேற்கொள்ளவல்ல சோபித தேரர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சோபித தேரர் இல்லை.

இருப்பதெல்லாம் ஞானசார தேரர்களும் இரத்தின தேரர்களும்தான.இதுவோர் எதிர் மறை வளர்ச்சி.

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ராயபச்ச அணியின் போர் வெற்றி வாதத்திற்கு எதிராக நின்று பிடிக்கக்கூடிய ஒரு வேட்பாளருக்குப் பாதகமான அம்சங்களே அதிகம் உண்டு.

இப்பாதகமான அம்சங்களை எதிர்கொண்டு மூவினத்து வாக்குகளைக் கொத்தாகத் திரட்டக் கூடிய ஒரு வேட்பாளர் யார்?

இறுதி  இடைச் செருகல்.இனவாதம் இலகுவான வெற்றிநிலைக்கு வந்துவிட்டது. இரணில் செய்த பிழை தைம்திரியின் எண்ணத்திற்கு இராசபச்சாக்களை கைதுசெய்யாமை சட்ட நடவடிக்கைகள்  எடுக்காமை  அதனால் அவர் தரப்பு தப்பும்தோற்றாலும்.மைத்திரியும் இதையுணர்ந்தே  மகிந்த பக்கம் நின்றார்  தம்மை தம்மைப்பாதுகாக்கும் அரசியல் மகிந்தவால் நகர்த்தப்பட்டதால் இனிஎவரும் மகிந்த அணியினரை விட நல்லவர்கள் இல்லை என்ற  மனநிலை மக்கள் மதியில் உண்டு!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.