அந்தப்புறநானூற்றுப் பாடலின் (புறம் : 184) திரண்ட கருத்து:
=ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அங்கு
விளைந்த நெல்லை கவளம் கவளமாக யானைக்கு
ஊட்டினால் அது பல நாட்கள் வரும் .
யானையும்பல நாட்கள் பசியடங்கி இன்பமடையும்.
அப்படி இல்லாமல் யானை தன் போக்கில் வயலில்
புகுந்து தின்றால் அது உண்ட நெல்லை விட
வீணாகும் நெல்லே அதிகமாகும்.
அது போல அறிவுடைய வேந்தன் அறமுறைப்படி
மக்களிடம் வரி முதலியவற்றை வசூல் செய்து
ஆட்சி புரிந்தால் நாடு செழிக்கும் செல்வம் குவியும் .
அதை விடுத்து அமைச்சர்களின் தவறான வழிகாட்டுதலின்படி வரைமுறையில்லாமல்
குடி மக்களிடமிருந்து வரி வசூல் செய்வானானால்
அது நாட்டிற்குக் கேட்டையே விளைவிக்கும் =
,,,,,,,,,