பூநகரியை நில அமைப்பின் அடிப்படையில் வடக்குத் தெற்காக பிரித்து நோக்கினால் பூநகரி வடக்கு தெற்க்கைக் காட்டிலும் நன்நீர் இன்மையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பாக காணப்படுகின்றமையால் இங்குள்ள மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியிலும் வேறு கிராமங்களில் இருந்து உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்படும் நீரை விலைகொடுத்து வாங்கித்தான் தமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர்.
பல்வேறுபட்ட சிறிய குளங்கள் காணப்படுகின்ற போதிலும் மாரிகாலங்களில் அவற்றில் தேக்கிவைக்கப் படுகின்ற நீர் வருடம் முழுவதும் இங்கு வாழும் மக்களின் குடிநீர் தேவை தவிர்ந்த இரத தேவைகளையும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதியதாக காணப்படவில்லை இதன் காரணமாக வருடத்தின் ஆடி ஆவணி புரட்டாதி போன்ற அதிக வெப்பம் நிலவுகின்ற காலங்களில் குடிநீர் தவிர்ந்த இரத தேவைகளுக்கான நீரையும் கால்நடைகளுக்கான குடிநீரையும் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுவது பூநகரி வடக்கு மக்களின் துர்ப்பாக்கியம் ஆகும்.
இரணை மடுவில் இருந்தான பூநகரிக்கான குடிதண்ணீர் வினியோகம் மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனினும் பூநகரி வடக்கின் ஒரு சில கிராமங்களில் நீர் வினியோகத்திற்கான குழாய் பொருத்தும் பணி இடம்பெறாமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் உண்டு பண்ணி இருப்பது கவலைக் குரிய விடயமாகும்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டியது துறை சார்ந்த அதிகாரிகளினதும் அரசியல் தலைவர்களினதும் தலையாய கடமையாகும் எனினும் குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இவை எல்லா வற்றையும் கடந்து இரணை மடுவில் இருந்தான நீர் வினியோகம் பூநகரி மக்களின் அன்றாட தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடமும் அனைத்து மக்களிடமும் உள்ளது.
கைiலைநாதன்.அன்பரசன் 28.06.2019