23.06.2019-சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ஆகச் சிறிய தமிழ்ப் புத்தகம் என்ற பெருமையை, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகம் 'குறளொலி' என்ற புத்தகத்துக்கு வழங்கியுள்ளது.கடன் பற்று அட்டை அளவிலான 'குறளொலி' இன்று வெளியிடப்பட்டது.
"Read Fest 2019" எனும் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்தர விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் புத்தகம் வெளியிடப்பட்டது. வெளியில் செல்லும்போது எடுத்துச் செல்ல ஏதுவான வடிவில் திருக்குறள் தெளிவுரை அமைந்திருப்பதாகப் புத்தகத்தைத் தொகுத்துள்ள எழுத்தாளர் நா.வெங்கட் கூறினார்.
சிங்கப்பூரில் மலேசியாவில்தான் தமிழகம் ஈழம் என்பததைத்தாண்டி இத்தகைய சிறப்பான தமிழுக்கான பணிகள் நடைபெற்றுவரவதுவழமை. உண்மையான தமிழ்மொழிப்பற்றாளர்கள் தமிழைப்பற்றி அறிந்திரபு்புவுரு்குளமு் இவர்களே! புலம்பெயர் ஐரோப்பா கனடா அமெரிக்கா அவுசுரேலியா பிரித்தானியத்தமிழர்களும் தமிழை உலகதரத்திற்கு கொண்டுசெல்லல் தலையாய கடமையாகும்.
வாழும்காலத்தில் எலாரும் கற்பதும் பணம் தேடுவதும் பொதுவான நிலை சிறப்பானநிலையெனின் இத்தைகைய பணிகளை ஆற்றுவது அவசியம். நாம் மட்டும் வாழாமல் எம்மை வாழவைத்தை எம் எண்ணைத்தை ம்றவர்களுக்கு பரிமாறவைத்த மொழிக்கு நாம் என்ன செய்தோம் என்று எண்ணிப்பணியாற்றுவோம்.