மூன்றாம் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வந்த போது 1984 இல் கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கினார்.
வெல்லுகின்ற பக்கம் பாய்ந்து தாமும் வெல்லும் அரசியல்வாதிகள் நிறைந்த இக்காலத்தில் தனது கொள்கைக்காக எதையும் விட்டுக் கொடுக்காத அவரது பிடிவாதம் தனித்துவமானது.
1999 இல் யெயசிக்குறு எதிர்ச்சமர் மூலமாக கருணா அம்மானின் படைகள் பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தன.
2000 ஏப்பிரலில் ஆனையிறவையும் வென்று யாழ்நகரின் எல்லையில் நின்றார்கள்.
அப்போது வீரர்களாகப் போற்றப்பட்ட அவர்கள் 2004 மார்ச்சில் வெருகலில் துரோகிகளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அது போன்ற மாறுபட்ட நிலையில் ஆனந்தசங்கரி ஐயா நிற்கவில்லை.
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து தனது மனதில் பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
அவரைப் போட்டுக் கொடுத்து மேல்நிலையை அடைந்த அதே அரசியல்வாதிகள் தான் 2009 சனவரி மாதத்திற்குப் பின்பாக தமது கைத்தொலைபேசிகளை நிறுத்தி வைத்திருந்து தமது தமிழரை்கள் மீதானவிடுதலைப்புலிகள் மீதான விசுவாசத்தைக் காட்டினார்கள்.
ஆனால் அது போன்ற துரோகத்தை ஆனந்தசங்கரி ஐயா செய்யவில்லை.
யாழ்ப்பாண மாநகர மேயராக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையாவை அவர் நியமித்த போதே அவருக்கு எதிரான அரசியல் சதிராட்டங்கள் ஆரம்பித்து விட்டது.
அவருக்கு எதிரான துரோகிப் பட்டத்தின் ஆணிவேரே அது தான்.
அண்மையில் யாழ் பொதுசன நூலகத் திறப்பு விழா குறித்தான கல்வெட்டும் அகற்றப்பட்டு விட்டது.ஆனந்தசங்கரி ஐயாவின் புகழ்பாட இப்பதிவை இடவில்லை.
அரசியல் நீரோட்டத்தில் நடிக்கத் தெரியாத மனிதராக அவர் எனக்குத் தெரிகின்றார்.
புதிய அரசியலமைப்பை வரையத் தொடங்கிய போதே சொன்னார் சிங்களவர்கள் இதற்கு விடமாட்டார்கள்.
இது காலத்தை வீணாக்கும் செயல்.
ஆகவே நீங்கள் ஏற்கனவே இருக்கின்ற அரசியலமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்குரிய உரிமைகளை வெல்லுங்கள் என்றார்.
அது தான் இன்றுள்ள நிலைமையும் கூட. ஏக்கிய ராச்சிய வரைவிலக்கணங்களைக் கூறியோர் மௌனமாகி விட்டனர்.
ஆனந்தசங்கரி ஐயா கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்புக்கும் அதன் அபிவிருத்திக்கும் அடித்தளமிட்ட ஒருவர்.
இவ் வருடத்துடன் இம் மாவட்டம் பிறந்து 35 வருடங்கள்.
அவரை வாழும் போதே வாழ்த்தும் வண்ணம் நன்றியுடையவர்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்துக் கௌரவித்தல் வேண்டும்.
இறந்த பின்பு மனிதர்களைப் புகழ்வது வீணான செயல் .
வரலாறு என்பது வெற்றி பெற்ற மனிதரால் எழுதப்படுவது. தோல்வியடைந்த மனிதர்களை இருட்டடிப்புச் செய்தல் அறமல்ல.