குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர் வரலாறு :ஞா. தேவநேயப் பாவாணர், முன்னுரை.

28.03.2019-இந்திய ஐரோப்பிய மொழியினம்: கிரேக்கம், செர்மனியம், உருசியன், செல்டிக் போன்ற மொழிகள் இவ்வினத்தின் கீழ் சொல்லப்படுகின்றன. இவை கி. மு. 3000ஆண்டுகளில் அப்பகுதியில் பேசப்பட்ட மொழிகளாகும். இம்மொழிக் குடும்பத்தில் இந்திய என்ற சொல் எவ்வாறு இனணக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்துள்ளார், இந்நிய மொழியின்தாக்கம் அம்மொழிகளில் உணரப்பட்டதாலேயே எனலாம். இந்திய மொழி என்று அவர்கள் கூறுவது தமிழ்மொழியையே என்பது தெளிவு. 

இந்திய-- ஐரோப்பிய மொழிக்கு மூலமொழிஎது?

அது முற்காலத்து இந்திய ஐரோப்பிய மொழி(Proto-Indo -European) என்று பொதுவாக சொல்லிவைத்தனர்.

அந்த Proto-Indo மொழி என்பது தமிழே என்பதால், இந்திய-- ஐரோப்பிய மொழிச்சொற்களில் பெரும்பாலானவை தமிழ் மூலத்தையே கொண்டுள்ளன.

ஆனால், மூொழியியல் ஆய்வாளர்களோ, இந்திய மொழி சமஸ்கிருதமே என்றும், அதுவே இந்தியாவின் தொன்மையான மொழி என்றும் தவறாக கருதினர் என்பதால் சமஸ்கிருதமும்--ஐரோப்பியமொழியும் கலந்ததே இந்திய-- ஐரோப்பிய மொழி கூறுவாராயினர்.

ஆதாரம் :1.Table of Nations:Dictionary Of Bible.

2.The Cambridge Encyclopedia.

சமற்கிருத மொழியிலுள்ள தமிழ்மொழியின் தாக்கம், 60சதவீததிற்கு மேலான தமிழ்ச்சொற்களை தன் வயப்படுத்திகொண்ட தன்மை, சிந்துவெளித்தமிழும் ஆரிய நாடோடி மொழியும் இனணந்ததே சமற்கிருதம் என்ற உண்மை மேலைநாட்டாருக்குத் தெரியவில்லை, சமற்கிருதமும் இந்தியாவின் தொன்மை மொழி என்றனர் ஆரியர்கள்.

சமற்கிருதம் என்பதற்கு செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்பதே பொருளாகும்.

குறி என்றதமிழ்ச்சொல்லுக்கு வரிவடிவம் என்ற சிறப்புப்பொருளும், மொழி என்ற பொதுப்பொருளும் உண்டு.

'குறி 'என்ற தமிழ்ச்சொல்லே 'க்ரு 'என்று வடமொழியிலும்,' கிரபோ' என்று கிரேக்கத்திலும், 'கிராஃப் என்று ஆங்கிலத்திலும் திரிந்தது.

செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்ற பொருளும், செம்மை +குறி எனும் தமிழ்ச்சொற்களே 'சமற்க்ருத 'என்று திரிபுபட்டது.

ஆரியன், வேதம், இரிக்கு போன்ற வடமொழிசொற்கள் யாவும் தமிழின் மூலத்தையும் வேரையும் கொண்டவைகளே.

ஓரினத்தின் பெயரைக் குறிக்கும் அடிப்படைச்சொல்லே (ஆரியன்) தமிழ்ச்சொல்லாக இருக்க, ஆரியம் தமிழினும் மூத்தமொழி என்பது நகைப்பிற்குரியது.

பாவாணர், ஆரிய மொழியில் 40சதவீதம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.

இன்னும் உன்னி உள்ளே சென்று பார்க்குங்கால் 60சதவீதம் தமிழ்ச்சொற்களாகவேயுள்ளன.

ஆரியரது இந்திய நுழைவு கி. மு. 2000க்குப் பிறகே என வரையறை செய்யப்பட்ட நிலையில் ,இந்தியாவின் மூத்தமொழி சமற்கிருதமே என்று மேலை நாட்டு அகரமுதலிகள் கூறிவந்தனர், முழுப்பூசணியை எத்தனை நாளக்கு மறைக்கமுடியும் தற்போது வெளிவந்தது, அந்த அகரமுதலிகளின் அறியாமையையே காட்டுகின்றது.

ஆதாரம் :

தமிழர் வரலாறு :

ஞா. தேவநேயப் பாவாணர், முன்னுரை.