இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் இரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.
இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி புகைத்தல் மதுபானம் போன்றவற்றாலும் நுரையீரல் பெரிதும் பாதிப்படைகின்றது.
உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது அவை என்ன என்ன பார்ப்போம்.
நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரக்கோலி ஒன்றையு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.
ஆப்பிளில் ஆண்டி ஆக்சிடன்ட்சு அதிகம் இருப்பதால், அது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கை நிறைய சாப்பிடுவதன் மூலம் ஆசுதுமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.
அகாய் மற்றும் ப்ளுபெர்ரி இரண்டும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க திறம்பட செயல்படும் பெர்ரி ஆகும். இவற்றில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடன்ட் இருப்பதால், செல் சேதமாவதை எதிர்த்து போராட உதவும்.
பிரக்கோலியை அப்படியே சமைக்காமல் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுபவர்கள் அல்லது லேசாக வெண்ணெய் சேர்த்து வதக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம்.
கெய்ன் மிளகு உள்ள கேப்சைசின் மேல் மற்றும் கீழ் சுவாச பாதை இருந்து சளி சவ்வுகள் பிரித்து பாதுகாக்கிறது. இந்த மிளகில் தேநீர் வைத்து குடிப்பதன் மூலம்,அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில்
குறைக்கசிறப்பாக செயல்படுகிறது.
இஞ்சி ஒவ்வாமையை எதிர்ப்பது மட்டுமில்லாமல், நுரையீரலில் இருந்து மாசூட்டிகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது. மேலும் இது நெரிசலை நீக்குதல், காற்றோட்டத்தை சரிசெய்தல் மற்றும் நுரையீரலில் சுழற்சியை போன்றவற்றின் மூலம், நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
ஆளி விதைகள் கதிர்வீச்சுக்கு முன்பு நுரையீரல் பாதுகாப்பதுடன், அதனால் ஏற்படும் சேதத்தையும் பெருமளவில் குறைக்கிறது.
பூண்டு ப்ளேவேனாய்டுகளை மட்டுப்படுத்துவதால், க்ளூடாதியோன் உற்பத்தியை ஊக்குவித்து, டாக்சின் மற்றும் கார்சினோயீன் குறைவதை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.
உடல் செயல்பாடுகளை சிறப்பாக செயல்பட வைக்க தண்ணீர் தான் சிறந்த வழி. காய்ந்த நுரையீரல் எரிச்சல் மற்றும் அதிக அழற்சிக்கு வழிவகுக்கும். எனவே தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.
மஞ்சளில் அழற்சியை எதிர்க்கக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலுள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபடவும், ஆசுதுமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.