நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழ் மொழி மூல வரலாற்று பாட புத்தகங்களில் பல்வேறு பிழைகள், திரிபுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் பேராசிரியர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக இதற்கு முன்னரும் நாடாளுமன்றின் கவனத்திற்கு நான் கொண்டுவந்துள்ளேன். அதன்போது, இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை” எனத் தெரிவித்தார்.