01.01.2019-ஆரஞ்சு பழம் பலவித மருத்துவ பயனும், உடல்நலப்பயனும் கொண்டது.சிலருக்கு குளிருக்கு முகம் வறண்டு காணப்படும். இதற்கு ஆரஞ்சு பழத்தின் தோல் மிகவும் உதவி புரிகின்றது.இதனை பயன்படுத்தினால் முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.தற்போது ஆரஞ்சு பழத்தின் தோலினை வைத்து முகத்தினை எப்படி அழகுப்படுத்துவது என்பதை பார்ப்போம்.
இதற்கு தேவையானவை
தேன் 1 தேகக்கரண்டி
தயிர் 3 தேகக்கரண்டி
ஓட்சு தேகக்கரண்டி 1 தேகக்கரண்டி
ஆரஞ்சு தோல் பொடி 2 தேகக்கரண்டி
செய்முறை
முதலில் ஆரஞ்சு தோலை காய வைத்து அரிந்து கொள்ளவும்.
பிறகு ஓட்சையும் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையுடன் தேன், தயிர் முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும்.
20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கும்.