இந்த மிதக்கும் அணுசக்தி நிலையம் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தபோது., உலகத்தின் முதலாவது கப்பல் போன்ற மிதக்கக்கூடிய அனுசக்தி நிலையத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.
இதன் மூலம் 10 விழுக்காடு அளவிலுள்ள திறன் அடிப்படையில் அணுஉலை தொடங்கப்பட்டு பின்னர் இரசியாவின் பெவெக் நகருக்கு., இலையுதிர் காலம் தொடங்குவதற்குள் உற்பத்தியை தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும் இதன் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் கிராமங்களுக்கும் மின்விநியோகம் எளிதில் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும்., இந்த அணுமின் நிலையத்தின் மூலம் இரசியாவின் ஆர்டிக் பகுதிகள் மட்டுமல்லாமல்., உலகம் முழுவதும் சிறிய அளவிற்கு தேவைப்படும் மின்சார விநியோகத்திற்கு இதனை உபயோகம் செய்துகொள்ளலாம். அந்த வகையில்., அணுசக்தி தொழில்நுட்பத்தில் இரசியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.