குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

யாழ்ப்பாணக்கோட்டலில் நடந்த திருவிளையாடல்

12.012.2018-அது யாழ்ப்பாண நகரச் சுற்றாடலில் உள்ள கோட்டல்களில் ஒன்று. எனது நண்பர் ஒருவர் மங்கல நிகழ்வு ஒன்றை இரவு உணவுடன் ஏற்பாடு செய்தார்.நிகழ்வு முடிய கோட்டல் உரிமையாளரிடம் சாப்பாடு ,ஏனைய உபசரிப்புச் செலவுக் கணக்கு முடிக்கப் போனார்.

உங்களது நிகழ்வில் 450 பேர் உணவருந்தி உள்ளனர் என பில்லைக் கொடுத்தார்.

நண்பர் சொன்னார் , இல்லையே 300 பேரளவில் தானே வந்தனர். இப்படி பில் வராதே . உங்களது கதிரைகளை நிகழ்வு ஆரம்பிக்க முன்னரேயே குறுக்கு நெடுக்காக நான் எண்ணி இருந்தேன்.

300 பேரளவில் தான் இருக்க வசதி உள்ளதாக கதிரைகள் போடப்பட்டிருந்ததைக் கண்டேன் என்றார்.

கோட்டல் முதலாளி சொன்னார் ” இல்லையில்லை ஆள்கள் வந்து வந்து போனார்கள். அது உங்களுக்குத் தெரியவில்லை.

450 பேரென்ற எங்களது கணக்குச் சரி என்றார்.

எனது நண்பரும் விடாப் பிடியாகச் சொன்னார் ” எனது அழைப்பில் ஆள்கள் பெரும்பாலானோர் வந்ததை உறுதி செய்த பின்பு தான் இரவு உணவு கொடுக்க ஆரம்பித்தோம்.

அதனால் உங்களது கணக்குப் பிழை என்றார்.

சரி உங்களது மண்டபத்தில் சிசிரிவி கமெரா உள்ளது. அதிலொன்று சாப்பாட்டுப் பிளேற் எடுக்கும் பக்கத்தில் உள்ளது. அதில் பார்ப்போம்.

எத்தனை பேர் எடுக்கின்றனரென . உங்களது கணக்குச் சரியாக இருந்தால் காசு உடன் தருகிறேன்.

நண்பரும் விடாப்பிடியாக நின்றார். கோட்டல் முதலாளியும் வேண்டா வெறுப்பாக உடன்பட்டு சிசிரிவி கமெராவின் பதிவுகளை பார்க்க உடன்பட்டார்.

நண்பர் ஒரு கொப்பியிலும், முதலாளி ஒரு கொப்பியிலுமாக அந்தக் கமெராப் பதிவை மீள விட்டு சாப்பாட்டுப் பிளேற் எடுப்பதை எண்ணத் தொடங்கினார்கள்.

இருவரும் ஏக காலத்தில் அருகருகே இருந்து கொப்பியில் குறித்து எண்ணத் தொடங்கினார்கள்.

எண்ணி முடிய அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆள்களின் மொத்த எண்ணிக்கை 295 பேராகியது.

கோட்டல் முதலாளி கப்சிப். நிகழ்வை ஒழுங்கு செய்த நண்பர் 295 பேருக்கு உரிய காசைக் கொடுத்தார்.

அவர் துணிந்து இப்படிக் கேட்காமல் முகத்துக்கு அஞ்சி ……………………………. நடந்திருந்தால் மேலதிகமாகக் கொடுத்த 150 பேருக்கான 150 000 காசுக்கு என்ன கதி.

சேமிப்புக்கும் சிக்கனத்துக்கும் பேர் போன நாம் ஊதாரிகளாக மாறியதன் விளைவு தான் இப்படியான நாகரீகச் சுரண்டல்களுக்குக் காரணம்.

ஆவரங்கால் சிவசக்தி மண்டபம் உழைக்கும் காசில் தனது அறக் கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகளைச் செய்து வருகிறது.

அது போலவே நாச்சிமார் கோயிலடி ராயா கிறீம் கவுசு முதலாளியும் மண்டப வாடகையின்றி புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இடம் வழங்கி உதவுகின்றார்.

இப்படி ஆங்காங்கே சில தர்மவான்கள் உள்ளனர்.

சாப்பாடு,சோடாப் போத்தல் , தண்ணீர்ப் போத்தல் கணக்குகளில் கணக்கு விட்டு உழைப்போரும் ஆங்காங்கே இருக்கின்றனர் தான்.

எம்மில் பலருக்கு வெளிநாட்டுக் காசு தானே கேட்ட உடன் விசுக்கி எறிந்தால் சரி.

பனியைத் திண்டு உழைக்கும் காசைப் பணியப் போட்டால் சரி.

அது பொறின் கறன்சி அல்ல ( Foreign currency ) அல்ல பிளட் கறன்சி

( Blood currency ). அவர்களது இரத்தம் தான் காசாக வருவது இங்குள்ள பலருக்குத் தெரியாது.

எம்மவர் சிசிரிவி கமெரா உள்ள மணடபத்துக்குத் தான் காசு தருவோமென அடம் பிடித்து,கமெராவில் பார்த்துத் தான் காசு தருவோம். கமெரா இல்லாத மண்டபங்களை நிராகரித்தால் சுரண்டலைத் தடுக்கலாம்..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.