481. |
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
482. |
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. |
483. |
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின். |
484. |
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். |
485. |
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். |
486. |
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. |
487. |
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
488. |
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. |
489. |
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். |
490. |
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. |