471. |
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். |
472. |
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். |
473. |
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். |
474. |
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். |
475. |
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். |
476. |
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். |
477. |
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. |
478. |
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. |
479. |
அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். |
480. |
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். |