குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இயற்கை விஞ்ஞானம்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த

தொழில்ம் நுட்பமும் இல்லாமல்

கிணறு வெட்டுனாங்க??? . . .

 

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான

காரியமில்லை . பலர்

சேர்ந்து உழைத்து உருவாக்கிட

வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்

தண்ணீர் வராமல் போய்விட்டால்

அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்

கோடையில் கிணற்றில் நீர்

வறண்டு போகும் வாய்ப்பும்

உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்

எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட

ஏதாவது ஒரு பகுதியில்

அதிகளவு பச்சை பசேலென புற்கள்

வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்

கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்

நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல

நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட

வேண்டிய நிலத்தில் முதல் நாள்

இரவு தூவி விடவேண்டும். அடுத்த

நாள் கவனித்தால் எறும்புகள்

இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்

கொண்டுசென்று சேர்த்த

அடையாளங்கள் , அதாவது தடயங்கள்

இருக்குமாம் அந்த இடத்தில்

கிணறு வெட்டினால் தூய

சிறப்பான நன்னீர் கிடைக்கும்

என்கிறார்கள் .

சரி தூய நீரும்

கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்

வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்

இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்

பகுதியை நான்கு பக்கமும்

அடைத்து விட்டு பால் சுரக்கும்

பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய

விட வேண்டும். பின்னர் அந்த

பசுக்களை கவனித்தால் மேய்ந்த

பின் குளிர்ச்சியான இடத்தில்

படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்

இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்

கவனித்தால் அவை ஒரே இடத்தில்

தொடர்ந்து படுக்குமாம் . அந்த

இடத்தில் தோண்டினால் வற்றாத

நீரூற்றுக் கிடைக்குமாம்.