குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர்

10.09.2017- 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்த முதல் யப்பான் வீரர் என்ற பெருமையை கிர்யு என்ற வீரர் பெற்றுள்ளார்.100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து யப்பான் வீரர் சாதனை

யப்பான், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யிம்னாசுடிக், டேபிள் டென்னிஸ், யிடோ போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தடகளத்தில் அதிக அளவில் சாதித்தது கிடையாது.

ஆனால், யப்பான் வீரர் ஒருவர் முதன்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார். டோயோ பல்கலைக்கழக மாணவரான யோஷிஹை (21 வயது) ரியோவில் நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றவர்.

இவர் இன்று யப்பானில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டார். அப்போது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.98 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளார். ஜப்பான் வீரர் ஒருவர் 10 வினாடிக்குள் இலக்கை எட்டியது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் கோயி இடோ என்பவர் கடந்த 1998-ம் ஆண்டு 10 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 2007-ம் ஆண்டு வரை இதுதான் ஆசிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.