411. |
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. |
412. |
செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். |
413. |
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. |
414. |
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |
415. |
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். |
416. |
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
417. |
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். |
418. |
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. |
419. |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. |
420. |
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். |