சின்ன ஆசை ...
காற்றுள்ள இடமெல்லாம் - என்
கால்கள் ஓடித்திரியனும்
வேற்றுக்கிரக வாசிபோல - பூமியை
வேடிக்கைபார்த்து அலையனும்
பூமிபந்து முழுவதிலும் - என்
பூப்பாதம் பதியனும்
சாமிவந்த மனிதன்போல் - நான்
சந்தோசத்தில் குலையனும்
என்வியர்வைத் துளிபட்டு - உலகம்
இலவம்பஞ்சாய் நனையனும்
விண்ணிலிருந்து பூமிகண்டால் - பூமி
என்பாதமாய் தெரியனும்
ஒட்டுமொத்த கடலிலும் - என்
உள்ளங்கால்கள் நனையனும்
கட்டுக்கட்டாய் சம்பாதித்தது - பூமியை
வட்டமிட்டே அழியனும்
இயற்கையோடு வாழ்ந்தேயென் - அழகு
இப்பிறப்பை முடியனும்
இயந்திரமாய் வாழ்வோரெல்லாம் - என்னை
ஆச்சரியமாவே அறியனும்
என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
கவிஞர் செந்தமிழ்தாசன்
இடம் : தொல்காப்பிய பூங்கா
ராய அண்ணாமலைபுரம்
சென்னை