1321. |
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு. |
1322. |
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். |
1323. |
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. |
1324. |
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. |
1325. |
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. |
1326. |
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. |
1327. |
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். |
1328. |
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. |
1329. |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. |
1330. |
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். |