குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசில் நிகழ்ந்த மோசமான தொடருந்து விபத்து: உயிர் தப்பிய 160 பயணிகள்

23.03.2017-சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.இத்தாலியில் உள்ள மிலான் நகரில் இருந்து Eurocity என்ற தொடருந்து 160 பயணிகளுடன் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டுள்ளது.

சுவிசில் உள்ள பேசல் நகருக்கு 2.45 மணியளவில் வந்தடைய நேரம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய சுவிசில் உள்ள லூசேர்ன் நகருக்கு வந்தபோது சுமார் 2 மணியளவில் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மிதமான வேகத்தில் வந்த தொடருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

தொடருந்துடன் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. எனினும், பயணிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

7 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இவ்வழியாக வந்த இரண்டு பயணியகள் தொடருந்து உடனடியாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

தொடருந்து எதனால் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சில மணி நேர பரிசோதனைகளுக்கு பின்னர், தொடருந்துசேவை முழுமையாக சீரடைந்தது. சுவிசில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது தொடர்பாக தொடருந்து துறை அதிகாரிகள் மற்றும் கா.து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.