குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்

28.02.2017-சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்ற செங்கோட்டையன் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கும் சிறை அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க செங்கோட்டையன் உட்பட 3 அமைச்சர்கள் சென்று சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளனர். சசிகலாவை நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளரும், அவரது அக்கா மகனுமான டி.டி.வி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது -இதன்பிறகுதான், பெங்களூர் சிறையிலிருந்து, சென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரும் கோரிக்கையை சிறை அதிகாரியிடம் சசிகலா முன் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவர் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்த சென்றனர். மதியம் 3 மணிக்கு அவர்கள் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டும், சிறை அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. தண்டனை கைதியை வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறை காரணமாக அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.