குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

.வீ. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கஇருக்கிறார்.

19.02.2017-கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து க் கூறியுள்ளனர். அப்படி வாழ்த்துச் சொல்வதுதான் நாக ரிகம் என்றும் சொல்லப்படுகிறது. நான் கொஞ்சம் நாக ரிகம் குறைந்தவனாகவே இருந்துவிட்டுப் போகி றேன். என்னால் வாழ்த்த இயலவில்லை என்பதோடு இதனைக் கண்டிக்கின்றவனாகவும் நான் இருக்கி ன்றேன். "பொறுக்கி சாமி" என்றே அழைப்போம். பொறுக்கி

நான் மிகவும் மதிக்கின்ற தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் கருத்திலிருந்தும் மாறுபட்டவனாகவே நான் இருக்கின்றேன். VIDEO : Tamil Nadu Assembly drama : MK Stalin evicted, shows torn shirt, Watch Video Tamil Nadu Assembly drama : MK Stalin evicted, shows torn shirt, Watch VideoNews Powered by Popular Videos 01:39 எம்.எல்.ஏ விஜயபாஸ்கர்க்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு-வீடியோ 02:30 சயனைடு மல்லிகாவை பார்த்து அலறிய சசிகலா-வீடியோ 02:09 பெங்களூரு சிறையில் சசிகலாவின் முதல் நாள்-வீடியோ எல்லாம் சட்டப்ப்படிதானே நடந்திருக்கிறது என்கின்றனர். ஆம், அதில் எந்தக் குறையும் இல்லை. ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட மக்களைச் சந்தித்து வாக்குகளை இன்றுவரை பெறாத ஒருவர், நேரடியாக நாட்டின் முதலமைச்சராக ஆகி விடுவதற்குச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இது அறம் சார்ந்த அரசியல்தானா என்பது மட்டுமே என் கேள்வி. மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்த வேண்டாமா என்றுதான் உரத்துக் கேட்கிறேன். உடனே, 1967இல் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத அண்ணா, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லையா என்று கேட்கின்றனர். அண்ணா இறந்து 48 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்படி ஓர் அவமானம் நிகழக் கூடாது. யாரை யாரோடு ஒப்பிடுவது? அண்ணா கண்ட களங்கள் எத்தனை,கலந்துகொண்ட கூட்டங்கள் எத்தனை, சென்ற சிறைகள் எத்தனை? இந்த அம்மையார் ஒரு பொது நிகழ்வில் கலந்திருக்கிறாரா? கட்சி நடவடிக்கை ஏதேனும் ஒன்றில் பங்கெடுத்துள்ளாரா? கட்சிக்காகச் சிறை சென்றுள்ளாரா? ஒருமுறையாவது, ஒரு சிறிய தேர்தலிலாவது மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கோரியிருக்கிறாரா? ஒரே ஒரு முறையேனும் தேர்தலைச் சந்தித்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று, அதன்பின் இந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கலாகாதா? அந்த நாகரிகத்தைப் பற்றி எதுவும் பேசாதவர்கள், நம் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது. அவர் மீதான வழக்கு என்ன ஆகும், மறுபடியும் பன்னீர்செல்வம்தானா என்று சிலர் எழுதுகின்றனர். அது குறித்தெல்லாம் நமக்கு எந்தக் கவலையும் இல்லை. அது அவருடைய சிக்கல். எதிரியைக் களத்தில் சந்திப்பதே வீரம். அதற்கு அணியமாவதே அரசியல். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ள நம் நாட்டில், சசிகலா போட்டியிட இருக்கும் இந்தத் தேர்தலில் மட்டும் என்ன அதிசயம் நேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கின்றனர். குறித்துக் கொள்ளுங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த அதிசயம் உறுதியாய் நிகழும். நிகழ்த்திக் காட்டுவார்கள் நம் மக்கள்!

இனி நாகரிகம் பயன்படாது! சுபவீ ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) விளையாட்டுக்கு அனுமதி வேண்டி, மதுரை, அவனியாபுரத்தில், திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் பலர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்திருக்கிறது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. சனநாயக உரிமைக்கு எதிரானது. அதற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். VIDEO : Prof Subavee condemned Subramanya Swamy-Oneindia Tamil Prof Subavee condemned Subramanya Swamy-Oneindia TamilNews Powered by Popular Videos 01:36 தமிழக மக்களுக்கு கமல் அறிவுரை-வீடியோ 02:37 கவர்னர்-சுடாலின் சந்திப்பு-வீடியோ 01:42 சித்தார்த், தமிழக அரசியலை சாடியுள்ளார்-வீடியோ இச்செயலை, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி சுடாசுலின், பா.ம.க. நிறுவனர் ராமதாசு மற்றும் பல்வேறு கட்சியினர் கண்டித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சாமி, 14.01.2017 அன்று இரவு 10 மணிக்குத் தன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ள பதிவு, நாகரிகமற்ற, கயமைத்தனமான ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அப்பதிவு இதுதான்:- "Today, the TN govt has thrashed all porukkis who tried flouting SC stay order on Jallikkattu. Are OPS and VKS also not Tamil anymorre. Ha!ha!" (உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீற முயன்ற அனைத்துப் பொறுக்கிகளையும், இன்று தமிழக அரசு அடித்து நொறுக்கியுள்ளது. ஓ. பன்னீர் செல்வம், வி.கே.சசிகலா ஆகியோரும் கூட இனிமேல் தமிழர்கள் இல்லையா. காகா!) உரிமைகளுக்குப் போராடிய இளைஞர்களைப் "பொறுக்கிகள்" என்கிறார் சு.சாமி. எவ்வளவு திமிர்! பா.ய.க. அந்த ஆளை, 'டாக்டர் சாமி' என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது. மானமுள்ள தமிழர்கள் சு.சாமியையும், பா.ய.க.வையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், நாகரிகம் இனிமேல் பயன்படாது என்று தெரிந்துவிட்டதால், நாமும் சற்று நம் கண்ணியமான போக்கை விட்டுக் கீழிறங்கித்தான் வர வேண்டியுள்ளது. பா.ய.க. அவரை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். நாம் அனைவரும் இனி அவரை, அவருக்குப் பிடித்த சொல்லால் "பொறுக்கி சாமி" என்றே அழைப்போம். பொறுக்கி சாமி பொறுக்கி சாமி பொறுக்கி சாமி!

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.