17.02.2017-கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களை சமாதானப்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதிமுக இரண்டாக உடைந்து விட்டது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும், பொருளாதார குற்றவாளி சசிகலா மற்றும் ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவரான டிடிவி
தினகரன் தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த அணிகளில் யார் ஆட்சியைக் கைப்பற்றப் போவது என்ற மோதலில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வென்று ஆட்சியமைத்துள்ளார். ஆனால் பெரும்பான்மை பலத்தை நாளை அவர் நிரூபிப்பாரா என்ற பெரும் குழப்பம் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டுள்ளது. VIDEO : Breaking News : முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிராக நாளை சட்டமன்றத்தில் வாக்களிப்பேன் - அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.நடராஜ்.