குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

எம்.யி.ஆர்.–யெ.,க்கு பிறகு பன்னீருக்கே மவுசு: உளவுத்துறை அறிக்கையால் சசி அதிர்ச்சி!!சசிகலாவை நெரு

13.02.2017-ங்கிவரும் ஆபத்துக்கள்? உற்சாகத்தில் பன்னீர்! ஓபிஎசுசிற்கு முதல்வர் நாற்காலி?தமிழகத்தை கலக்கும் அரசியல் பரபரப்பும் சலசலப்பும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பது உறுதி.

2017அ.தி.மு.க.,வில், எம்.யி.ஆர்., யெயலலிதா வுக்கு அடுத்து, மக்கள் அதிகம் நேசிக்கும் தலை வராக, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்’ என்ற, உளவுத்துறையின் அறிக்கை, சசிகலா மற்றும் அவரது உறவுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியால், அ.தி.மு.க.,வில், திடீரென பொதுச்செயலரான, சசிகலாவின் முதல்வர் பதவி கனவு கேள்விக் குறியாகி உள்ளது. அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள்,

பன்னீர்செல்வம் பக்கம் ஓடாமல் இருக்க, அவர்களை சொகுசு விடுதியில், சசிகலா தரப்பினர் அடைத்துவைத்துள்ளனர்.

இந்நிலையில், ‘பன்னீர்செல்வம், சசிகலா இருவரில், யார் முதல்வராக வர வேண்டும்’ என, உளவுத்துறையினர், அ.தி.மு.க.,வினரிடம், ரகசிய சர்வே நடத்தியுள்ளனர். இதில், ’98 சதவீதம் பேர், முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வராக நீடிக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளனர்.

மேலும், சசிகலா பதவியேற்றால், கிராமங்கள் தோறும், போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் தயாராகி வருவதும் தெரிய வந்துள்ளது.

எம்.யி.ஆர்., -யெயலலிதாவுக்கு அடுத்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொண்டர்கள், மக்கள் அதிகம் நேசிப்பதும், உளவுத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை, சசிகலா

சசிகலாவை நெருங்கிவரும் ஆபத்துக்கள்? உற்சாகத்தில் பன்னீர்! ஓபிஎசுசிற்கு முதல்வர் நாற்காலி?

தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது முழு இந்தியாவின் பார்வை. தமிழகத் தமிழர்கள் மாத்திரமல்ல, உலகத் தமிழர்களும் இன்றைய அரசியல் களத்தை வேடிக்கையோடு, விரக்தியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசத்தின் அடையாளமாக, பணிவின் இலக்கணமாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தமிழகத்திற்கு தன் தலைவியால் முதலமைச்சராகுமாறு பணித்த உத்தரவை சிரம் ஏற்றவர். மீண்டும் தன் தலைவி மீண்டு வர அவருக்கு வழிவிட்டவர்.

இன்று தன் தலைவியின் கட்சிப்பொறுப்பை, ஆட்சிப்பொறுப்பை அவர் வழி ஏற்பேன் என்கிறார் பன்னீர்.

அவருக்கு இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆரம்பமே நாளை வெளிவரும் சொத்துக் குவிப்பு வழக்கிற்கான முடிவுதான்.

முன்னாள் முதலமைச்சர் யெயலலிதா மற்றும் அவரின் தோழியான சசிகலா மீது சுமத்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வெளிவரும் வழக்கின் முடிவுகள் கட்டாயம் சசிகலாவிற்கு பாதகமானது தான் என்று உறுதிபடக்கூறுகிறார்கள் சட்டவல்லுநர்கள்.

இதன் காரணமாகவே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதத்தைக் காட்டுகின்றார் என்று விளக்கமளிக்கும் விமர்சகர்கள், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு இருக்கும் சசிகலா ஆட்சியமைப்பதில் தடையில்லை.

ஆனால் அவருக்கு எதிரான வழக்கின் முடிவிற்காக காத்திருக்கிறார்கள் என்கிற வாதமும் ஏற்புடையதாக கருதப்படுகிறது.

எனினும் இந்த தாமதம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஓ. பன்னீர்செல்வம் பக்கம் இழுப்பதற்கான கால அவகாசம் என்றும் பன்னீரை ஆட்சியில் அமர்த்துவதற்கான முடிவில் மத்திய அரசாங்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கான ஆதரவோ இன்றைய தினம் பன்மடங்காக அதிகரித்து விட்டது. இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒருவர் அதிகாரத்திற்கு வருவதற்கான எதிர்ப்பை இவ்வளவிற்கு சந்திக்கிறார் என்றால் அது சசிகலா தான்.

இதனால் பன்னீருக்கான முதலமைச்சர் நாற்காலி இன்றளவோடு உறுதியாகி விட்டது. சசிகலாவின் எதிர்கால தீர்ப்பின் இறுதியான முடிவு நாளை?

தமிழகத்தை கலக்கும் அரசியல் பரபரப்பும் சலசலப்பும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பது உறுதி.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராயகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு செய்தி சேகரிக்க வரும் ஊடகத்தினர் மீதும் இரண்டு நாட்களாகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக கண்காணிப்பதற்காக வெளியூர்களிலிருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கும் ரவுடிகள் நேற்று (பிப்ரவரி-11) செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய படங்களும் காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் ஊடகத்தினருக்கு அ.தி.மு.க தரப்பினர் இப்படி கொலை மிரட்டல் விடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந் நிலையில், இன்று திருமதி.சசிகலா நடராயன் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை சந்திக்கச் சென்றபோது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகத்தினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. பெண் செய்தியாளர்களும் இழிவு படுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.(சசிகலா) தரப்பினரின் இந்த அராயகத்தைக் கண்டித்து ஊடகத்தினர் மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்களுக்கான பாதையை மறித்து அடாவடி செய்த அதே கும்பல்தான் இப்போது கூவத்தூரில் பொதுமக்களையும் ஊடகத்தினரையும் கல்வீசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கிறது.

தமிழகத்தில் காபந்து அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க (சசிகலா) தரப்பின் அடாவடிகளை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? சட்டம் ஒழுங்கு குறித்து டி.யி.பி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகும் இத்தகைய வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என்ற கேள்விகள் எழுகின்றன.

அரசும் சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டு கிடக்கும் நிலையில், ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) தரப்பைச் சார்ந்த ரவுடிகள் நடத்திய கொடூர கொலைவெறித் தாக்குதலை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் மீதும் அவர்களை ஏவியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.