குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா...500 போர்க்கப்பல்கள் தயார் நிலை?

08.02.2017-அமெரிக்காவுடனான போருக்கு 500க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை தயார் செய்யும் நிலையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் 45 வது சனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் சீனா மீது போர் தொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் சீனா அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு தேவையான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை விரைவில் காணமுடியும் என்றும் அதில் விமான தாங்கி கப்பல்கள், நீர்முழ்கிகப்பல்கள் மற்றும் போருக்கு தேவையான அணுசக்தி கப்பல்கள் போன்றவைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சீனாவில் வலுவான பொருளாதாரம் உள்ளது, அதனால் பணவிவகாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதால் ஒரு திறன் மிக்க ஆயுதப்படையை தயார் செய்வதில் சீனா உறுதியாக உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் புது வகையான இராணுவப்படைகளை சீனா தயாராக்கி உள்ளதாம்.

அதுமட்டுமின்றி வரும் 2050 ஆண்டிற்குள் பசிபிக் பகுதிகள் முழுவதையும் சீனா தன் காட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முழுநடவடிக்கைகளை எடுத்து வருவகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால் இந்த விவாகரத்தில் டிரம்பிற்கு ஒரு விதம் அச்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.