1301. |
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. |
1302. |
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். |
1303. |
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். |
1304. |
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. |
1305. |
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. |
1306. |
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. |
1307. |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. |
1308. |
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. |
1309. |
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. |
1310. |
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. |